search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மு அபிராமி"

    • படத்தை அறன் எழுதி, இயக்க, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார்.
    • டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு.

    இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனரும், பல விருதுகளை வென்ற குறும்படங்களை இயக்கியவருமான அறன் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்குகிறார். கே.பிரதீப் உடன் சேர்ந்து இப்படத்தை தயாரிப்பதுடன் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் அறன். ஜிகிரி தோஸ்த் என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை எஸ்.பி.அர்ஜூன் மற்றும் ஹக்கா ஜெ இணைந்து தயாரித்துள்ளனர்.

    அறன் மட்டுமின்றி பிக் பாஸ்-இல் புகழ் பெற்ற ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.ஜே.ஆஷிக், பவித்ர லக்ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதா, லேட் ஆர்.என்.ஆர். மனோகர், சரத், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

    படத்தை அறன் எழுதி, இயக்க, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அருள் மொழி வர்மன், ஒளிப்பதிவு ஆர்.வி. சரண், சண்டை பயிற்சி மகேஷ் மேத்யூ, நடனம் தினா, ஆடியோகிராஃபி பணிகளை சரவண குமார், டி.ஐ. மற்றும் சி.ஜி. பணிகளை ஏ.கே. பிரசாத் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தின் பாடல்களை சுதன் பாலா எழுதியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

    • ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வான் மூன்று’.
    • இப்படம் வருகிற 11-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வான் மூன்று'. சினிமாகாரன் வினோத்குமார் சென்னியப்பன் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதில், அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், லீலா தாம்சன், டெல்லி கணேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஃபீல் குட் லவ் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.


    இதில், இயக்குனர் முருகேஷ் பேசியதாவது, "வான் என்பதற்கு தமிழில் நிறைய அர்த்தங்கள் உள்ளது. இதில் சிலரின் வாழ்க்கையையும் அவர்களின் காதலையும் பற்றி சொல்வதற்காகவே 'வான் மூன்று' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தோம். அனைத்து வயதினரையும் கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக நிறைய மாற்றங்கள் இந்த கதையில் செய்தோம். பல நடிகர்களிடம் பேசிதான் இறுதியாக இந்த கதைக்குள் அபிராமி, ஆதித்யா எல்லோரும் வந்தார்கள். ஆனால், சித்ரா கேரக்டருக்கு லீலா மேம் தவிர்த்து, வேறு யாரையும் யோசித்து பார்க்க முடியவில்லை. இவர்தான் வேண்டும் என்று ஒரு மாதம் ஃபாலோ செய்து ஒத்து கொள்ள வைத்தேன். இது என்னுடைய முதல் படம் என்பதால், மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை என்று ஒரு ஃபீல் குட் படமாக உருவாக்கினேன்" என்று பேசினார்.


    நடிகை லீலா தாம்சன் பேசியதாவது, "இயக்குனர் இந்த கதை சொன்னபோது எனக்கு முதலில் புரியவில்லை. நேரில் சந்தித்து கதை சொன்ன போதுதான் நான் ஒத்துக்கொண்டேன். இந்தப் படத்தில் புதியவர்கள் போலவே அனுபவம் வாய்ந்தவர்களும் வேலை பார்த்திருக்கிறார்கள். அவர்களுடனும் டெல்லி கணேஷ் சாருடனும் இணைந்து பணிபுரிந்ததில் மகிழ்ச்சி" என்றார்.


    நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசியதாவது, "இந்த கதை கேட்டபோது நான் எதிர்பார்த்தபடி, என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. அதுவும் இல்லாமல் இந்த அணியினர் மிகவும் திறமையானவர்கள் என்பது எனக்கு முன்பே தெரியும். அதனால் தைரியமாக ஒத்துக்கொண்டேன்" என்றார்.

    • அறிமுக இயக்குனர் பி.சதீஸ் குமரன் இயக்கத்தில் அம்மு அபிராமி புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்திற்கு “பெண்டுலம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

    அறிமுக இயக்குனர் பி.சதீஸ் குமரன் இயக்கத்தில் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும் படம் "பெண்டுலம்". சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தை சூர்யா இந்திரஜித் ஃபிலிம்ஸ் சார்பில் திரவியம் பாலா தயாரிக்கிறார்.

    இப்படத்தில் ஸ்ரீபதி, ஸ்ரீகுமார், டி.எஸ்.கே., விஜித், எப்ஐஆர் ராம், ஸ்ரீராம், ஜூனியர் எம்ஜிஆர், பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 20 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய பி.சதீஸ் குமரன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்குனர் ஷங்கரின் "ஐ" படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.

     

    பெண்டுலம்

    பெண்டுலம்

    இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தலக்கோணம், ஆந்திரா கர்னூல் மாவட்டம் மற்றும் கோவா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திரைபிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது.

    • பரதன் இயக்கத்தில் வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அம்மு அபிராமி.
    • இவர், நடித்த ‘ராட்சசன்’, ‘அசுரன்’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த 'ராட்சசன்', 'அசுரன்' போன்ற படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டார். அதன்பின் என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, துப்பாக்கி முனை உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது 6 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

     

    அம்மு அபிராமி

    அம்மு அபிராமி

    இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அம்மு அபிராமியிடம் உங்களுக்கு திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அம்மு அபிராமி கூறும்போது, "எனது திருமணம் குறித்து நிறைய கேள்விகள் வந்துள்ளன. எனக்கு 22 வயதுதான் ஆகிறது. திருமணம் செய்து கொள்வதை விட எனது வாழ்க்கையில் நிறைவேற்ற பல கனவுகள் உள்ளன. திருமணத்துக்கு இது சரியான நேரம் என்று நினைக்கும்போது திருமணம் செய்து கொள்வேன்" என்றார்.

    • இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்டரி' படத்தில் அம்மு அபிராமி நடித்துள்ளார்.
    • இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் பேசியது வைரலாகிறது.

    இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அம்மு அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த 'ராட்சசன்', 'அசுரன்' போன்ற படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டார். ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'யானை' படத்தில் அம்மு அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களையும் பெற்றார்.

    அம்மு அபிராமி

    அம்மு அபிராமி

    இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்டரி' படத்தில் தற்போது அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக செங்குட்டுவன் நடித்துள்ளார். இவர்களுடன் தீபக் செட்டி, எம்.எஸ்.பாஸ்கர், யோக் ஜபீ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரித்துள்ளது.

    அம்மு அபிராமி

    அம்மு அபிராமி

    பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார். விழாவில் பேசிய வெற்றிமாறன், இப்படம் ஆரம்பித்ததில் இருந்து மணிபாரதியை தெரியும். இப்படத்தை முடித்து விட்டு படம் பார்க்க சொன்னார். அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் கேட்டபோதே இப்படத்தை பார்த்திருந்தால் அவர் கூறியதுபோல இப்படம் வெளியாவதற்கு உதவி புரிந்திருப்பேன். ஆனால், இப்போது பிவிஆர் இதனை வெளியிடுகிறார்கள். நான் வெளியிடுவதைவிட இப்படம் இப்போது பெரிய வெளியீடாக தான் இருக்கும். அது இப்படத்திற்கு நல்லது என்று தான் நினைக்கிறேன். இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள்.


    வெற்றிமாறன்

    வெற்றிமாறன்

    டிரைலரைப் பார்க்கும் போது ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரைலர் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. இப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். இயக்குனர் மணிபாரதிக்கு சிறப்பான வாழ்த்துகள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.



    • பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவங்கள் முதன் முதலாக தமிழில் படமாக்கப்படுகின்றன.
    • இந்த படத்தை உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார்.


    அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிகர் பாலமுருகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "குதூகலம்". இப்படத்தில் கதாநாயகியாக அம்மு அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் கவிதாபாரதி, புகழ், பியான், சஞ்சீவி, அனிஸ், மன்மோகித், பிரேமி, தயாரிப்பாளர் எம்.சுகின்பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    திருப்பூர் பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாக்கப்படும் இப்படத்தை ரெட் & கேட் பிக்சர்ஸ் சார்பில் எம்.சுகின்பாபு முதல் படைப்பாக தயாரிக்கிறார். இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன்.


    பாலமுருகன்

    இவர், சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கிசட்டை', 'எதிர்நீச்சல்' படங்களில் துணை இயக்குனராகவும் தனுஷ் நடித்த 'கொடி', 'பட்டாசு' போன்ற படங்களில் இணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

    "குதூகலம்" படத்திற்கு பியான் சர்ராவ் இசையமைத்துள்ளார். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருப்பூரில் படமாக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    • பரதன் இயக்கத்தில் வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அம்மு அபிராமி.
    • இவர், நடித்த ‘ராட்சசன்’, ‘அசுரன்’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த 'ராட்சசன்', 'அசுரன்' போன்ற படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டார்.

    இதையடுத்து, இவர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'யானை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியான நிலையில் அம்மு அபிராமி மாலை மலருக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.


    ×