search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2022"

    பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 19வது ஓவரை வீசிய ராஜஸ்தானின் பிரசித் கிருஷ்ணா தினேஷ் கார்த்திக், ஹசரங்கா ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார்.
    அகமதாபாத்:

    15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டி அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.

    தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் டூ பிளசிஸ் 25 ரன்னும், மேக்ஸ்வெல் 24 ரன்னிலும், லாம்ரோர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  

    ஒருபுறம் விக்கெட் விக்கெட் வீழ்ந்தாலும் கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து, 58 ரன்னில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 7 ரன்னில் அவுட்டானார்.

    ராஜஸ்தான் சார்பில் மெக்காய், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
    இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்- டு பெலிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
    அகமதாத்த்: 

    15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தை எட்டி இருக்கிறது. இத்தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் ராஜஸ்தானை தோற்கடித்து குஜராத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுதல் சுற்றில் லக்னோவை பெங்க ளூரு அணி தோற்கடித்தது.

    இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டி இன்று இரவு அகமதாபாத்தில் நடக்கிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்- டுபெலிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் 2-வது இடத்தை பிடித்ததால் இறுதிப் போட்டிக்கான முதல் சுற்றில் தோற்றாலும், இன்னொரு வாய்ப்பாக 2-வது தகுதிச்சுற்றில் விளையாடுகிறது. இதனை பயன்படுத்தி அந்த அணி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

    ராஜஸ்தான் அணியில் ஜோஸ்பட்லர், தேவ்தத் படிக்கல், சாம்சன், ஹெட்மயர் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர். பந்துவீச்சில் சாகல், அஸ்வின், போல்ட், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.

    பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. அந்த அணி பேட்டிங்கில் விராட்கோலி, ரஜத் படிதார், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் ஹேசல்வுட், ஹசரங்கா, ஹர்சல் பட்டேல் ஆகியோர் உள்ளனர்.

    வெளியேற்றுதல் சுற்று போட்டியில் ரஜத் படிதார் சதம் அடித்தார். இதன் மூலம் பெங்களூரு அணி பேட்டிங் வரிசை பலம் பெற்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு நுழையும் முனைப்பில் பெங்களூரு உள்ளது. அந்த அணி இதுவரை 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் கோப்பையை வெல்லவில்லை.

    இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
    நாங்கள் அடுத்த சீசனில் இன்னும் வலுவாக திரும்பி வருவோம் என்று லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களுரூவிடம் தோற்று வெளியேறியது. இதையடுத்து லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் கூறியதாவது:-

    லக்னோ அணிக்கு இந்த தொடர் சிறப்பாக அமைந்தது. ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் அடுத்த சீசனில் இன்னும் வலுவாக திரும்பி வருவோம் என்று தெரிவித்தார்.

    பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக ஆடி 54 பந்தில் 112 ரன்னும், தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 37 ரன் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மனன் வோரா 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கேப்டன் கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு தீபா ஹூடா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஹூடா 45 ரன்னில் வெளியேறினார். ஸ்டோய்னிஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். தனி ஆளாகப் போராடிய ராகுல் 79 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்த தோல்வியின் மூலம் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய லக்னோ அணி 4வது இடத்தை தக்கவைத்தது.

    பெங்களூரு அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட், சிராஜ், ஹசரங்கா, ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
    லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து அசத்தியது.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. 
    இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில், இந்திய அணியில் அறிமுகம் ஆகாமல் ஐபிஎல் பிளே ஆப் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரஜத் படிதார் படைத்துள்ளார்.
    கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ, டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 4 அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    ‘பிளே ஆப்’ சுற்று நேற்று தொடங்கியது. கொல்கத்தாவில் நடந்த ‘குவாலிபையர்-1’ஆட்டத்தில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    தோல்வி அடைந்த ராஜஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. அந்த அணி வருகிற 27-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் ‘குவாலி பையர்-2’ ஆட்டத்தில் விளையாடுகிறது.

    ராஜஸ்தானுடன் மோதப்போவது லக்னோவா, பெங்களூரா என்பது இன்று இரவு தெரியும்.

    கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ, டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் மோதும் தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

    லக்னோ அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டன் டிகாக், தீபக் ஹூடா, ஸ்டோனிஸ், மோஷின்கான், அவேஷ்கான், பிஷ்னோய் போன்ற சிறந்த வீரர்களும், பெங்களூரு அணியில் கேப்டன் டுபெலிசிஸ், மேக்ஸ்வெல், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹசில்வுட், முகமது சிராஜ் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    இரு அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
    நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த குவாலிபையர்-1 ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது. இதனால் குஜராத் அணிக்கு 189 ரன் இலக்காக இருந்தது.

    ஜோஸ்பட்லர் 56 பந்தில் 89 ரன்னும் ( 12 பவுண்டரி , 2 சிக்சர் ) , கேப்டன் சஞ்சு சாம்சன் 26 பந்தில் 47 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர் ) எடுத்தனர். முகமது ஷமி , தயாள், சாய் கிஷோர் ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    டேவிட் மில்லர் 38 பந்தில் 68 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) , கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 27 பந்தில் 40 ரன்னும் ( 5 பவுண்டரி ) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 21 பந்தில் 35 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), மேத்யூ வேட் 30 பந்தில் 35 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர். டிரெண்ட் போல்ட், மெக்காய் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    புதுமுக அணியான குஜராத் தனது முதல் சீசனிலேயே இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதித்தது.

    குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமான டேவிட் மில்லரை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் வெவ்வேறு மாதிரியானவர்கள். நான் அவர்களை மதிக்கிறேன்.

    ரஷீத்கான் பந்து வீச்சு நன்றாக இருந்தது. மீண்டும் அவருக்கு பந்து வீச்சில் நல்ல நாளாக அமைந்தது. இந்த தொடர் முழுவதும் அவர் கிரிக்கெட் பயணம் அற்புதமாக இருந்தது.

    இந்த போட்டித் தொடரில் டேவிட் மில்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

    நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன்.

    நான் எனது வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை சமநிலைப்படுத்த தொடங்கி விட்டேன். கடந்த 2 ஆண்டுகளாக இது ஒரு நிலையான முயற்சியாகும். என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்ற குடும்பம் உதவியது.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

    தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    முதலில் ஆடி 188 ரன் குவித்தது மகிழ்ச்சியை அளித்தது. இது நல்ல ஸ்கோர்தான் என்று கருதினோம். ஆனால் ஈடன் கார்டன் மைதானத்தில் 2-வது பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது.

    இந்தப் போட்டி தொடரில் அதிர்ஷ்டம் (டாஸ்) முக்கிய பங்கு வகிக்கிறது. சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. அடுத்தப் போட்டியில்நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், இடக்கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜூன் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். இரண்டாவது ஆண்டாக அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

    இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஐபிஎல்லில் அர்ஜூன் ஆட்டத்தைப் பார்க்க ஆர்வமுடன் இருந்தீர்களா? என சச்சினிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சச்சின் பதிலளித்து கூறியதாவது:

    இது வித்தியாசமான ஒரு கேள்வி. நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. இந்த சீசனில் மும்பை அணிக்குரிய லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டது. அர்ஜூனுடன் என்னுடைய உரையாடல் எப்போதும் இப்படித் தான் இருக்கும்.

    உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதை சவாலானது. மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. உனக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு இருந்ததால் கிரிக்கெட் விளையாட தொடங்கினாய். அந்த ஆர்வம் இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் வரை நீ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும் என சொல்வேன்.

    ஆடும் லெவனில் அவரை சேர்ப்பது அணி நிர்வாகத்தின் முடிவு. அணித்தேர்வில் நான் ஒரு போதும் தலையிடுவது கிடையாது என தெரிவித்தார். 
    நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 2 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்களை குவித்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 47 ரன்கள் எடுத்தார்.    

    குஜராத் சார்பில் ஷமி, யாஷ் தயாள், சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா 2வது பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து ஷுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் பொறுபுடன் ஆடினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. ஷுப்மான் கில் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் வேட் 35 ரன்னில் வெளியேறினார்.

    தொடர்ந்து இறங்கிய கேப்டன் பாண்ட்யா நிதானமாக ஆடினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த டேவிட் மில்லர் அரை சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், குஜராத் அணி 3 விக்கெட்டை இழந்து வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பாண்ட்யா 40 ரன்னுடனும், மில்லர் 68 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளனர்.
    189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகின்றன.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சன்று இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

    கொல்கத்தா எடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.

    இதனால், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பில் 188 ரன்கள் சேர்த்தது.

    அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 56 பந்துகளில் இரண்டு 6, 12 பவுண்டரிகளில் 89 ரன்களை குவித்தார். தொடர்ந்து, சாம்சன் 47 ரன்கள், படிக்கல் 28 ரன்கள், ஹட்மயர் மற்றும் ரியான் பராங் தலா 4 ரன்கள், ஜெய்ஸ்வால் 2 ரன்கள், அஷ்வின் 2 ரன்களை சேர்த்தனர்.    

    குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ஷாமி, யாஷ் தயால், சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகின்றன.

    இதையும் படியுங்கள்.. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் இவர்தான்- வீரேந்திர சேவாக் கருத்து
    எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
    கொல்கத்தா:

    24-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “பிளேஆப்” சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது.

    கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் நேற்று முன்தினத்தோடு ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்தன. 10 அணிகள் பங்கேற்ற இந்த ஐ.பி.எல்.லில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 5 முதல் 10 இடங்களை பிடித்து வெளியேறின.

    பிளேஆப் சுற்றின் ‘குவாலிலையர் 1’ ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தல் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாஞ்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறுவது குஜராத்தா? ராஜஸ்தானா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தோற்கும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் விளையாடும்.

    லக்னோ-பெங்களூர் இடையே நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தல் வெற்றி பெறும் அணி குவாலிபையர்-2 போட்டியில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    இறுதிப் போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய குவாலிபையர் 1 ஆட்டம் பரபரப்பாகவும், விறு விறுப்பாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டங்கள் அனைத்தும் மும்பை மற்றும் புனேயில் நடந்தது. பிளே ஆப் சுற்றில் குவாலிபையர் 1, எலிமினினேட்டர் ஆட்டங்கள் கொல்கத்தாவிலும், குவாலிபையர் 2, இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடக்கிறது.

    இந்த நிலையில் எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    குஜராத் அணிக்காக நான் விளையாடுகிறேன். எனவே எனது சொந்த மைதானம் அகமதாபாத் மொதேரா ஸ்டேடியம் ஆகும்.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக நான் நீண்ட காலம் ஆடவில்லை. இதனால் ஈடன் கார்ன் எனது சொந்த மைதானம் அல்ல. எந்த மைதானத்திலும் குஜராத் அணி சிறப்பாக விளையாடும்.

    இந்திய அணிக்கான தேர்வு குறித்து நான் நினைக்கவில்லை. என்னை பொறுத்தவரை பேட்டிங்கில் கவனம் செலுத்துவதாகும். ஒவ்வொரு ஆட்டத்திலும் ரன்களை குவிக்க வேண்டும். முதல் 6 ஓரில் அதிரடியாக ஆடுவதுதான் முக்கியமானது.

    இவ்வாறு விர்த்திமான் சஹா கூறியுள்ளார்.

    சஹா இந்த ஐ.பி.எல். சீசனில் 9 ஆட்டத்தில் 3 அரை சதத்துடன் 312 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    குவாலிபையர் 1 ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடின. நேற்றுடன லீக் ஆட்டங்கள் முடிந்தன. ஒவ்வொரு அணியும் 14 போட்டியில் விளையாடின.

    புதுமுகமான குஜராத் டைட்டன்ஸ் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ், மற்றொரு புதுமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தலா 18 புள்ளிகளும் (9 வெற்றி, 5 தோல்வி) பெற்று முறையே 2-வது , 3-வது இடங்களை பிடித்தன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 16 புள்ளிகளுடன் (8 வெற்றி, 6 தோல்வி) 4-வது இடத்தை பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 5-வது இடத்தையும் (7வெற்றி, 7 தோல்வி), பஞ்சாப் கிங்ஸ் 6-வது இடத்தையும் (7 வெற்றி 7 தோல்வி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7-வது இடத்தையும் (6 வெற்றி, 8 தோல்வி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8-வது இடத்தையும் (6 வெற்றி, 8 தோல்வி) பிடித்தன.

    சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் 4 வெற்றி, 10 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று முறையே 9-வது, 10-வது இடங்களில் உள்ளன.

    இன்று ஓய்வு நாளாகும். ‘பிளேஆப் சுற்று நாளை (24- ந் தேதி) தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி லக்னோ-பெங்களூரு மோதும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் ‘குவாலிபையர் 2’ போட்டியில் மோதும்.

    எலிமினேட்டர் 25- ந் தேதி கொல்கத்தாவில் நடைபெறும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். ‘குவாலிபையர் 2’ ஆட்டம் 27-ந் தேதியும், இறுதிப்போட்டி 29-ந் தேதியும் அகமதாபாத்தில் நடக்கிறது.

    நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல்அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைவது குஜராத்தா? ராஜஸ்தானா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    குஜராத் அணி ‘லீக் முடிவில் முதல் இடத்தை பிடித்தது. அந்த அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (413 ரன்), சுப்மன்கல் (403 ரன்), மில்லர் (381 ரன்), விர்த்திமான் சஹா, ராகுல்திவேதியா, ரஷித்கான், முகமது ஷமி (தலா 18 விக்கெட்), போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ரஷித்கான் ‘ஆல்ரவுண்டு’ பணியில் நல்ல நிலையில்இருக்கிறார்.

    ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் பட்லர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் 3 சதம், 3 அரை சதத்துடன் 629 ரன்கள் குவித்து இந்த சீசனில் முதல் இடத்தில் உள்ளார். கேப்டன் சஞ்சு சாம்சன் (374 ரன்), படிக்கல்(337 ரன்), ஹெட்மயர் (297 ரன்), ரியான் பராக் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

    பந்து வீச்சில் யசுவேந்திர சாஹல் 26 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கிறார். பிரசித் கிருஷ்ணா (15 விக்கெட்), போல்ட் (13 விக்கெட்) போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர். அஸ்வின் ஆல்ரவுண்டு பணியில் ஜொலித்து வருகிறார்.

    இந்த சீசனில் இரு அணிகளும் ஒரே ஒரு முறை மோதின. இதில் ராஜஸ்தானை 37 ரன்னில் குஜராத் வீழ்த்தி இருந்தது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×