search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஹர்த்திக் பாண்ட்யா
    X
    ஹர்த்திக் பாண்ட்யா

    அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது சிறப்பு வாய்ந்தது- ஹர்த்திக் பாண்ட்யா

    போட்டிகளில் நாங்கள் தவற விட்ட விஷயங்கள் என்ன, எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பதை பற்றி எப்போதும் பேசினோம் என ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
    கோப்பையை வென்றது குறித்து குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    ஒரு அணியாக விளையாடினால் அற்புதங்களை செய்ய முடியும் என்பதற்கு இந்த அணியே சரியான உதாரணம்.

    நானும், பயிற்சியாளர் ஆசிஷ் நெக்ராவும் சிந்தனையில் ஒரே மாதிரியானவர்கள். போட்டிகளை வெல்லக் கூடிய சரியான பந்து வீச்சாளர்களை விளையாட வைக்க விரும்பினோம். 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக இருக்கலாம்.

    ஆனால் பந்து வீச்சாளர்கள் உங்களை வெற்றி பெற வைப்பார்கள். வீரர்களுக்கு அணி ஊழியர்கள் வழங்கிய ஆதரவு அற்புதமானது. போட்டிகளில் நாங்கள் தவற விட்ட விஷயங்கள் என்ன, எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பதை பற்றி எப்போதும் பேசினோம்.

    5 இறுதிப்போட்டிகளில் (மும்பை அணியில் விளையாடிய போது) வெற்றி பெற்றதால் நான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன்.

    குஜராத் அணி அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    ஏனென்றால் நாங்கள் ஒரு பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளோம். வரும் தலைமுறையினர் இதை பற்றி பேசுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×