என் மலர்
விளையாட்டு

ஹிங்கோலியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்- 5 பேர் கைது
- செல்போன் மூலமாக சூதாட்டம் நடத்தி வந்ததாக தெரியவந்தது.
- கைதான 4 பேரின் வங்கிக்கணக்கை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஹிங்கோலி:
ஹிங்கோலி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நடந்து வருவதாக ஜல்னா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் முஸ்தகீம் சேக் என்பவர் செல்போன் மூலமாக சூதாட்டம் நடத்தி வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 4 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 53 ஆயிரம் ரொக்கம் உள்பட பல பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கைதான 4 பேரின் வங்கிக்கணக்கை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Next Story






