என் மலர்
நீங்கள் தேடியது "பெங்களூரு அணி"
- பெண்கள் ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வென்று உள்ளது.
- பெங்களூரு அணி ஒரு வெற்றியை பெற்றால் அதன் பின் பல வெற்றிகள் வந்து கொண்டே இருக்கும் என்றார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் கோப்பையை பெங்களூரு அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பெண்கள் ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வென்று உள்ளது. தற்போது ஆண்கள் அணி போட்டியில் களம் இறங்க போகிறது. இந்த ஆண்டு தடைகளை உடைத்து ஆண்கள் அணி கோப்பையை வெல்லும் என்ற நம்புகிறேன். இதற்கு பொறுமையாக இருக்க வேண்டும்.
பெங்களூரு அணி ஒரு வெற்றியை பெற்றால் அதன் பின் பல வெற்றிகள் வந்து கொண்டே இருக்கும் என்றார்.
- ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கோப்பைகள் வென்றுள்ளன.
- வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் வீரர்களும் போட்டியில் பங்கேற்க ஆவலாக உள்ளனர். மேலும் வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கோப்பைகள் வென்றுள்ளன. நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்த போதிலும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.
இந்நிலையில், விநாயகர் சிலையின் பாதத்தில் 'ஈ சாலா கப் நமதே (இந்த ஆண்டு கோப்பை நமதே) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2025' என்று எழுதப்பட்ட காகிதத்தை ரசிகர் ஒருவர் வைத்து வழிபாடு செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஒன்பது முறை பிளேஆஃப் சென்று மூன்று இறுதிப் போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
href="https://t.co/ijDurBE8cE">pic.twitter.com/ijDurBE8cE
— Kevin(@imkevin149) September 15, 2024
- பெங்களூரு அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
- குஜராத் அணி 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளி கள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
3-வது மகளிர் பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
12-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு-குஜராத் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது.
குஜராத் அணி 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பெங்களூருவுக்கு பதிலடி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையுடன் உள்ளது.
முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன. உ.பி.வாரியர்ஸ் 4 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.
- பெங்களூரு எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.
- பெங்களூரு அணி முதல் முறையாக துரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
கொல்கத்தா:
131-வது துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் பெங்களூரு எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக துரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
பெங்களூரு அணி சார்பில் சிவசக்தி (10வது நிமிடம்), பிரேசில் வீரர் ஆலன் கோஸ்டா (61வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மும்பை அணிக்காக அபுயா (30-வது நிமிடம்) மட்டுமே ஒரு கோல் அடிக்க சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி துரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.






