search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RR captain"

    ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இல்லாததால் தான் தோல்வி ஏற்பட்டதாக சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என ராஜஸ்தான் கேப்டன் ரஹானே கூறியுள்ளார். #IPL2018 #RajasthanRoyals #Rahane
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தாவில் நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் கொல்கத்தா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. இதில் கொல்கத்தா அணி நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 50 ரன்களும், கேப்டன் ரஹானே 46 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா மைதானத்தில் ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.

    தோல்வியின் மூலம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ராஜஸ்தான் கேப்டன் ரஹானே நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து அணிக்கு திரும்பிவிட்டனர்) ஆகியோர் இல்லாததால் தான் தோல்வி ஏற்பட்டதாக சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். தோல்விக்கு எந்த சாக்குபோக்கும் சொல்ல விரும்பவில்லை. பட்லர், ஸ்டோக்ஸ் ஆகியோர் முக்கியமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் தான். ஆனால் அவர்கள் இல்லாமலேயே கடைசி லீக்கில் பெங்களூரு அணியை தோற்கடித்ததை மறந்து விடக்கூடாது.

    இந்த இலக்கை எட்டிவிடலாம் என்று உறுதியாக நம்பினேன். ஆனால் இறுதி கட்ட ஓவர்களில் எங்களால் பெரிய ஷாட்டுகளோ, சிக்சர்களோ அடிக்க முடியாமல் போய் விட்டது. எல்லா பெருமையும் கொல்கத்தா பந்து வீச்சாளர்களையே சாரும். துரதிர்ஷ்டவசமாக 17-வது ஓவரில் சாம்சன் அவுட் ஆனதும் நெருக்கடி அதிகமாகி விட்டது. இது போன்ற ஆட்டங்களில் டாப்-4 வீரர்களில் ஒருவர் கடைசி வரை நிலைத்து நின்று ஆடுவது அவசியம். இந்த தொடரை பொறுத்தவரை எங்களது பேட்டிங் அவ்வப்போது நன்றாக இருந்ததே தவிர, சீராக இல்லை.

    இவ்வாறு ரஹானே கூறினார்.  #IPL2018 #RajasthanRoyals #Rahane
    ×