search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England vs India"

    டிரென்ட் பிரிட்ஜ்-யில் நாளை நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நாளை தொடங்குகிறது. இதில் ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோரில் இருவருக்குதான் இடம் என்பதால் யார் யார் ஆடம் லெவன் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

    பெரும்பாலான முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் மூன்று பேருடன் களம் இறங்க வேண்டும் என்ற வலியுறுத்தினார்கள். இந்நிலையில் நாளைய டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறும் 11 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



    இதில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அறிமுகமாகி ஆட்ட நாயகன் விருது பெற்ற சாம் குர்ரான் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நாளை இந்தியாவிற்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. போப், 5. ஜோஸ் பட்லர், 6. பேர் ஸ்டோவ், 7. பென் ஸ்டோக்ஸ், 8. கிறிஸ் வோக்ஸ், 9 அடில் ரஷித், 10. ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. ஸ்டூவர்ட் பிராட்.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் குறித்து இங்கிலாந்து முன்னாள் தொடக்க வீரர் ஜெப்ரி பாய்காட் கடுமையாக விமர்சித்து உள்ளார். #ENGvIND #GeoffreyBoycott
    ஜெப்ரி பாய்காட் இது தொடர்பாக டெய்லி டெலி கிராப் பத்திரிகையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய வீரர்கள் இதுவரை தங்களையும், தங்களது ஆதரவாளர்களையும் தலைகுனிய வைத்துள்ளனர். பேட்டிங் பொறுப்பற்றதாக இருந்தது. அறியாமை தனத்துடன் விளையாடினர். இந்திய அணியின் பேட்டிங் முட்டாள் தனமாக இருந்தது.

    ‘அவுட் சுவிங்கர்’ வீசினால் யோசனை இல்லாமல் பேட்டை கொண்டு செல்வதா? முரளிவிஜய் ஆடிய விதம் மிகவும் மோசமான செயலாகும். இங்கிலாந்து ஆடுகளம், தட்பவெப்பநிலை ஆகியவற்றை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக கணிக்க தெரியவில்லை.


    இந்திய வீரர்கள் சரியான முறையில் வலை பயிற்சி மேற்கொள்ளவில்லை. இங்கிலாந்தில் வித்தியாசமாக எப்படி ஆடப்போகிறோம் என்பதை தங்களது மூளைக்குள் ஏற்றிக் கொள்ளவில்லை.

    இந்திய ஆடுகளங்களில் பேட்டிங் செய்ததே பழக்கப்பட்டவர்கள். இந்தியாவில் உள்ள ‘பிட்ச்’கள் மட்டையானது. வறண்டது. பந்துகள் எழும்பாது. அங்கு புதிய பந்துகள் ஒன்றுமே ஆகாது. இதனால் எளிதாக ரன்களை குவித்தார்கள்.

    பந்தின் பளபளப்பு விரைவில் தேய்ந்துவிடும். அங்கு பேட்ஸ்மேன்கள் தான் அரசர். நேரடியாக எந்த ஷாட்களையும் ஆட முடியும்.

    இந்திய அணி இங்கிலாந்துக்கு அலட்சியத்துடனும், தலைக்கணத்துடனும் வந்தது. எங்கு வேண்டுமானாலும் தங்கள் இஷ்டப்படி பேட்டிங் செய்ய முடியும் என்ற நினைப்பில் இருந்தனர். டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளவில்லை.

    பெரும்பாலான அணிகள் உள்நாட்டில் வென்று வெளியே போய் தோற்பதால் முட்டாள் தனமாக பொருத்தமின்மையாக மாறி வருகிறது. பெரிய அணிகள் சிறந்த வீரர்கள் எல்லா விதமான ஆடுகளத்திலும் விளையாடுவது தங்களை சோதித்துக் கொள்வதற்காகவே.

    இவ்வாறு பாய்காட் கூறியுள்ளார்.  #ENGvIND #GeoffreyBoycott
    இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவியதால் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை நீக்கிவிட்டு டிராவிட்டை நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #ENGvIND
    புதுடெல்லி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. எந்தவித போராட்டமும் இல்லாமல் இந்திய வீரர்கள் ‘சரண்டர்’ ஆனதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.

    முன்னாள் வீரர்கள் இந்திய அணி மீது கடுமையாக பாய்ந்தனர். இதேபோல ரசிகர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    மோசமான தோல்வி தொடர்பாக கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரிடம் விளக்கம் கேட்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.


    இங்கிலாந்து புறப்பட்டு செல்லும் முன்பு ரவிசாஸ்திரியும், கோலியும் “எந்த களத்தையும், எந்த அணியையும் சந்திப்போம். தயக்கம் இல்லை” என்று தெரிவித்து இருந்தனர்.

    தற்போது ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக விராட் கோலி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். “தங்கள் மீதான நம்பிக்கையை ரசிகர்கள் இழக்க வேண்டாம். நாங்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

    ஆனால் இதுவரை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எந்தவிதமான விளக்கம் அளிக்கவில்லை.

    இதற்கு இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அணியின் ஒட்டு மொத்த தோல்விக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பொறுப்பேற்று காரணத்தை தெரிவிக்க வேண்டும். முன்பு வார்த்தைகளை கொட்டினீர்கள். இப்போது வாய்திறங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல டுவிட்டரில் ரசிகர்கள் தங்கள் ஆதரங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும். அவர் இடத்தில் ராகுல் டிராவிட்டை நியமிக்கலாம் என்று வலியுறுத்தி உள்ளனர்.


    துருவ் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும். அவர் இடத்தில் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம். உடற்தகுதியை வைத்து போட்டிகளில் வெற்றி பெற இயலாது. அதிகமான பயிற்சி ஆட்டம் அல்லது கவுண்டி போட்டியில் விளையாட வேண்டும். தவான், முரளி விஜய் ஆகியோருக்கு பதிலாக ரி‌ஷப்பண்ட், ஷிரேயாஸ் அய்யர், கருண்நாயரை அணிக்கு கொண்டு வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அமித் என்பவர் கூறும்போது, எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிக்கு ராகுல் டிராவிட்டை கிரிக்கெட் வாரியம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    அனுராக் என்ற ரசிகர், “இந்திய அணியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க ரவிசாஸ்திரிக்கு தெரியவில்லை. இதனால் டிராவிட்டை பயிற்சியாளராக நியமியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

    மற்றொரு ரசிகர், “ரவிசாஸ்திரி பயிற்சியாளராக இருப்பது அணிக்கு பேரழிவு. இதனால் அவரை நீக்கிவிட்டு டிராவிட்டை நியமிக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்க வேண்டும்” என்றார்.

    ருத்ரகேஷ் என்பவர் கூறுகையில், “ரவிசாஸ்திரியையும், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணையும் நீக்க இதுவே சரியான நேரம். டிராவிட்டை பேட்டிங் பயிற்சியளாராகவும், ஜாகீர்கானை பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இதேபோல ரவிசாஸ்திரிக்கு எதிராக ஏராளமான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  #ENGvIND #RahulDravid #RaviShastri #HeadCoach #TeamIndia #BCCI
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நாங்கள் போராடி தோற்றது பெருமை அளிப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #ENGvIND #ViratKohli
    பர்மிங்காம்:

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த தோல்வி குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    இந்த டெஸ்ட் மிகவும் சிறப்பானது. இந்த போட்டியில் நாங்கள் பலமுறை திறமையை வெளிப்படுத்தினோம். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் எங்களைவிட சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி ஆடி இருக்கலாம்.

    இந்த டெஸ்டில் நாங்கள் போராடி தோற்றது பெருமை அளிக்கிறது. இந்த போராட்டம் பிடித்து இருக்கிறது. நாங்கள் இந்த டெஸ்டில் சாதகமான அம்சங்களை எடுத்துக்கொள்வோம்.

    மிகப்பெரிய தொடரில் இதுபோன்ற தொடக்கம் பெருமையானது. பின்வரிசையில் விளையாடும் வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

    இந்த தோல்வி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி லண்டனில் தொடங்குகிறது. #ENGvIND #ViratKohli
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர்கள் சிலிப் பகுதியில் கேட்ச்சுகளை தவறவிட்டனர். இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியதாவது:- #ENGvIND
    சிலிப் பகுதி என்பது முக்கியமான இடமாகும். அங்கு நிற்கும் வீரர்களை பயிற்சியின்போது கண்டறிய வேண்டும். நீண்ட நேரம் பயிற்சி செய்து 50 முதல் 60 கேட்ச் வரை பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

    அதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை கண்டறிந்து சிலிப் பகுதியில் நிறுத்த வேண்டும். அந்த பகுதியில் நிற்கும் வீரர்கள் தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு வைத்திருக்க வேண்டும். சில சமயம் பந்து மிகவும் தாழ்ந்து வரும் அதுபோன்ற நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். பந்து தலைக்குமேல் செல்லும் போது பாய்ந்து பிடிக்க வேண்டும். இதற்கு நன்கு பயிற்சி செய்ய வேண்டும்.

    அதேபோல் சுழற்பந்து வீச்சின்போது சிலிப் பகுதியில் நிற்கும் வீரர் பந்தை கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும்.


    3-வது வீரராக களம் இறங்கும் புஜாரா இங்கிலாந்துக்கு முன்பாகவே வந்து கவுன்டி போட்டியில் விளையாடினார். ஆனால் அதில் ரன்களை குவிக்கவில்லை. வெளிநாட்டில் விளையாட புஜாரா திணறி வருகிறார். ஆனால் லோகேஷ் ராகுல் வெளிநாட்டு மைதானத்தில் சிறப்பாக விளையாடுகிறார்.

    லோகேஷ் ராகுல் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால் அணியில் நீண்ட காலம் விளையாடுவார். அணியில் நிரந்திரமாக இடம் பெற அவருக்கு அருமையான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. #ENGvIND #1000thTest #Azharuddin
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து, 71 ரன்னுக்குள் ஏழு விக்கெட்டை இழந்தது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து ஜோ ரூட், ஜென்னிங்ஸ், பேர்ஸ்டோவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 80 ரன்னில் ஆட்டமிழந்ததும் 71 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து 287 ரன்னில் சுருண்டது.

    இங்கிலாந்து அணி தற்போதுதான் இப்படி மிடில் ஆர்டர் சொதப்பலால் ரன்குவிக்க முடியாமல் திணறவில்லை. சமீப காலமாக இந்த அணிக்கு மிடில் ஆர்டர் பிரச்சனை இருந்து வருகிறது.

    பாகிஸ்தானுக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்டில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 184 ரன்னில் சுருண்டதது. கடைசி 6 விக்கெட்டுக்களை 35 ரன்னுக்குள் இழந்தது.

    நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 58 ரன்னில் சுருண்டது.

    ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆஷஸ் தொடர் முழுவதும் இந்த சொதப்பல் நிகழ்ந்தது. சிட்னியில் 3 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 118 ரன்னுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. பெர்த்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 35 ரன்னுக்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.



    அடிலெய்டு டெஸ்டில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 64 ரன்னுக்குள் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. பிரிஸ்பேனில் 4 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 56 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 0-4 என தோல்வியடைய மிடில் ஆர்டர் வரிசையே முக்கிய காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் அணியில் அடில் ரஷித் இடம் பிடித்ததற்கு வாகன் கடும் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு ரஷித் கடும் காட்டமாக பதிலளித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற புதன்கிழமை (ஆகஸ்ட்-1) தொடங்குகிறது. இதற்கு முன் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்து வீசிய அடில் ரஷித்துக்கு, இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைத்துள்ளது.

    ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் அடில் ரஷித் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. அத்துடன் கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாடுவதில்லை என்று முடிவு செய்தார்.

    நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடாத அடில் ரஷித்தை இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்த்து இருப்பதற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘டெஸ்ட் அணிக்கு அடில் ரஷித்தை தேர்வு செய்து இருப்பது கேலிக்குரியதாகும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மைக்கேல் வாகனின் விமர்சனத்துக்கு அடில் ரஷித் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அடில் ரஷித் அளித்த பேட்டியில், ‘மைக்கேல் வாகனின் விமர்சனம் முட்டாள்தனமானது. இதுபோல் மைக்கேல் வாகன் நிறைய பேசி வருகிறார். தன்னுடைய கருத்தை மக்கள் கவனிக்கிறார்கள் என்று நினைத்து அவர் செயல்பட்டு வருகிறார்.



    அவருடைய கருத்தை மக்கள் யாரும் ஆர்வமாக பார்ப்பதில்லை. அவர் எனக்கு எதிராக திட்டம் போட்டு செயல்படுகிறார் என்று நான் நினைக்கவில்லை. நான் அவரது தலைமையின் கீழ் விளையாடி இருக்கிறேன். ஆனால் சில சமயங்களில் முன்னாள் வீரர்கள் இன்னாள் வீரர்கள் பற்றி அர்த்தமற்ற கருத்துகளை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    களத்தில் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். அணிக்காக 100 சதவீத அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். நன்றாக சென்றால் மகிழ்ச்சி. நன்றாக செல்லாவிட்டாலும் மகிழ்ச்சியே’’ என்று தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் குல்தீப் யாதவுக்கு பதிலாக அஸ்வினை பயன்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார். #ENGvIND #Ashwin #MikeHussey
    சென்னை:

    இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய குல்திப் யாதவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இங்கிலாந்து ஆடுகளங்கள் இருக்கும். இதனால் ஆடும் லெவனில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம் பெறுவார் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அஸ்வினை பயன்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.


    அணியில் தனது இடத்தை தக்க வைக்க அஸ்வினுக்கு தகுதி இருக்கிறது. அவர் புத்திசாலித்தனமாக டெஸ்ட் பவுலர்.

    ஆஸ்திரேலிய ஆப்-ஸ்பின்னர் நாதன் லயன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடது கை பேட்ஸ்மேனும் சிறப்பாக பந்து வீசினர். இதனால் அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக முக்கிய பங்கு வகிப்பார். அவரை பயன்படுத்த வேண்டும்.

    குல்தீப் யாதவ் இளம் வீரர் அவரது வழியில் அவரை கற்றுக்கொள்ள விட வேண்டும். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் தனது பணியை சிறப்பாக செய்வார் என்று உறுதியாக கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #Ashwin #MikeHussey
    இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார். #ENGvIND #TeamIndia #ZaheerKhan
    மும்பை:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றின.

    இந்தியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்தியா எசக்ஸ் அணியுடன் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது.

    இந்த நிலையில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பதால் டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


    இந்தியாவின் பவுலிங் வரிசை மிகவும் பலமாக இருக்கிறது. உமேஷ் யாதவ் நன்றாக வீசுகிறார். இஷாந்த் சர்மா, சீனியர் வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமியும் நல்ல சாதனையில் இருப்பார்கள். புவனேஷ்வர் குமாரும், பும்ராவும் முதல் டெஸ்டில் ஆடாவிட்டாலும் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு நன்றாகவே இருக்கிறது.

    5 டெஸ்ட் தொடர் என்பதால் நீண்ட நாட்கள் நடைபெறும். அனைத்து பவுலர்களும் தொடர்ந்து உடல் தகுதியுடன் இருப்பது அவசியம். இந்த டெஸ்ட்டில் தொடர்ந்து இந்திய அணி சிறப்பாக ஆடும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது‌ ஷமி, பும்ரா, ‌ஷர்துல் தாகூர் ஆகிய 5 வேகப்பந்து வீரர்கள் உள்ளனர். இதில் பும்ரா உடல் தகுதியுடன் இல்லை. இஷாந்த், உமேஷ், முகமது ‌ஷமி ஆகிய 3 பேர், 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விக்கெட் கீப்பர் ரி‌ஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் வலியுறுத்தி உள்ளார். #ENGvIND #TeamIndia #ZaheerKhan
    உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. #HWC2018
    உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள போட்டியை நடத்தும் இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதின.

    முதல் 15 நிமிடத்தில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி நேரத்தில் ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் இந்தியா முதல் கோல் அடித்தது. நேகா கோயல் கோல் அடிக்க இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.



    54-வது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் அடித்தது. இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. அதன்பின் கடைசி 7 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. இந்தியா அடுத்த போட்டியில் வருகிற 26-ந்தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த நிலையில், அணி தேர்வில் முன்னேற்றம் தேவை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #ENGvIND #ViratKohli
    லீப்ஸ்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 256 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 44.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று இருந்தன.

    தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-


    நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. 25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இங்கிலாந்து, பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் அருமையாக செயல்பட்டது. அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள்.

    இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக முழு திறமையை வெளிப்படுத்திருக்க வேண்டும். ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. இங்கு இதுபோன்ற ஆடுகளத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை.

    அணியில் சில மாற்றங்களை செய்தோம். தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். ஆனால் அந்த உத்வேகத்தை அவரால் தக்க வைத்து கொள்ள முடியவில்லை.

    புவனேஸ்வர்குமார் அனுபவம் வாய்ந்தவர். ஆனால் சிறப்பாக செயல்படாவிட்டால் மாற்றங்கள் செய்வது தேவையற்றது போன்று தோன்றும்.

    எங்கள் அணிக்கு முன்னேற்றம் தேவையாக உள்ளது. ஒவ்வொரு அணி தேர்வும் பலம் வாய்ந்ததாக தெரிகிறது. ஆனால் இந்த தோல்வி நாங்கள் இன்னும் உழைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது.

    எங்களுக்கு 15 ஆட்டங்கள் உள்ளன. இதில் பலம் வாய்ந்த ஆடும் லெவன் அணியை கண்டறிய வேண்டும். உலக கோப்பை தொடருக்கு முன்பாக சரியான அணியை தேர்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்து இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்குகிறது. #ENGvIND #ViratKohli #TeamIndia
    தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பான முறையில் பந்து வீச்சை தொடங்கியுள்ளார். #ENGvIND #Anderson
    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 35 வயதாகும் இவர் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் தொடரின்போது இவருக்கு தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.

    ஓய்விற்குப்பின் நேற்று மீண்டும் களம் இறங்கினார். நாட்டிங்காம்ஷைர் அணிக்கெதிரான ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். ஒருவேளை ஆண்டர்சன் பந்து வீச்சில் திருப்தியில்லை என்றால் அடுத்த வாரம் யார்க்‌ஷைர் அணிக்கு எதிராக விளையாட வாய்ப்புள்ளது.



    அதேபோல் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் 22-ந்தேதி தொடங்கும் போட்டியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது.
    ×