என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammad Kaif"

    • என்னை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே. அணிக்கு சரியான தேர்வாக இருப்பார்.
    • அணியின் நலனுக்காக ஜடேஜாவை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை நிச்சயம் தோனி செய்வார்.

    மும்பை:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை பரிமாற்றம் முறையில் எடுக்க சென்னை சூப்பா கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதற்கு ஈடாக ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் நிர்வாகம் கேட்டுள்ளதாக தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்சின் முக்கியமான வீரர்களில் ஒருவரான ஜடேஜா 2012-ம் ஆண்டு முதல் அந்த அணிக்காக ஆடுகிறார். கடந்த சீசனில் ரூ.18 ேகாடிக்கு தக்கவைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் அணியின் நலனுக்காக ஜடேஜாவை விட்டுக்கொடுக்க தோனி துணிந்து விடுவார் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக முகமது கைப் கூறியதாவது:-

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கிய 2008-ம் ஆண்டில் இருந்தே தோனியும், ஜடேஜாவும் விளையாடி வருகிறார்கள். இதில் தோனி சென்னை அணியை விட்டு ஒரு போதும் வெளியேறியதில்லை. சாம்சன், ஜடேஜா வர்த்தக பரிமாற்றம் வெற்றிகரமாக நடந்தால் இதுவே தோனியின் கடைசி ஐ.பி.எல். சீசனாக இருக்கும். சாம்சன் சி.எஸ்.கே.-வில் இணைந்து தோனி மற்றும் அணி நிர்வாகத்துடனும் எளிதில் பழகி விட்டால் ஒரு வேளை அவரிடம் கேப்டன்ஷிப்பை ஒப்படைத்து விட்டு பாதியிலேயே தோனி விலக வாய்ப்புள்ளது.

    சி.எஸ்.கே. ஏற்கனவே ஜடேஜாவை கேப்டனாக்கி பார்த்தது. ஆனால் அது தனக்கு சவுகரியமாக இல்லை என கூறி பாதியிலேயே ஜடேஜா ஒதுங்கி விட்டார். இனி, நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் அணியை வழிநடத்தக்கூடிய ஒரு வீரரை கொண்டு வருவதையே தோனி விரும்புவார்.

    கடந்த முறை சி.எஸ்.கே. அணி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால் இந்த தடவை வலிமையாக மீண்டு வந்து மற்றொரு முறை சாம்பியன் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பதே அவரது மிகப்பெரிய லட்சியமாகும். தொோனிக்கு அணியின் நலன் தான் மிகவும் முக்கியம். எனவே அணியின் நலனுக்காக ஜடேஜாவை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை நிச்சயம் தோனி செய்வார்.

    என்னை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே. அணிக்கு சரியான தேர்வாக இருப்பார். அவரால் 3, 4, 5 என எந்த பேட்டிங் வரிசைகளிலும் களம் இறங்கி, மிடில் ஓவர்களில் சிக்சர்கள் அடிக்க முடியும். தோனியை போல் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாகவும் செயல்பட முடியும். அது மட்டுமின்றி சாம்சன் தென்இந்தியாவை (கேரளா வீரர்) சேர்ந்தவர் என்பதால் அவருக்கும், சென்னை ரசிகர்களுக்குமான உறவு நன்றாக இருக்கும். அவர் சென்னை அணியின் அடுத்த அடையாளமாக மாறுவார். அதனால் தான் சாம்சனுக்காக சி.எஸ்.கே. இவ்வளவு தீவிரம் காட்டுகிறது. சாம்சன், சி.கே.எஸ்.வுடன் இணைவது உறுதி என்றால், தோனியுடன் அவர் பலமுறை பேசி இருப்பார். திரைமறைவு பேச்சுவார்த்தைகளும் நடந்திருக்கும்.

    இவ்வாறு கைப் கூறியுள்ளார்.

    • ஆசிய கோப்பையில் அவர் ஆரம்பத்திலேயே 3 ஓவர்கள் போட்டு விடுகிறார்.
    • காயத்தை தவிர்ப்பதற்காகவே பும்ராவை ஆரம்பத்திலேயே சூர்யகுமார் பயன்படுத்தி விடுவதாக முகமது கைப் கூறினார்.

    ஆசியக் கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் வரும் 28-ந் தேதி மோதவுள்ளது.

    முன்னதாக இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா ஓமனுக்கு எதிரான போட்டியில் மட்டும் ஓய்வெடுத்தார். மற்ற அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார்.

    இருப்பினும் கேப்டன் சூர்யகுமார் அவரை வித்தியாசமாக பயன்படுத்தினார். ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முந்தைய கேப்டன்கள் அவரை டெத் ஓவர்களில் பயன்படுத்தி எதிரணியை சாய்ப்பதற்காக பவர்பிளேவில் குறைவாக பயன்படுத்துவார்கள்.

    அதே சமயம் முதல் ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா தான் வீசுவார். ஆனால் முதல் ஓவரை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுக்கும் சூர்யகுமார் பவர் பிளேவில் பும்ராவை 3 ஓவர்கள் வீச வைத்து விடுகிறார்.

    இந்நிலையில் காயத்தை தவிர்ப்பதற்காகவே ஜஸ்ப்ரித் பும்ராவை ஆரம்பத்திலேயே சூர்யகுமார் பயன்படுத்தி விடுவதாக முன்னாள் வீரர் முகமது கைப் குற்றம் சாட்டினார். இது போன்ற நகர்வு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவைக் கொடுக்கலாம் என்றும் அவர் விமர்சித்தார்.

    இது குறித்து கைப் கூறியதாவது:-

    ஜஸ்ப்ரித் பும்ரா பொதுவாக ரோகித் தலைமையில் 1, 13, 17, 19-வது ஓவர்களை போடுவார். ஆனால் சூர்யகுமார் தலைமையில் ஆசிய கோப்பையில் அவர் ஆரம்பத்திலேயே 3 ஓவர்கள் போட்டு விடுகிறார்.

    இப்போதெல்லாம் காயத்தை தவிர்ப்பதற்காக பும்ரா தன்னுடைய உடல் தயாராக இருக்கும் போதே பவுலிங் செய்ய விரும்புகிறார். ஆனால் எஞ்சிய 14 ஓவர்களில் பும்ரா 1 ஓவர் மட்டுமே வீசுவார் என்பது எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய நிவாரணம். இது உலகக்கோப்பை போன்ற தொடர்களில் வலுவான அணிகளுக்கு எதிராக இந்தியாவுக்கு வலியைக் கொடுக்கலாம்.

    என்று கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜஸ்ப்ரித் பும்ரா "இதற்கு முன்பும் தவறானது. மீண்டும் தவறாக இருக்கிறது" என்று அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    அதாவது அன்றும் இன்றும் சூழ்நிலைக்கு தகுந்தார் போலவும் கேப்டனின் விருப்பத்திற்கு இணங்க அணிக்காக பந்து வீசுவதாக பும்ரா தெரிவித்துள்ளார். 

    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், அக்சர் படேல் இந்திய அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்டிருந்தார்.
    • ஓராண்டுக்கும் மேலாக டி20 அணியில் இடம்பெறாத கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக சூர்யகுமார் யாதவும் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டனர். இதற்கு முன்பு, இந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், அக்சர் படேல் இந்திய அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்டிருந்தார்.

    தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக டி20 அணியில் இடம்பெறாத கில்லுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், இந்த விவகாரம் குறித்து தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

    இந்த முடிவு குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் முகமது கைப் கூறியதாவது:-

    துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அக்சர் படேலுக்கு தேர்வுக்குழு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.

    பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்து அவர் இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டிருக்கக் கூடாது. அக்சர் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்.

    என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

    2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களம் இறங்க வாய்ப்பு.
    • அக்சர் படேல் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்படலாம்.

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வருகிற 19ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அதற்குள் கிரிக்கெட் விமர்சகர்கள் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதை குறித்து பேசத் தொடங்கியுள்ளனர்.

    அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப், யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ, அர்ஷ்தீப் சிங், பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஆடும் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறக்கப்படலாம்.

    சூர்யகுமார் யாதவ் 3ஆவது இடத்திலம், திலக் குமார் அடுத்தும் களம் இறக்கப்படலாம். அக்சர் பட்டேல் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

    மாற்று தொடக்க வீரர் இடத்திற்கு ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இடையே கடும் போட்டி நிலவும். ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு குறைவுதான். முகமது சிராஜ், ஜித்தேஷ் சர்மா ஆகியோரையும் பிசிசிஐ கருத்தில் கொள்ளும் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    • இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த சுப்மன் கில்லுக்கு இன்று வாய்ப்பு இருந்தது.
    • அவர் கருண் நாயரை தேர்வு செய்திருக்க வேண்டும்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. காயம் காரணமாக ஆகாஷ் தீப், நிதிஷ் ரெட்டி ஆகியோர் நீக்கப்பட்டு அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர்.

    சுமார் 8 வருடத்திற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த கருண் நாயர், 6 இன்னிங்சில் 0, 20, 31, 26, 40 மற்றும் 14 ரன்களே அடித்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கருண் நாயருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது எக்ஸ் பக்கத்தில் "கருண் நாயர் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாட வில்லை என்றாலும், இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த சுப்மன் கில்லுக்கு இன்று வாய்ப்பு இருந்தது. அவர் கருண் நாயரை தேர்வு செய்திருக்க வேண்டும். அணித் தலைவராக கடினமான முடிவு எடுக்கும்போது, மரியாதை பெறுவதற்கான வாய்ப்பை இழந்து விட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

    • லார்ட்ஸ் டெஸ்டில் பும்ராவுக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் தொடர்ந்து பவுன்சர் வீசினர்.
    • காயப்படுத்த வேண்டு என்ற திட்டத்தில் அவ்வாறு பந்து வீசினர் என கைஃப் குற்றச்சாட்டு.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 22 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா 112 ரன் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 9ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 35 ரன்கள் சேர்த்தது. பும்ரா 54 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் எடுத்தார்.

    பும்ரா பேட்டிங் செய்யும்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தொடர்ச்சியாக பவுன்சர் வீசி பும்ராவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இறுதியாக பென் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார்.

    இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைஃப் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக கைஃப் கூறுகையில் "பும்ராவுக்கு எதிராக பவுன்சர் வீச வேண்டும் என்பது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சரின் திட்டம். பும்ரா அவுட்டாகவில்லை என்றால் கைவிரல் அல்லது தோள்பட்டையை காயப்படுத்த வேண்டும். அவர்கள் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் முக்கியமான பந்து வீச்சாளரை காயப்படுத்த இதுதான் பந்து வீச்சாளர்கள் மனநிலையில் நிலைத்திருக்கும். இந்த திட்டம் பின்னர் அவர்களுக்கு வேலை செய்தது. பும்ரா ஆட்டமிழந்தார்.

    இவ்வாறு பும்ரா தெரிவித்தார்.

    • உலக கோப்பையை வெல்வதற்கு அழுத்தத்திற்கு அஞ்சாமல் செயல்பட வேண்டும்.
    • குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் இளம் பந்து வீச்சாளர்கள் வெற்றியை பினிஷிங் செய்ய முடியாமல் கோட்டை விட்டனர்.

    வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு சுருண்டது.

    அதை தொடர்ந்து ஆடிய வங்கதேசம் அணி 46 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா டெத் ஓவர்களில் சொதப்பியதே தோல்விக்கு காரணமென்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் வேதனை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    9 விக்கெட்டுகள் எடுத்ததால் வெற்றி இந்தியாவிடம் இருந்தது. பேட்டிங் மோசமாக இருந்தும் பவுலர்கள் அற்புதமாக செயல்பட்டு இந்தியாவை போட்டிக்குள் மீண்டும் கொண்டு வந்தார்கள். குறிப்பாக 40 ஓவர்கள் வரை பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவரில் யார் நம்முடைய டெத் பவுலர்? குல்தீப் சென்னா அல்லது தீபக் சஹரா? அது போக கடைசி நேரத்தில் நாம் கேட்ச்சுகளை விட்டோம். அதற்காக ராகுலை குறை சொல்ல முடியாது ஏனெனில் அவர் சமீப காலங்களில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.

    இருப்பினும் நல்ல ஃபீல்டரான அவர் தான் டி20 உலக கோப்பையில் லிட்டன் தாஸை ரன் அவுட் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் தாவி கேட்ச் பிடிக்க முயற்சிக்கவில்லை. அந்த வகையில் நமது ஃபீல்டர்கள் மிகவும் அழுத்தத்துடன் செயல்பட்டார்கள்.

    நாம் அழுத்தத்தில் நிறைய தவறுகளை செய்தோம். போதாக்குறைக்கு நாம் முக்கிய நேரத்தில் ஒய்ட் மற்றும் நோ-பால்களை வீசினோம். ஆனால் உலக கோப்பையை வெல்வதற்கு அழுத்தத்திற்கு அஞ்சாமல் செயல்பட வேண்டும். அதை நோக்கி தான் இங்கிலாந்து - நியூசிலாந்து போன்ற அணிகள் வளர்ந்து வருகின்றன. அதனால் தான் அவர்கள் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் உயரே பறக்கிறார்கள்.

    மொத்தத்தில் தொடர்ச்சியாக அழுத்தத்தில் நாம் தடுமாறுவது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. 40 ஓவர்கள் வரை நம்மிடம் இருந்த வெற்றியை கடைசி நேரத்தில் மெகதி ஹசன் எப்படி விளையாட வேண்டும் என்பதை நமக்கு காட்டி வங்கதேசத்தை வெற்றி பெற வைத்து விட்டார். அதற்கு நமது கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் மோசமாக இருந்ததே காரணம். குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் இளம் பந்து வீச்சாளர்கள் வெற்றியை பினிஷிங் செய்ய முடியாமல் கோட்டை விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
    • அவர் அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும் மற்றும் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.

    நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பவுலிங்கில் இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்தது அணிக்கு தோல்வியை தேடி தந்தார் என்றே கூற வேண்டும். நோ-பால் மற்றும் அர்ஷ்தீப்பை பிரிக்க முடியாத நிலையில் உள்ளது.

    ஸ்ரீலங்கா தொடரை தொடர்ந்து நேற்றைய போட்டியிலும் நோ பால் வீசினார். கடைசி ஓவரில் ஒரு நோ பால், மூன்று தொடர்ச்சியான சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என கடைசி ஓவரை முடித்தார்.

    அர்ஷ்தீப் தனது நோ-பால் பிழைகளை சரிசெய்ய தனது ரன்-அப்பைக் குறைக்க பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், அர்ஷ்தீப் தனது நோ-பால் பிழைகளை சரிசெய்ய தனது ரன்-அப்பைக் குறைக்க பரிசீலிக்க வேண்டும்.

    அர்ஷ்தீப்புக்கு நீண்ட ரன்-அப் உள்ளது. அங்கே சக்தியை வீணடிக்கிறார். எனவே, நோ-பால்களுக்கு முக்கிய காரணம் அவரது நீண்ட ரன்-அப். எனவே, அவர் அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும் மற்றும் சற்று நிதானமாக இருக்க வேண்டும். அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர்" என்று கைஃப் கூறினார்.

    • வளர்ந்துவரும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், ரோகித் சர்மா பந்தை எந்த திசையில் எப்படி அடிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.
    • ரோகித் சர்மா ஆடும் விதத்தை பார்க்கையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடுவார்.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    சுழற்பந்துக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற சுழற்பந்து வீச்சாளர்கள்தான் முக்கியமான அஸ்திரம் என்பதை உணர்ந்து நாதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன், அஷ்டான் அகர் என 4 ஸ்பின்னர்களுடன் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்தது.

    முதல் டெஸ்ட்டில் அணி தேர்வில் தவறிழைத்துவிட்டது. 2வது டெஸ்ட்டில் அந்த அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஸ்பின்னை பயன்படுத்துவதில் ஓரளவிற்கு தேறிய ஆஸ்திரேலிய அணி, இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் கோட்டைவிட்டது.

    இந்திய அணியின் முன்னணி வீரர்களான கோலி, புஜாரா ஆகியோரும் திணறும் நிலையில், ரோகித் சர்மா ஸ்பின்னர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடி முதல் டெஸ்ட்டில் சதமடித்து 120 ரன்களை குவித்தார்.

    சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி ஆடவேண்டும் என்று வளர்ந்துவரும் வீரர்கள் ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று முகமது கைஃப் கருத்து கூறியுள்ளார்.



    இதுகுறித்து பேசிய முகமது கைஃப்:-

    ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் உள்ளார். நிறைய ரன்களை அடித்துவருகிறார். ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி பேட்டிங் ஆடவேண்டும் என்பதை ஆடியே காட்டுகிறார். லாங் ஆனில் ஃபீல்டரே நின்றாலும் கூட, அவரது தலைக்கு மேல் தூக்கி சிக்சர் அடிக்கிறார் ரோகித்.

    லாங் ஆனில் ஃபீல்டர் நின்றாலும் தனது திறமை மீது நம்பிக்கை வைத்து சிக்சர் அடிக்கிறார். வளர்ந்துவரும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், ரோகித் சர்மா பந்தை எந்த திசையில் எப்படி அடிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.

    ரோகித் சர்மா ஆடும் விதத்தை பார்க்கையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடுவார்.

    என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    • இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து டோனி ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.
    • ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து டோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் டோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அவரிடமே கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து டோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை. டோனி இந்த தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தாலும், சிலரோ அவர் அடுத்த சீசனும் விளையாடுவார் என்றும் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை கேப்டன் டோனி விளையாடமாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறி உள்ளார்.

    டோனி ஓய்வு பெறுவாரா என்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள முகமது கைப், நடப்பு சீசனுடன் ஓய்வு பெறுவதை டோனி பல முறை உணர்த்திவிட்டதாகவும், அடுத்த சீசனில் அவர் ஆடமாட்டார் என்றே தனக்கு தோன்றுவதாகவும் கைப் கூறி உள்ளார். கவாஸ்கர் டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது, டோனியின் சிறப்பை வெளிப்படுத்துவதாகவும் கைப் பேசி உள்ளார்.

    • 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஆண்டர்சனை எதிர்கொள்ள விராட் கோலி கடுமையாக திணறினார்.
    • ஆப் ஸ்டெம்பிற்கு வெளியே சென்ற பந்தை எதிர்கொள்ள விராட் கோலி சரியாக ஆட முடியவில்லை.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வரும் 7-ம் தேதி எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, புஜாரா, சுப்மன் கில் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் விராட் கோலியை விட சுப்மன் கில் சிறந்த வீரராக வலம் வருகிறார் என முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சச்சின் டெண்டுல்கர் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் ஆக இருந்தார். சச்சினையும் விராட் கோலியையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் கோலிக்கு சில குறைகள் பேட்டிங்கில் இருந்தது. 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஆண்டர்சனை எதிர்கொள்ள விராட் கோலி கடுமையாக திணறினார்.

    ஆப் ஸ்டெம்பிற்கு வெளியே சென்ற பந்தை எதிர்கொள்ள விராட் கோலி சரியாக ஆட முடியவில்லை. விராட் கோலிக்கு அந்த தொடர் மிகவும் மோசமானதாக அமைந்தது. ஆனால் சுப்மன் கில்லை பொறுத்தவரையில் அவருடைய பேட்டிங் நுட்பம் டெண்டுல்கர் போல் இருக்கிறது. சுப்மன் கில்லை ஆட்டமிழக்க வைப்பது என்பது மிகவும் கடுமையான விஷயமாக தற்போது தெரிகிறது. சுப்மன் கில்லிடம் எந்த குறையும் இருப்பது போல் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்கு கிரிக்கெட் யுக்தியும் மன பலமும் இருக்கிறது.

    என்று முகமது கைப் கூறியுள்ளார்.

    • விராட் முதல் போட்டியில் 1 ரன்னிலும் 2-வது மற்றும் 3-வது போட்டிகள் முறையே 4 மற்றும் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.
    • ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்களும் அவரை 3-வது இடத்தில் விளையாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்டீஸ் அணிகள் அடுத்து சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது.

    இந்திய அணி சூப்பர் சுற்றுக்கு முன்னேறினாலும் தொடக்க வீரரான விராட் கோலியின் ஆட்டம் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரில் மற்றும் தொடக்க வீரராக களமிறங்கிய வரும் அவர் இந்திய அணிக்காக முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.

    முதல் போட்டியில் 1 ரன்னிலும் 2-வது மற்றும் 3-வது போட்டிகள் முறையே 4 மற்றும் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்களும் அவரை 3-வது இடத்தில் விளையாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கோலி தொடக்க வீரராக விளையாடுவதை விட 3-வது விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கைப் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் போல ஃபிளாட்டான பிட்ச்கள் இல்லையெனில் அங்கே நீங்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். ஐபிஎல் தொடரில் அங்கே விராட் கோலி ஆக்ரோஷமாக விளையாடினார். ஆனால் இங்கே அவர் ஆக்ரோஷமாக விளையாடாமல் தன்னுடைய விக்கெட்டை பாதுகாத்து விளையாட வேண்டும். எனவே விராட் கோலி மூன்றாவது இடத்தில் தனது இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும். கடந்த உலகக் கோப்பைகளில் அவருடைய புள்ளிவிவரங்கள் அற்புதமாக இருக்கிறது.

    மேலும் 5-வது இடத்திலிருந்து ரிஷப் பண்ட் 3-வது இடத்தில் விளையாட முடியுமானால் அவரால் ஓப்பனிங்கிலும் களமிறங்க முடியும்.

    இவ்வாறு பண்ட் கூறினார்.

    ×