search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammad kaif"

    • 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஆண்டர்சனை எதிர்கொள்ள விராட் கோலி கடுமையாக திணறினார்.
    • ஆப் ஸ்டெம்பிற்கு வெளியே சென்ற பந்தை எதிர்கொள்ள விராட் கோலி சரியாக ஆட முடியவில்லை.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வரும் 7-ம் தேதி எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, புஜாரா, சுப்மன் கில் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் விராட் கோலியை விட சுப்மன் கில் சிறந்த வீரராக வலம் வருகிறார் என முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சச்சின் டெண்டுல்கர் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் ஆக இருந்தார். சச்சினையும் விராட் கோலியையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் கோலிக்கு சில குறைகள் பேட்டிங்கில் இருந்தது. 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஆண்டர்சனை எதிர்கொள்ள விராட் கோலி கடுமையாக திணறினார்.

    ஆப் ஸ்டெம்பிற்கு வெளியே சென்ற பந்தை எதிர்கொள்ள விராட் கோலி சரியாக ஆட முடியவில்லை. விராட் கோலிக்கு அந்த தொடர் மிகவும் மோசமானதாக அமைந்தது. ஆனால் சுப்மன் கில்லை பொறுத்தவரையில் அவருடைய பேட்டிங் நுட்பம் டெண்டுல்கர் போல் இருக்கிறது. சுப்மன் கில்லை ஆட்டமிழக்க வைப்பது என்பது மிகவும் கடுமையான விஷயமாக தற்போது தெரிகிறது. சுப்மன் கில்லிடம் எந்த குறையும் இருப்பது போல் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்கு கிரிக்கெட் யுக்தியும் மன பலமும் இருக்கிறது.

    என்று முகமது கைப் கூறியுள்ளார்.

    • இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து டோனி ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.
    • ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து டோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் டோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அவரிடமே கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து டோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை. டோனி இந்த தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தாலும், சிலரோ அவர் அடுத்த சீசனும் விளையாடுவார் என்றும் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை கேப்டன் டோனி விளையாடமாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறி உள்ளார்.

    டோனி ஓய்வு பெறுவாரா என்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள முகமது கைப், நடப்பு சீசனுடன் ஓய்வு பெறுவதை டோனி பல முறை உணர்த்திவிட்டதாகவும், அடுத்த சீசனில் அவர் ஆடமாட்டார் என்றே தனக்கு தோன்றுவதாகவும் கைப் கூறி உள்ளார். கவாஸ்கர் டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது, டோனியின் சிறப்பை வெளிப்படுத்துவதாகவும் கைப் பேசி உள்ளார்.

    • வளர்ந்துவரும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், ரோகித் சர்மா பந்தை எந்த திசையில் எப்படி அடிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.
    • ரோகித் சர்மா ஆடும் விதத்தை பார்க்கையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடுவார்.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    சுழற்பந்துக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற சுழற்பந்து வீச்சாளர்கள்தான் முக்கியமான அஸ்திரம் என்பதை உணர்ந்து நாதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன், அஷ்டான் அகர் என 4 ஸ்பின்னர்களுடன் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்தது.

    முதல் டெஸ்ட்டில் அணி தேர்வில் தவறிழைத்துவிட்டது. 2வது டெஸ்ட்டில் அந்த அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஸ்பின்னை பயன்படுத்துவதில் ஓரளவிற்கு தேறிய ஆஸ்திரேலிய அணி, இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் கோட்டைவிட்டது.

    இந்திய அணியின் முன்னணி வீரர்களான கோலி, புஜாரா ஆகியோரும் திணறும் நிலையில், ரோகித் சர்மா ஸ்பின்னர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடி முதல் டெஸ்ட்டில் சதமடித்து 120 ரன்களை குவித்தார்.

    சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி ஆடவேண்டும் என்று வளர்ந்துவரும் வீரர்கள் ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று முகமது கைஃப் கருத்து கூறியுள்ளார்.



    இதுகுறித்து பேசிய முகமது கைஃப்:-

    ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் உள்ளார். நிறைய ரன்களை அடித்துவருகிறார். ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி பேட்டிங் ஆடவேண்டும் என்பதை ஆடியே காட்டுகிறார். லாங் ஆனில் ஃபீல்டரே நின்றாலும் கூட, அவரது தலைக்கு மேல் தூக்கி சிக்சர் அடிக்கிறார் ரோகித்.

    லாங் ஆனில் ஃபீல்டர் நின்றாலும் தனது திறமை மீது நம்பிக்கை வைத்து சிக்சர் அடிக்கிறார். வளர்ந்துவரும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், ரோகித் சர்மா பந்தை எந்த திசையில் எப்படி அடிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.

    ரோகித் சர்மா ஆடும் விதத்தை பார்க்கையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடுவார்.

    என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
    • அவர் அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும் மற்றும் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.

    நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பவுலிங்கில் இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்தது அணிக்கு தோல்வியை தேடி தந்தார் என்றே கூற வேண்டும். நோ-பால் மற்றும் அர்ஷ்தீப்பை பிரிக்க முடியாத நிலையில் உள்ளது.

    ஸ்ரீலங்கா தொடரை தொடர்ந்து நேற்றைய போட்டியிலும் நோ பால் வீசினார். கடைசி ஓவரில் ஒரு நோ பால், மூன்று தொடர்ச்சியான சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என கடைசி ஓவரை முடித்தார்.

    அர்ஷ்தீப் தனது நோ-பால் பிழைகளை சரிசெய்ய தனது ரன்-அப்பைக் குறைக்க பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், அர்ஷ்தீப் தனது நோ-பால் பிழைகளை சரிசெய்ய தனது ரன்-அப்பைக் குறைக்க பரிசீலிக்க வேண்டும்.

    அர்ஷ்தீப்புக்கு நீண்ட ரன்-அப் உள்ளது. அங்கே சக்தியை வீணடிக்கிறார். எனவே, நோ-பால்களுக்கு முக்கிய காரணம் அவரது நீண்ட ரன்-அப். எனவே, அவர் அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும் மற்றும் சற்று நிதானமாக இருக்க வேண்டும். அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர்" என்று கைஃப் கூறினார்.

    • உலக கோப்பையை வெல்வதற்கு அழுத்தத்திற்கு அஞ்சாமல் செயல்பட வேண்டும்.
    • குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் இளம் பந்து வீச்சாளர்கள் வெற்றியை பினிஷிங் செய்ய முடியாமல் கோட்டை விட்டனர்.

    வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு சுருண்டது.

    அதை தொடர்ந்து ஆடிய வங்கதேசம் அணி 46 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா டெத் ஓவர்களில் சொதப்பியதே தோல்விக்கு காரணமென்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் வேதனை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    9 விக்கெட்டுகள் எடுத்ததால் வெற்றி இந்தியாவிடம் இருந்தது. பேட்டிங் மோசமாக இருந்தும் பவுலர்கள் அற்புதமாக செயல்பட்டு இந்தியாவை போட்டிக்குள் மீண்டும் கொண்டு வந்தார்கள். குறிப்பாக 40 ஓவர்கள் வரை பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவரில் யார் நம்முடைய டெத் பவுலர்? குல்தீப் சென்னா அல்லது தீபக் சஹரா? அது போக கடைசி நேரத்தில் நாம் கேட்ச்சுகளை விட்டோம். அதற்காக ராகுலை குறை சொல்ல முடியாது ஏனெனில் அவர் சமீப காலங்களில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.

    இருப்பினும் நல்ல ஃபீல்டரான அவர் தான் டி20 உலக கோப்பையில் லிட்டன் தாஸை ரன் அவுட் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் தாவி கேட்ச் பிடிக்க முயற்சிக்கவில்லை. அந்த வகையில் நமது ஃபீல்டர்கள் மிகவும் அழுத்தத்துடன் செயல்பட்டார்கள்.

    நாம் அழுத்தத்தில் நிறைய தவறுகளை செய்தோம். போதாக்குறைக்கு நாம் முக்கிய நேரத்தில் ஒய்ட் மற்றும் நோ-பால்களை வீசினோம். ஆனால் உலக கோப்பையை வெல்வதற்கு அழுத்தத்திற்கு அஞ்சாமல் செயல்பட வேண்டும். அதை நோக்கி தான் இங்கிலாந்து - நியூசிலாந்து போன்ற அணிகள் வளர்ந்து வருகின்றன. அதனால் தான் அவர்கள் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் உயரே பறக்கிறார்கள்.

    மொத்தத்தில் தொடர்ச்சியாக அழுத்தத்தில் நாம் தடுமாறுவது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. 40 ஓவர்கள் வரை நம்மிடம் இருந்த வெற்றியை கடைசி நேரத்தில் மெகதி ஹசன் எப்படி விளையாட வேண்டும் என்பதை நமக்கு காட்டி வங்கதேசத்தை வெற்றி பெற வைத்து விட்டார். அதற்கு நமது கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் மோசமாக இருந்ததே காரணம். குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் இளம் பந்து வீச்சாளர்கள் வெற்றியை பினிஷிங் செய்ய முடியாமல் கோட்டை விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அணி மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன.
    • ஸ்லோ ஓவர் ரேட் விதி மிகவும் சிக்கலானது மற்றும் கடினமானது.

    இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் முகமது கையிப், டெல்லியில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளதாவது:

    அவர்கள் ஒரு நல்ல வலுவான அணியைக் கொண்டிருப்பதாலும், முக்கிய வீரர்கள் ஃபார்முக்கு திரும்பியதாலும், இந்திய அணி மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் (இந்தியா) வெற்றி பெற வேண்டும்.

    சமீபத்தில் ஐசிசி கொண்டு வந்த ஸ்லோ ஓவர் ரேட் விதி மிகவும் சிக்கலானது மற்றும் கடினமானது. இது சில காலத்திற்கு முன்பு செயல்படுத்தப்பட்டது, ஆனால் வெற்றி பெறவில்லை.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தேர்வில் சிறந்த 11 பேரை கண்டு பிடிக்க முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ரோகித் ஒரு சிறந்த கேப்டன். அவர் ஐபிஎல் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார், ஆனால் இந்திய அணி தேர்வில் சந்தேகம் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சிறுபான்மையினரை நடத்தும் விதம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கயிப் பதிலடி கொடுத்துள்ளார். #ImransRemarks #MohammadKaif
    புதுடெல்லி:

    சிறுபான்மையின மக்களை எப்படி நடத்துவது என்பதை மோடி அரசுக்கு காட்டுவோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் பேசினார். அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத நாடு சிறுபான்மையின மக்களை எப்படி நடத்துவது என்று இந்தியாவுக்கு இப்போது பாடம் நடத்துகிறது என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார். பாகிஸ்தானை டெரரிஸ்தான் (பயங்கரவாத நாடு) என பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர் விமர்சித்தார்.

    அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கயிப்பும் இம்ரான் கான் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிறுபான்மையின மக்களை எப்படி நடத்தவேண்டும்? என வேறெந்த நாட்டிற்கும் உபதேசம் செய்யும் தகுதி படைத்த கடைசி நாடு பாகிஸ்தான்.


    பாகிஸ்தானை தனியாக பிரித்தபோது அங்கு 20 சதவீத சிறுபான்மையின மக்கள் இருந்தனர். இப்போது 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். அதேசமயம், இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு சிறுபான்மையின மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அலகாபாத்தைச் சேர்ந்த கயிப் (வயது 38), இந்தியாவுக்காக 125 ஒருநாள் போட்டிகளிலும், 13 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த ஜூலை மாதம் அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். #ImransRemarks #MohammadKaif
    இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 325 ரன்னை சேஸிங் செய்த நாளில் முகமது கைப் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். #Kaif
    இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், தலைசிறந்த பீல்டராகவும் திகழ்ந்தவர் முகமது கைப். 19 வயதிற்கு உட்பட்டோருக்காக உலகக்கோப்பையை இவரது தலைமையில்தான் இந்திய அணி முதன்முறையாக கைப்பற்றியது. யுவராஜ் சிங் உடன் இணைந்து இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார்.

    2000-த்தில் இந்திய தேசிய அணியில் முகமது கைப்பிற்கு இடம் கிடைத்தது. 2006-ம் ஆண்டு வரை இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். இதுவரை 13 டெஸ்ட், 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரு சதத்துடன் 624 ரன்களும், ஒருநாள் போட்டியில் இரண்டு சதங்களுடன் 2753 ரன்களும் அடித்துள்ளார். கைப் என்றாலே நமக்கு ஞாபகம் வருது கங்குலி தலைமையிலான இந்திய ஒருநாள் அணி 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிதான்.



    இதில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து திரெஸ்கோதிக் (109), கேப்டன் மைக்கேல் வாகன் (115) ஆகியோரின் சதத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. அந்த நேரத்தில் 275 ரன்களுக்கு மேல் எடுத்தாலே சேஸிங் செய்வது இயலாத காரியம். இதனால் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற எண்ணத்தில் டி-சர்ட் காலரை தூக்கிவிட்டு இங்கிலாந்து வீரர்கள் களம் இறங்கினார்கள்.

    சச்சின் தெண்டுல்கர் ஆட்டமிழந்த பிறகு கைப் களம் இறங்கினார். அப்போது இந்தியா 24 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 256 பந்தில் 180 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது யுவராஜ் சிங் உடன் கைப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது. யுவராஜ் சிங் 69 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் கைப் 75 பந்தில் 87 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறவைத்தார்.



    புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தாதா கங்குலி தனது சட்டையை கழற்றி கையில் வைத்து சுழற்றி சுழற்றி வெற்றியை கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் இந்த வெற்றியை மறந்திருக்கமாட்டார்கள். ஆட்ட நாயகன் விருதை பெற்ற   முகமது கைப்பையும் மறந்திருக்க மாட்டார்கள். இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான நாளாக கருதப்படும் ஜூலை 13-ந்தேதி (2002-ம் ஆண்டு) அன்று கைப் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    ×