என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கடைசி விக்கெட்டில் பாகிஸ்தானை பதற வைத்த ரபாடா- முத்துசாமி: 404 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா
    X

    கடைசி விக்கெட்டில் பாகிஸ்தானை பதற வைத்த ரபாடா- முத்துசாமி: 404 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா

    • ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 235 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது
    • தமிழக வம்சாளி வீரரான முத்துசாமி மற்றும் ரபாடா கடைசி விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தனர்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 333 ரன்னில் (113.4 ஓவர்) ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம்- ரியான் ரிக்கல்டன் களமிறங்கினர். இதில் ரியான் ரிக்கல்டன் 14 ரன்னிலும் மார்க்ரம் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ்- டோனி டி சோர்ஸி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.

    டோனி டி சோர்ஸி 55 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரேவிஸ் 0, கைல் வெர்ரெய்ன் 10 ரன்னிலும் வெளியேறினார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டப்ஸ் 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து ஹர்மர் 2, யான்சன் 12 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 235 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    இந்நிலையில் இந்திய வம்சாளி வீரர்களான முத்துசாமி மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார்.

    30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மகாராஜ் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கடைசி விக்கெட்டுக்கு முத்துசாமியுடன் ரபாடா ஜோடி சேர்ந்தார். ரபாடா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இதனால் பாகிஸ்தானை விட தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றது. அதிரடியாக விளையாடிய ரபாடா டெஸ்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 98 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது. ரபாடா 71 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முத்துசாமி 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஆஷிப் அப்ரிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×