என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gun fired"

    • சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.
    • தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் மேற்கே உள்ள பெக்கர் ஸ்டால் பகுதியில் ஒரு மதுபான விடுதியில் இன்று அதிகாலை ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

    அப்போது அங்கு மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் வந்தனர். 2 வாகனங்களில் வந்த அக்கும்பல் மதுபான விடுதி முன்பு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

    பின்னர் அக்கும்பல் தப்பி சென்றபோது சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.

    இந்த தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையே 12 மர்ம நபர்கள் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட மதுபான விடுதி சட்ட விரோதமாக நடந்து வந்ததாக தெரிகிறது.

    கடந்த 6-ந்தேதி தலை நகர் பிரிட்டோரியாவுக்கு அருகிலுள்ள ஒரு தங்குமிடத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து 12 பேரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
    • போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ஜம்மு-காஷ்மீர்:

    காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் உள்ள சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்கள் விபன் குமார், அரவிந்த் சிங் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 2 வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். அந்த பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் களம் இறங்கியுள்ளனர். அங்கு பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை தொடர்ந்து வருகிறது.

    இதற்கிடையே கதுவா பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    இந்த நிலையில் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

    • ரெயில் பெட்டியில் துப்பாக்கி குண்டு துளைத்ததற்கான அடையாளம் காணப்பட்டது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பூரி:

    ஒடிசாவில் பத்ரக் பகுதியருகே சென்று கொண்டிருந்த பூரி-ஆனந்த் விகார் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதுபற்றி பூரி நகரின் அரசு ரெயில்வே போலீஸ் காவல் நிலைய உயரதிகாரி எஸ்.கே. பாஹினிபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, பத்ரக் பகுதியை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றதும் அதன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது என எங்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பின்னர், ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர். அந்த ரெயில் பூரி நகரை பாதுகாப்பாக சென்றடையும் வகையில் அவர்கள் இணைந்து செயல்பட்டு பாதுகாப்பை வழங்கினர். இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் போலீசார் அடங்கிய 4 குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன என்றார்.

    இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயில் பெட்டியில் துப்பாக்கி குண்டு துளைத்ததற்கான அடையாளம் காணப்பட்டது. பயணிகள் அனைவரும் அந்த பெட்டியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது உடனடியாக கண்டறியப்படவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஓட்டலில் துப்பாக்கி சூடு நடந்தது.
    • நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.

    தென்கிழக்கு ஐரோப்பாவில், பால்கன் தீபகற்பத்தில் உள்ள நாடு மாண்டினீக்ரோ. இங்குள்ள செட்டின்ஜே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் துப்பாக்கி சூடு நடந்தது. 45 வயதான நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.


    பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் தனது குடும்பத்தை சேர்ந்த 7 பேரையும், ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது 2 குழந்தைகளையும் கொன்றுள்ளார். தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    லண்டனில் உள்ள செவன் கிங்ஸ் மசூதியில், ரமலான் தொழுகையின் போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. #London #RamadanPrayers #LondonMosqueFire
    லண்டன்:

    லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள இல்போர்டில் செவன் கிங்ஸ் மசூதி உள்ளது. இங்கு நேற்று இரவு முஸ்லீம்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். தொழுகை தொடங்கிய சிறிது நேரத்தில், முகமூடி அணிந்தபடி கைத்துப்பாக்கியுடன் வந்த ஒருவன், துப்பாக்கியால் சுட்டபடி உள்ளே மசூதிக்குள் நுழைய முயன்றுள்ளான்.

    துப்பாக்கி சத்தம் கேட்டு தொழுகையில் இருந்தவர்களில் சிலர் வெளியே ஓடிவந்து தைரியமாக அந்த நபரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவனைப் பிடிக்க முயற்சிக்கவே அவன் தப்பியோடியுள்ளான். தகவல் அறிந்து வந்த போலீசார், மசூதியை சுற்றிலும் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தப்பி ஓடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

    மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நள்ளிரவு வரை பதற்றம் நீடித்தது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பு இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். #London #RamadanPrayers #LondonMosqueFire
    ×