என் மலர்
நீங்கள் தேடியது "Barrier"
- வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது.
- விபத்தை தடுக்க சாலையில் இடையே தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேது சாலையில் 3 அரசு வங்கிகள், எம்.எல்.ஏ. அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், திருமண மண்டபங்கள், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு போக்குவரத்து கழக பணிமனை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைந்துன்ன.
விழா காலங்களில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
கடந்த ஆண்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சாலையில் மணல் தேங்கி நிற்பதால் பஸ் மற்றும் லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது.
வாகனங்கள் சேதமடைந்து விடுகிறது.
விபத்தை தடுக்க சாலையில் இடையே தடுப்பு சுவர் (சென்டர் மீடியன்) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் துரைராஜன் கூறும்பேது, இவ்வழியே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் சைக்கிளில் செல்லும் போது மணல் சறுக்கி விழுந்து விடுகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு வழிவிட்டு ஓரமாக செல்லும் போது மணலில் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர்.
காயங்கள் ஏற்படுகிறது. சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவலநிலை ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மணலை அப்புறப்படுத்தி விபத்துகளை தடுக்க வேண்டும் என்றார்.
- சேதமடைந்து தடுப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக தரைமட்ட பாலமாகவே உள்ளது.
- வாகன ஓட்டிகள் கைபிடி சுவர் இல்லாததால் வாய்க்காலில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.
மெலட்டூர்:
தஞ்சை -கும்பகோணம் பிரதான சாலையில் பாபநாசம் பகுதியில் உள்ள அன்னுகுடி பாசன வாய்க்கால், அன்னுகுடி பிரிவு வாய்க்கால் மீது கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர் சேதமடைந்து தடுப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக தரைமட்ட பாலமாகவே உள்ளது. அதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள், கைபிடி சுவர் இல்லாததால் சில நேரங்களில் வாய்க்காலில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.
ஆகையால் பொதுப்பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தரைமட்ட நிலையில் உள்ள அன்னுகுடி, வாய்க்கால் மற்றும் பிரிவு வாய்க்கால் பாலத்தின் மீது தடுப்பு அமைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீன்பிடி துறைமுகம் 2-வது முறையாக சேதமடைந்துள்ளது.
- தூண்டில் வளைவில் தடுப்புச்சுவர் பாதைகள் பல்வேறு இடங்களில் விரிசல்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019 ஆம் ஆண்டு நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக 1070 மீட்டர் தூரம் 15அடி உயரம், 6 மீட்டர் அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்ட கட்டுமான பணிகள் கடந்த 2020ல் ஏற்பட்ட புயலின் போது தூண்டில் வளைவுக்காக கொட்டப்பட்டிருந்த கருங்கல் தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.
இந்நிலையில் கரையைக் கடந்த மாண்டஸ் புயல் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் 2வது முறையாக சேதமடைந்துள்ளது. கருங்கற்களால் ஆன 20 அடி உயரம் உள்ள தடுப்பு சுவர் மீது ஆறு மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாதை கடல் சீற்றம் காரணமாக 8 அடியில் இருந்து 10 அடி உயரம் கடலலைகள் எழும்பி தூண்டில் வளைவு தடுப்பு சுவர் மீது மோதியதால் தூண்டில் வளைவில் தடுப்பு சுவர் பாதைகள் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்வாங்கி சேதமடைந்து உள்ளது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில்மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணியை தரமாக அமைக்காத காரணத்தால் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதில் நவீன தொழில்நுட்பம் செயல்படுத்தாமல் உள்ளது என மீனவர்கள் குற்றசாட்டி உள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விவசாய நிலங்களுக்குள்ளும் கடல்நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம்.
- கடல்நீர் உட்புகாமல் இருக்க கருங்கற்களால் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூர் ஊராட்சியில் கடலோர முள்ள மண்டுவாகரை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர், கடலை, கத்தரி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு அதன் தாக்கத்தால் கடலில் இருந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
மேலும் விவசாய விளை நிலங்களுக்குள்ளும் கடல் நீர் புகுந்தது.
சுமார் 100 ஏக்கர் அளவுக்கு பயிர்களை கடல் நீர் சூழந்துள்ளதால் அவைகள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது,
நாகை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் கடுமையாக சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், பல்வேறு கடலோர கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்தது.
அதன் ஒரு பகுதியாக வடக்கு பொய்கைநல்லூர் பகுதியில் விவசாய நிலங்களுக்குள்ளும் கடல் நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
கல்லாரில் பாலம் கட்டுமான பணிக்காக அடைக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் மணல் திட்டுகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளதால் கடல் நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்து 5 நாட்களாகியும் கடல் நீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் கடல் நீர் உட்புகுந்ததின் காரணமாக தொடர்ந்து 5 ஆண்டுக்கு தங்களது விளை நிலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு மட்டுமின்றி, தொடர்ந்து சாகுபடி செய்வதற்கு தொழில்நுட்ப வல்லூர்கள் மூலம் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கடல் நீர் உட்புகாமல் இருக்க கருங்கற்களால் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம் கேட்டபோது, உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலரை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
- புயல் கரையை கடந்த போது அதனுடைய தாக்கத்தில் சின்னங்குடி மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தது.
- கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், மருதம்பள்ளம் ஊராட்சி, சின்னங்குடி மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாண்டஸ் புயல் சென்னையில் கரையை கடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சின்னங்குடி கிராமம், மீனவர்கள் படகுகளை கரைகளில் வரிசையாக அடுக்கி வைத்து பாதுகாத்து வந்தனர்.
புயல் கரையை கடந்த போது அதனுடைய தாக்கத்தில் சின்னங்குடி மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தது.
அது மட்டுமல்லாமல் மழைக்காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும்போது கடல்நீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு தடுப்பு சுவர் அல்லது கருங்கல் கொட்டி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற நிலைகளில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு சின்னங்குடி கடற்கரையில் தடுப்புச் சுவர் அல்லது கற்களை கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுக்குமாறும், சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்துக்குள் கடல்நீர் புகுந்தது.
- கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கடைக்கோடி கிராமமான சந்திரபாடியில் 2500 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பியுள்ள இக்கிராமத்தில் மழை வெள்ளம், புயல் ஏற்படும் போதும் கடல் சீற்றமாக காணப்படும் காலங்களில் கடல்நீர் உட்புகுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள தரங்கம்பாடியில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதால், தங்கள் பகுதியில்கடல் சீற்றத்தி ன்போது கடல் நீர் உட்புகுந்து பாதிக்கப்படுவதாகவும் சந்திரபாடி கடற்கரையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து முகத்துவாரத்தை தூர்வாரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விளையாடி கொண்டிருந்த அமரன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கினான்.
- வாய்க்கால் கரையை ஒட்டி தடுப்பு கம்பி அமைக்கப்படவில்லை.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சி செங்கல்மேடு கிராமம் கொடுக்கால்வலி தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம்-ரஞ்சிதா ஆகியோரின் இரண்டரை வயது மகன் அமரன்.
அமரனை நேற்று அவரின் தாய் ரஞ்சிதா அழைத்துக் கொண்டு கொள்ளிடம் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அலுவலக வாசல் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அமரன், அலுவலகத்திலிருந்து 10 அடி தூரத்தில் உள்ள தெற்கு ராஜன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டான்.
தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் அதிகம் சென்று கொண்டிருப்பதால் சிறுவன் அமரனை அப்பகுதியில் உள்ளவர்கள் வாய்க்காலில் சென்று தேடினர்.
பின்னர் கொள்ளிடத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் தெற்குராஜன் வாய்க்காலில் அமரனின் உடல் மிதந்ததை கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து அமரனின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தெற்கு ராஜன் வாய்க்கால் கரையில் அஞ்சல் அலுவலகம் உள்ளது. பாதுகாப்பற்ற முறையில் அலுவலகம் எதிரே எந்த தடுப்புச் சுவரோ, தடுப்பு கம்பியோ வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி அமைக்கப்படவில்லை.
அஞ்சல் அலுவலகம் எதிரே தெற்கு ராஜன் வாய்க்கால் கரையை ஒட்டி தடுப்புச் சுவர் அமைத்திருந்தால் கொள்ளிடம் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகுந்த பாதுகாப்பாக அமையும்.
எனவே அனைத்து மக்களின் பாதுகாப்பு கருதி அஞ்சல் அலுவலகத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தேத்தாகுடி வடக்கு பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள்.
- மீனவர்கள் மீன் பிடிக்க செய்வதற்கு ஏதுவாக வனத்துறையுடன் இணைந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள சாலை மேம்பாடு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தேத்தாக்குடி தெற்கு, தேத்தாக்குடி வடக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் குளங்கள் புனரமைப்பு பணிகள் நடந்துவருகிறது.
வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தேத்தாகுடி வடக்கு பகுதியில் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள், சிறுதலை காடு பகுதியில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செய்வதற்கு எதுவாக வனத்துறையுடன் இணைந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள சாலை மேம்பாடு உட்பட ரூ.1.25 கோடி செலவிலான வளர்ச்சி பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பெரியசாமி பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜூ, ஒன்றிய பொறியாளர்கள் மணிமாறன், அருள்ராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
- காவிரி ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கி.மீ. தூரத்திற்கு இடையே தடுப்பணை கட்டவேண்டும்.
- தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்.
கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரியான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் 240 டிஎம்சி காவிரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளது.
காவிரி நீர் வீணாவதைத் தடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கி.மீ. தூரத்திற்கு இடையே தடுப்பணை கட்டவேண்டும்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மதுரவாயல் பகுதியில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டது வேதனை அறிக்கிறது.
மாணவர்களின் தற்கொலைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம். பெற்றோர்களின் அழுத்தத்தால்தான் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
பெற்றோர் தங்களது விருப்பத்தை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். மத்திய அரசு உடனடியாக நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
அதேசமயம் தமிழகத்தில்தான் நீட் தேர்வால் அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அரசு உடனடியாக அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றார்.
அப்போது, பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கணேசன் மற்றும் விமல், காமராஜ், லண்டன் அன்பழகன் உட்பட மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- தடையாணை மூலம் அ.தி.மு.க.வுக்கு தடுப்புசுவர் எழுப்பிட முடியாது.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அ.தி.மு.க. வளர்ச்சிக்காக வும், தொண்டர்களின் நன்மைக்காகவும் எடுத்த அத்தனை முயற்சி களையும் நடத்த விடாமல் முட்டுக்கட்டை போட்டவ ர்கள் யார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன், அவர் தான் ஓ.பி.எஸ். அவர்தான் ஒத்துழையாமை இயக்கத்தின் தலைவராக இந்த நிமிடம் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
நீதிமன்றத்திற்கு நீங்கள் எத்தனை முறை செல்வீர்கள் உரிமையில் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் செல்வீர்கள் இன்றைக்கு நீங்கள் கிடைத்த தீர்ப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்,
உணர்வுபூர்வமாக, உளப்பூர்வமாக தொண்டர்கள் தலைமையை ஆதரிக்கும் போது அதை நீங்கள் தடையாணை வைத்து தடுப்பு சுவர் எழுப்பி விடலாம் என்று கனவு கண்டால், அது பகல் கனவாகவே தான் போகும். தவிர எந்த நாளும் நிலைத்து நிற்கிற தடுப்பு சுவராக இருக்காது,
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்றைக்கு அ.தி.மு.க. வலிவோடும், பொலிவோடும் திகழ்கிறது. அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்று வகையில் ஒன்றரை கோடி தொண்டர்களும் அவரை மனதார ஏற்றுக்கொள்கின்றனர்,
ஏகமனதாக சீர்திருத்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் உங்களுக்கு என்ன மன வருத்தம், கட்சியின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு என்ன மனவருத்தம்.
நீங்களும் அ.தி.மு.க. முகமாக அறியப்பட்டு உள்ளீர்கள். அதனால் தான் 15 முறை எடப்பாடியார் உங்களிடம் உடன்பட்டு பேச்சுவார்த்தை நடத்து வதற்கு எடுத்த முயற்சியில் நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வில்லை.
அம்மா அரசு அமை வதற்கு நீங்கள் ஒத்துழை யாமை இயக்க தலைவராக உள்ளீர்கள். ஒத்துழைப்பு தரமாட்டேன் என்றும், உடன்பட்டு பணியாற்ற மாட்டேன். உழைக்க மாட்டேன், வேடிக்கை பார்ப்பேன், விமர்சனம் செய்வேன் என்றும், ஒத்துழையாமை இயக்க தலைவராக உள்ள உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததை தவிர கட்சியில் எந்த பிளவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.