search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sky Lotus"

    • மழை நீரினால் வடிகால்களில் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.
    • வெள்ளக்காலங்களில் மழைநீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சி கடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது.

    இந்த ஆகாயத்தாமரையினால் வடகிழக்கு பருவமழையையொட்டி மழை நீரினால் வடிகால்களில் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    மேலும் வெள்ளக்காலங்களில் மழைநீர் கிராமங்களுக்குள்புகும் அபாயம் உள்ளது.

    எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து கடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் பொதுத்துறையினர் ஈடுப்பட்டனர்.

    இந்த பணியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது ஆகாயத்தாமரை செடிகளை விரைவில் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது நாகை மாலி. எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • மானங்கெண்டான் ஆற்றில் வெங்காயத் தாமரைச் செடிகள் அடர்ந்து வளர்ந்து மறைத்துள்ளது.
    • பாசனத்தை தடுக்கும் வகையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.

    வேதாரண்யம்:

    திருத்துறைப்பூண்டியில் வாய்மேடு வழியாக சென்று அங்கிருந்து ஆதனூர் ஊராட்சி வரை சுமார் 19 கிமீ தூரம் வரை சென்று பின்னர் கடலில் கலக்கும் மிகப்பெரிய வடிகால் ஆறான மானங்கெரண்டான் ஆற்றிலும், முள்ளியாற்றிலும் தாணிக்கோட்டகம் சட்ரஸ் முதல் வாய்மேட்டில் இருந்து பிரியும் மானங்கெண்டான் ஆற்றிலும் பல கி.மீட்டர் தொலைவு வரையில் தண்ணீரையே காணாத முடியாதபடி வெங்காயத் தாமரைச் செடிகள் அடர்ந்து வளர்ந்து மறைத்துள்ளது.

    இதேபோல மணக்காட்டான் வாய்க்கால், ராஜன்வாக்கால், பெரிய வாய்க்கால் என பல வடிகால் வாய்க்கால்களிலும் மழை வெள்ள தண்ணீர் வடிவதையும், பாசனத்தை தடுக்கும் வகையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.

    இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள வடிகால்ஆறுகளிலும், வாய்க்கால்களில் வெங்காயத் தாமரைச் செடிகள் முன்பு எப்போதும் இல்லாத அளவில் அடர்ந்து படர்ந்துள்ளதால் வடகிழக்கு காலத்தில் மழைநீர்வடிய முடியாமல் பெருத்த வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    எனவே பருவமழை வலுக்கும் முன்னரே ஆக்கிரமிப்புகளை அகற்றியும், ஆறு, வாய்க்கால்களில் மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரைகளை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்தும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டை தாலுகா இடும்பாவனத்தில் மறைக்கா கோரையாறு உள்ளது.

    மேலபெருமழை, பள்ளிமேடு, தில்லைவிளாகம், தொண்டியக்காடு, இடும்பாவனம் போன்ற பகுதிகளில் உள்ள சாகுபடி நிலங்களுக்கு இந்த ஆற்றின் மூலம் தான் தண்ணீர் செல்கிறது.

    கடைமடை பகுதிகளான இப்பகுதியில் நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது இந்த ஆற்றில் தண்ணீர் செல்லமுடியாதவாறு ஆகாயதாமரைகள் படர்ந்து ஆக்கிரமித்துள்ளது.

    இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தண்ணீர் திறப்பதற்கு முன்பே ஆற்ைற ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அகற்றவில்லை.

    தற்போது ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்தும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடும்பாவனம் மறைக்கா கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மக்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
    • ஆகாயதாமரை, செடி, கொடிகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரம் கீழவீதியில் அமைந்துள்ளது தேரடி குளம். இந்த குளத்தை அப்பகுதி மக்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்தனர். சமீப காலமாக ஆகாய தாமரை, செடி கொடிகள் படர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குளம் காணப்பட்டது.

    இது குறித்து 13-வது வார்டு நகா்மன்ற உறுப்பினர் மயில்வாகனன் கோரிக்கையை ஏற்று வேதாரண்யம் நகராட்சி தலைவா் புகழேந்தி, ஆணையர் ஹேமலதா ஆகியோர் உத்தரவின் பேரில் ஆகாயதாமரை, செடி, கொடிகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

    ஆட்களோடு வார்டு கவுன்சிலர் மயில்வாகணன் இறங்கி வேலை செய்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

    ×