என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆகாயத்தாமரை செடிகள் அகற்றம்
    X

    ஆகாயத்தாமரை செடிகள் அகற்றம்

    • மழை நீரினால் வடிகால்களில் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.
    • வெள்ளக்காலங்களில் மழைநீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சி கடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது.

    இந்த ஆகாயத்தாமரையினால் வடகிழக்கு பருவமழையையொட்டி மழை நீரினால் வடிகால்களில் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    மேலும் வெள்ளக்காலங்களில் மழைநீர் கிராமங்களுக்குள்புகும் அபாயம் உள்ளது.

    எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து கடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் பொதுத்துறையினர் ஈடுப்பட்டனர்.

    இந்த பணியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது ஆகாயத்தாமரை செடிகளை விரைவில் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது நாகை மாலி. எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×