search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.40 லட்சத்தை துப்பாக்கியால் மிரட்டி கொள்ளையடித்ததாக நாடகமாடிய ராஜஸ்தான் வாலிபர் கைது
    X

    ரூ.40 லட்சம் கொள்ளை போனதாக நாடகமாடிய வாலிபரையும், கண்ணாடி உடைக்கப்பட்ட காரையும் படத்தில் காணலாம்.

    ரூ.40 லட்சத்தை துப்பாக்கியால் மிரட்டி கொள்ளையடித்ததாக நாடகமாடிய ராஜஸ்தான் வாலிபர் கைது

    • 4 பேர் கொண்ட மர்ம கும்பல் மிரட்டியதாக புகார்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மோட்டராம் மகன் சென்னராம். (வயது26) மைசூர் அருகே உள்ள சிவராம் பேட் பகுதியில் வசித்து வருகிறார் இவர் பல்வேறு கடைகளுக்கு மளிகை, சோப், ஆயில் பேனா, உள்ளிட்ட பொருட்களை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்கிறார்.

    இவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள லாலாராம் என்பவரிடமிருந்து பொருட்களை வாங்கி சப்ளை செய்துள்ளார் அதற்காக அவருக்கு ரூ.20 லட்சம் பணம் தர வேண்டும். அவர் பலமுறை கேட்டுள்ளார். நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்து பணம் தருவதாக கூறி உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சென்னராம் புகார் மனுவை அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் நேற்று மைசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்து கொண்டிருந்தபோது திருப்பத்தூர் அருகே கோணப்பட்டு என்ற ஊர் அருகே 4, பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்தும் துப்பாக்கியை காட்டி மிரட்டியும் நான் வைத்திருந்த ரூ.40 லட்சத்தை பறித்து சென்றுவிட்டனர்.

    கார் கண்ணாடிகளை உடைத்து விட்டு மர்மகும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டதாக புகார் அளித்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த திருப்பத்தூர் தாலுகா போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அகிலன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சென்னராமிடம் உரிய முறையில் விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகிரியில் உள்ள லாலாராம்க்கு கடன் தொகை ரூ20 லட்சம் தருவதாக ரூ.20 லட்சத்திற்கே சரக்கு எடுப்பதாகவும் கூறிவிட்டேன்.

    ஆனால் என்னிடம் பணம் இல்லாததால் எனது சொகுசு கார் கண்ணாடிகளை நானே உடைத்து விட்டு தரவேண்டிய பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறி லாலாராம்க்கு தெரிவித்து நாடகமாடி தங்களிடம் புகார் மனு கொடுத்துள்ளேன் என கூறினார்.

    இதையடுத்து போலீசாரை அலைக்கழித்து பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றிய சென்னாராம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×