உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே விவசாயிகள் விதை வாங்கி நடவு செய்ய வேண்டும்

விவசாயிகள், செடி முருங்கை, தக்காளி, மிளகாய், காய்கறி பயிர்கள், பப்பாளி நடவு செய்துவருகின்றனர்.உரிமம் இல்லாதவர்களிடம் விதைகளை வாங்கி ஏமாந்துவிடுகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

விவசாயிகள் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே விதை வாங்கி நடவு செய்யவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் சுந்தரவடிவேலு கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, குடிமங்கலம், பல்லடம், பொங்கலுார், திருப்பூர், மடத்துக்குளம், உடுமலை பகுதி விவசாயிகள், செடி முருங்கை, தக்காளி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள், பழச் செடியான பப்பாளி நடவு செய்துவருகின்றனர்.இப்பயிர்களை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள், விதை மற்றும் நாற்றுக்களை விதை விற்பனை உரிமம் பெற்ற கடைகள் மற்றும் நாற்றுப்பண்ணைகளில் மட்டுமே வாங்கவேண்டும்.விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக, விவசாயிகள் சிலர், உரிமம் இல்லாதவர்களிடம் விதைகளை வாங்கி ஏமாந்துவிடுகின்றனர்.

தவறாமல் விதைக்கான ரசீது பெறவேண்டும். அந்த ரசீதில் விதை தொகுப்பு எண், காலாவதி தேதி கட்டாயம் இருக்கவேண்டும். இதன்மூலம் விதையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கமுடியும்.ரபி, காரீப் என அந்தந்த சீசனுக்கு ஏற்ற விதைகளை மட்டுமே வாங்கி பயன்படுத்தவேண்டும். காரீப் சீசனுக்கான விதையை, ரபி பருவத்திலும், ரபி பருவத்துக்கான ரகங்களை காரீப்பில் என சீசன் மாற்றி விதைக்க கூடாது. அதேபோல் சீரான இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.சில விவசாயிகள், செடி முருங்கை போன்ற காய்கறி பயிர்களை குறைந்த இடைவெளியில் நடவு செய்கின்றனர். சீசன் மாறி குறுகிய இடைவெளியில் நடவு செய்தால், அந்த பயிரின் தன்மை மாறிவிடும். இதனால் எதிர்பார்த்த பலனை பெறமுடியாமல் போய்விடும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com