என் மலர்
நீங்கள் தேடியது "ISS"
- சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ம் தேதி புறப்பட்டனர்.
- 28 மணி நேரம் பயணித்து 26-ம் தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
புதுடெல்லி:
ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ம் தேதி புறப்பட்டனர்.
விண்ணில் ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த டிராகன் விண்கலம், தொடர்ந்து 28 மணி நேரம் பயணித்து 26-ம் தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அதன்பிறகு அதனுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட டிராகன் விண்கலத்தில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர்.
அங்கு அவர்கள் 18 நாட்கள் தங்கி இருந்து 60 ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். அவற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 7 சோதனைகள் அடங்கும்.
இதற்கிடையே, சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் மூலம் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர்.
இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம் இன்று மதியம் வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது.
இதையடுத்து, டிராகன் விண்கலத்தில் உள்ள 2 சிறிய 'டுரோக்' பாராசூட்டுகள் பூமிக்கு மேல் சுமார் 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் கலிபோர்னியா கடலின் மேல் பகுதியில் திறக்கப்பட்டது. அதன்பின், 4 பெரிய பாராசூட்டுகள் விரிந்து பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது.
அதன்பின், 10 நிமிடங்களில் ஸ்பேஸ் எக்ஸின் மீட்புக் கப்பல் விண்கலத்தை அடைந்தது. விண்கலத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றனர்.
பின்னர் 4 பேரும் வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் மறுவாழ்வைத் தொடங்குவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கு சுபான்ஷு சுக்லாவின் இந்த வெற்றிகரமாக திரும்புதல் ஒரு பெருமையான தருணமாகும். சுக்லாவின் பணி இஸ்ரோவின் ககன்யான் திட்டங்களுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும் என நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- விண்வெளி வீரர்களை அழைத்து வருவதற்கான எம்எஸ்-22 விண்கலம் மீது விண்கல் மோதியதால் சேதம்.
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது 7 விண்வெளி வீரர்கள் உள்ளனர்.
மாஸ்கோ:
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான விண்கலம் மீது சிறிய விண்கல் மோதியது. இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன், குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து விண்கலத்தில் தங்கியிருக்கும் 3 வீரர்களையும் ஏற்றி வருவதற்காக அடுத்த மாதம் 20ம் தேதி மீட்பு விண்கலத்தை ராக்கெட்டில் அனுப்ப உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷியாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் கூறியிருப்பதாவது:-
ரஷிய விண்வெளி வீரர்களான செர்ஜி புரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் மற்றும் நாசா விண்வெளி வீரர் பிராங்க் ரூபியோ ஆகியோரை பூமிக்கு அழைத்து வர முதலில் அனுப்பட்ட எம்எஸ்-22 விண்கலம் ஒரு சிறிய விண்கல் மோதியதால் சேதமடைந்துள்ளது. எனவே, அவர்களுக்காக சோயுஸ் எம்எஸ்-23 ராக்கெட் பிப்ரவரி 20ம் தேதி ஆட்கள் யாரும் இன்றி செலுத்தப்பட உள்ளது. சேதமடைந்த சோயுஸ் எம்எஸ்-22 ஆட்கள் இல்லாமல் பூமிக்கு திரும்பும்.
இவ்வாறு விண்வெளி நிறுவனம் கூறி உள்ளது.
விண்வெளி நிலையத்தில் தற்போது 7 பேர் உள்ளனர். அவசர காலத்தில் வீரர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்றால் விண்வெளி நிலையத்தில் நான்கு பேரை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரே ஒரு மீட்பு விண்கலம் மட்டுமே உள்ளது. தற்போது எம்எஸ்-22 ராக்கெட் தகுதியற்றதாகக் கருதப்படுவதால் அதற்கு மாற்றாக மற்றொரு விண்கலம் ராக்கெட்டில் அனுப்பப்படுகிறது.
- விண்கலம் மீது கடந்த டிசம்பர் மாதம் சிறிய விண்கல் மோதியதால் விண்கலம் லேசான சேதம் அடைந்தது
- பைகானூர் ஏவுதளம் அருகில் உள்ள கசாக் புல்வெளியில் விண்கலம் தரையிறங்கியது.
மாஸ்கோ:
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் மீது கடந்த டிசம்பர் மாதம் சிறிய விண்கல் மோதியது. இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன், குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து விண்கலத்தில் தங்கியிருக்கும் 3 வீரர்களையும் ஏற்றி வருவதற்காக கடந்த மாதம் சோயுஸ் எம்எஸ்-23 என்ற விண்கலத்தை ரஷியா அனுப்பியது.
அதேசமயம், சேதமடைந்த சோயுஸ் எம்எஸ்-22 விண்கலத்தை ஆட்கள் இன்றி பூமிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பியது. பைகானூர் ஏவுதளம் அருகில் உள்ள கசாக் புல்வெளியில் விண்கலம் தரையிறங்கியது. விண்கலத்தில் சிறிய அளவிலேயே சேதம் ஏற்பட்டுள்ளதால், அதை சரிசெய்து மீண்டும் பயன்படுத்தலாமா? என்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.
- உயிரினங்களுக்கான சாத்தியம் பற்றிய ஆய்வு விண்வெளியிலும் நடத்தப்பட்டு வருகிறது.
- கோபிசந்த் தொடகுரா உள்பட 6 பேர் விண்வெளிக்கு சுற்றுலா செல்லவுள்ளனர்.
புதுடெல்லி:
அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ், விண்வெளிக்கு சுற்றுலாவாசிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தினைச் செயல்படுத்தி வருகிறார். அவரது புளூ ஆரிஜின் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியூ ஷெப்பர்டு திட்டத்தின்படி இதுவரை 31 மனிதர்கள் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.
நியூ ஷெப்பர்டு என்ற பெயரிலான ராக்கெட்டுகள் உதவியுடன் விண்வெளிக்கு மனிதர்கள் கொண்டு செல்லப்படுவர். இதன்படி, என்.எஸ்-25 என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், மேசன் ஏஞ்சல், சில்வெய்ன் சிரான், எட் டுவைட், கென் ஹெஸ், கரோல் ஸ்காலெர் மற்றும் கோபி தொட்டகுரா ஆகிய 6 பேர் விண்வெளிக்கு சுற்றுலா செல்லவுள்ளனர். இவர்களில் கோபி இந்தியாவை சேர்ந்த தொழில் முனைவோர்களில் ஒருவர். விமானியாகவும் இருந்துவருகிறார்.
1984-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ விங் கமாண்டராக செயல்பட்ட ராகேஷ் சர்மா முதன்முறையாக விண்வெளிக்குச் சென்றார். அவருக்கு அடுத்து விண்வெளி பயணம் மேற்கொள்ளும் 2-வது இந்தியர் என்ற பெருமையை கோபி பெற உள்ளார். இந்தப் பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் பிறந்த கோபி தொடகுரா, எம்பிரி-ரிடில் ஏரோநாடிகல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்றவர். ஜெட் விமானங்கள் மட்டுமின்றி சீபிளேன் எனப்படும் நீரிலும், வானிலும் செல்லக்கூடிய விமானங்கள், கிளைடர் வகை விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்கள், ஏர் பலூன்கள் உள்ளிட்டவற்றிலும் அவர் விமானியாக செயல்பட்டுள்ளார். சர்வதேச மருத்துவ ஜெட் விமானியாகவும் பணியாற்றி இருக்கிறார்.
விண்வெளி சுற்றுலா செல்வது குறித்து கோபிசந்த் கூறுகையில், விண்வெளிக்கு அப்பால் உள்ள விஷயங்களை அறிந்துகொள்வதற்காக அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதற்காகவே இந்த பயணம். என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. ஏனெனில் அது அகராதியில் இல்லை. அது என்னுடன் நான் எடுத்துச் செல்லக்கூடிய விஷயம் என தெரிவித்தார்.
- இந்த கோரிக்கையை சுனிதா வில்லியம்ஸ் நிராகரித்துள்ளார்.
- சரியான நேரம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கின்றனர். இம்மாத இறுதியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆலோசனையை நிராகரித்துள்ளார். முன்னதாக 2030-ம் ஆண்டு செயலிழக்க திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் அதற்கு முன்பே செயலிழக்க செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். இவரது இந்த கோரிக்கையை சுனிதா வில்லியம்ஸ் நிராகரித்துள்ளார்.
மேலும், சர்வதேச விண்வெளி மையத்தின் ஆய்வகம் நிறைய அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். "இந்த இடம் டிக் டிக்-ஆக இருக்கிறது. இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, எனவே நாம் இப்போது நமது உச்சத்தில் இருக்கிறோம் என்றே கூறுவேன். அதை விட்டு வெளியேற இப்போது சரியான நேரம் இல்லை என்று நான் நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.
வில்லியம்ஸ் தனது வீட்டில் வளர்க்கும் லாப்ரடோர்களை சந்திக்க ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். திட்டமிடப்படாமல் நீடித்து தங்குவதில் மிகவும் கடினமான அம்சம், வீடு திரும்பி குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக காத்திருப்பது தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கா, ரஷியா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

சோயூஸ் எம்-13 விண்கலத்தில் செல்லும் இவர்கள் கூடுதல் ஆராய்ச்சி பணிக்காக 11 மாதங்கள் அல்லது 392 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்துவிட்டு பூமி திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக காலம் விண்வெளியில் தங்கியிருந்த வீராங்கனை என்ற சாதனையை கிறிஸ்டீனா கூக் படைக்கப்போகிறார்.
இதற்கு முன், அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை பெக்கிவிட்சன், அதிகபட்சமாக 289 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #USAstronaut #ISS #SoyuzMS13
பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதேபோல், ஆய்வுகள் முடிந்த பின்னர் அங்கிருக்கும் வீரர்கள் பூமிக்கு திரும்பி வருவதுண்டு.
அவ்வகையில், ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர் அலெக்சி ஓவ்ச்சின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரரான நிக் ஹாக் ஆகியோருடன் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி கஜகஸ்தானில் இருந்து சோயுஸ் விண்கலத்தை சுமந்துகொண்டு புறப்பட்ட ராக்கெட் திடீரென்று வெடித்து சிதறியது.
அதில் சென்ற இரு வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது ரஷியாவின் விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.
ஆனால், சற்றும் மனம்தளராத ஆராய்ச்சியாளர்கள் சோயுஸ் விண்கலத்தை வேறு சிலருடன் மீண்டும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து, ரஷிய வீரர் ஓலேக் கோனோனென்க்கோ, அமெரிக்காவின் அன்னி மெக்லைன் மற்றும் கனடாவை சேர்ந்த விண்வெளி வீரர் டேவிட் செயின்ட் ஜேக்குவெஸ் ஆகியோருடன் சோயுஸ் விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
கஜகஸ்தான் நாட்டில் உள்ள பைக்கோனுர் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட சோயுஸ் குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது.
இதில் சென்றுள்ள ஆராய்ச்சியாளர்கள் வரும் 11-ம் தேதி முதல் விண்வெளியில் இறங்கி நடந்து விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை கண்டுபிடித்து அடைக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
மேலும், விண்வெளியில் தங்கி இருக்கும்போது ஏற்படும் தசை இழப்பு தொடர்பாக அங்கு புழுக்களை வைத்து செய்யும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளிலும் இந்த வீரர்கள் இன்றிலிருந்து சுமார் ஆறரை மாதம் வரை ஈடுபடுவார்கள் என தெரிகிறது. #Soyuz #ISS #firstmannedmission






