என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோலார்"

    • ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் சூரியனின் தென் துருவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளது
    • இந்த புகைப்படங்கள் சூரிய புயலின்போது அதன் தன்மையை அறிய உதவும்.

    ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சோலார் ஆர்பிட்டர் முதல்முறையாக சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்து சாதனை படைத்துள்ளது

    ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சோலார் ஆர்பிட்டர் நெருப்புக் குழம்புகளை கொப்பளிக்கும் சூரியனின் தென் துருவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளது

    இந்த புகைப்படங்கள் சூரிய புயலின்போது அதன் தன்மையை அறிய உதவும் என கூறப்படுகிறது.

    • சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்க விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்படும்.
    • இந்த தகவலை வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். விவசாயி தெய்வப் பெருமாள் வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் மாசானம், தோட்டகலை உதவிஅலுவலர் குமரேசன், ஊராட்சி துணைதலைவர் சித்தாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேளாண் பொறியியல்துறை உதவி பொறியாளர் மோகன் ராஜ் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆண்டுக்கு 2500 கிராமங்களை தேர்தெடுத்து 17 துறை சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி தற்சார்பு கிராமமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் வேளாண் பொறியியல்துறை மூலம், சோலார் மின்உற்பத்தி மையம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு மின்மோட்டாருக்கு 70 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது.

    மேலும் வேளாண் உற்பத்திபொருள் மதிப்பு கூட்டு சேமிப்பு கிடங்கு அமைக்க 50 சதவீதம், பண்ணை குட்டைகளுக்கு 100 சதவீதமும் மானியம் அளிக்கப்படுகிறது.

    இது போன்ற திட்டங்க ளால் வேளாண்மையில் எந்திரமாக்கல் இலக்கை அடைய முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வாடிப்பட்டி தோட்டக்கலை துறைஉதவி இயக்குனர் சண்முகபிரியா பேசுகையில்,

    விவசாயிகளுக்கு தேன்கூடு பண்ணை, மாவுமில் மற்றும் சொட்டு நீர்பாசன வசதி மானியத்தில் வழங்கப்படுகிறது என்றார்.

    விதை இடுபொருள் மற்றும் கைதெளிப்பான் உள்ளிட்ட விவசாய உபகரணங்களும் மானியத்தில் வழங்கப்படுவதாக வேளாண் உதவி அலுவர் விக்டோரியா தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் உழவன் செல்போன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரியஒளி மின்சக்தியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்தார்.
    • 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தயாரிக்கவும் சிறைத்துறை திட்டமிட்டு உள்ளது.

    கோவை:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் யுகஆதித்தன் (வயது 32). ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர். இவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் கடந்த 7 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    மத்திய ஜெயில் தொழிற்கூடத்தில் பணியாற்றி வரும் யுகஆதித்தன் கையில் கிடைக்கும் சாதனங்களை கொண்டு பயன்பாடு உள்ள பொருட்களை உருவாக்குவதில் ஆர்வம் உடையவர்.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரியஒளி மின்சக்தியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்தார். இது சிறை அதிகாரிகள் மத்தியில் பாராட்டுதல்களை பெற்றது.

    இந்த நிலையில் யுகஆதித்தன் சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் சோலார் ஆட்டோவை வடிவமைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.


    கோவை மத்திய சிறையில் சமையற்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஆட்டோவை சோதனை பயன்பாடு முடிந்த பிறகு ஜெயில் கைதிகளை சந்திக்க வரும் உறவினர்களில் வயதானவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் அமர்ந்து செல்லும்வகையில் நுழைவுவாயிலில் இருந்து பார்வையாளர் அறை வரை பயன்படுத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    ஜெயில் கைதி யுகஆதித்தன் உருவாக்கி உள்ள சோலார் ஆட்டோவின் மீது சூரியஒளி மின்உற்பத்திக்காக தகடு பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஆட்டோவில் டிரைவர் இருக்கைக்கு அடியில் பேட்டரி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

    சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் மேற்கண்ட ஆட்டோவில் ஒருமுறை பேட்டரி முழுவதுமாக நிரம்பினால் 200 கி.மீ. வரையிலும் தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இதில் டிரைவர் உள்பட 8 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம்.

    மேலும் எல்.இ.டி. விளக்கு, ஹாரன், ஹேண்ட் பிரேக், டேப் ரிக்கார்டர் போன்ற வசதிகளும் உள்ளன.

    ரூ.1.25 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த ஆட்டோ தற்போது சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர மேலும் 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தயாரிக்கவும் சிறைத்துறை திட்டமிட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி ஆலையை அம்மாநில முதல்வர் பேமா காண்டு இன்று துவக்கி வைத்துள்ளார். #ArunachalPradesh #SolarPlant
    இடாநகர்:

    அருணாச்சல பிரதேசத்தில் 8.50 கோடி ரூபாய் செலவில் அம்மாநில ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தால் சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையை அம்மாநில முதல்வர் பேமா காண்டு இன்று தொடங்கி வைத்தர்.

    துவக்க விழாவில் பேசிய முதல்வர் பேமா காண்டு, “நமது நடவடிக்கைகள் சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு இருக்கவேண்டும், மற்ற மின் உற்பத்தி முறைகளோடு ஒப்பிடும் போது, இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத சோலார் மின் உற்பத்தி ஆலை சிறந்த ஒன்று” என குறிப்பிட்டு பேசினார். #PemaKhandu #ArunachalPradesh #SolarPlant
    ×