search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Utsavam"

    • கார்த்திகை மாத முதல் சனிக்கிழமையன்று இரவு சிறப்பு பூஜைகளும் ஊஞ்சல் உற்சவம் உற்சவம் நடை பெற்றது.
    • விழாவில் பொதுமக்க ளுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங் குப்பம் கிரா மத்தில் பம்பா வாசன் அய்யப்பன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கார்த்திகை மாத முதல் சனிக்கிழமையன்று இரவு சிறப்பு பூஜைகளும் ஊஞ்சல் உற்சவம் உற்சவம் நடை பெற்றது.

    அதனைத் தொடர்ந்து மூலவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் வளா கத்தில் அய்யப்ப பக்தர்கள் இணைந்து ஊஞ்சல் உற்சவம் நடத்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி, பம்பாவாசன் ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்த னர். விழாவில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • சிவாலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம்.
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும்.

    இதில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர்.

    ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம்.

    அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாட ல்பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம்.

    நேற்று ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு மயூரநாதர் ஆலயத்திலிருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் மயூரநாதர் சுவாமி, வதான்யேஸ்வரர் ஆலயத்திலிருந்து கங்கை அம்மன் சமேத மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி, மற்றும் விஸ்வநாதர் ஆலயம், ஐயாரப்பர் ஆலயம் இவற்றிலிருந்து இறைவன் அம்பாளுடன் காவிரிக்கரையின் இரண்டு கரைகளிலும் எழுந்தருளினர்.

    பின்னர் அஸ்திரதேவருக்கு சிறப்புஅபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதில் திருவாவடுதுறை ஆதீனம் நிறுவாகிகள், தருமபுரம் ஆதீனம் நிறுவாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    • புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜையுடன், பெருமாள் சுவாமி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் அதிகாலையில் பெருமாளுக்கு 108 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    எடப்பாடி:

    புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜையுடன், பெருமாள் சுவாமி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக எடப்பாடி மேட்டுதெரு சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் அதிகாலையில் பெருமாளுக்கு 108 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சவுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தெப்ப உற்சவம்

    விழாவின் முக்கிய நிகழ்வாக எடப்பாடி பெரிய ஏரியில் தெப்ப தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க ஏரியின் மறுகரையில் உள்ள வெள்ளூற்று பெருமாள் சன்னதிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் சவுந்தரராஜ பெருமாள் சன்னதியை வந்தடைந்தார்.

    இதேபோல் எடப்பாடி அடுத்துள்ள வீரப்பம்பாளையம் வெள்ளைகரடு மலை கோவிலில் உள்ள திம்மராய பெருமாள் சன்னதி, பழைய எடப்பாடி சென்றாய பெருமாள் ஆலயம், எடப்பாடி நரசிம்ம மூக்கரை பெருமாள் கோவில், பூலாம்பட்டி மலைமாட்டுப் பெருமாள் கோவில், ரெட்டிபட்டி கிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • காலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.
    • மூலவர் மற்றும் உற்சவர் சரநாராயண பெருமாள், தாயார், சயன நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரம் சாற்றப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி,திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும்ஆடி மாதம் பவித்ர உற்சவம் நடப்பது வழக்கம். அதேபோல இந்தாண்டு பவித்ர உற்சவம் கடந்த 11-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி நடந்து வந்தது. நேற்று முன்தினம் 2-ம் நாள் உற்சவமும் நேற்று 3-ம் நாள் உற்சவமும் நடந்தது. இதனை முன்னிட்டு காலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவர் சரநாராயண பெருமாள், தாயார், சயன நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரம் சாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சரநாராயண பெருமாளை தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    குன்னூர்,

    குன்னூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வருடந்தோறும் தேர்த்திருவிழா வெகு விமரி சயைாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    முக்கிய திருவிழாவான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை யொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்றது.

    தொடர்ந்து மதியம் வேணுகோபால் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் தாலி மற்றும் பூஜை பொருட்களுடன் சீர் தட்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    பின்னர் அனைவருக்கும் கல்யாண உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை கம்பு நடுதல், அக்னி சட்டி ஊர்வலம் மற்றும் அம்மன் தேர் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையம் அருள்முருகன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்::

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நல்லி

    யாம்பாளையம் அருள்முருகன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.

    உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, கலச பூஜை, ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல், காயத்திரி ஹோமங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் காலை 9.30 மணிக்கு

    மேல் வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிர மணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடை பெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை கட்டப்பட்டது.

    திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். திருக்கல்யாண விழா ஏற்பாடு களை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பெரம்பலூர் மதனகோபாலசாமி கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கோவிலின் வடக்குபகுதியில் 10 நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கபட்டிருந்த சொர்க்கவாசல் அடைக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 2-ந்தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதனைதொடர்ந்து இராப்பத்து நிகழ்ச்சி 10 நாட்கள் சிறப்பு ஆராதனையுடன் நடந்தது. நிறைவு நாளான நேற்று இரவு நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி உற்சவ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே சன்னதி அக்ரஹாரம் வழியாக வந்து கோவில் முன்புறம் உள்ள ஆஞ்சநேயர் கம்பத்தை 3 முறை வலம் வந்து மீண்டும் சொர்க்கவாசல் வழியாக கோவிலை அடைந்தார்.

    பல்லக்கில் இருந்து உற்சவ பெருமாள் இறங்கியதும் கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் பட்டாச்சாரியார் குழுவினர் பெருமாள் முன்பு நம்மாழ்வாரின் பாசுரங்களை பாடி சேவித்து நம்மாழ்வாருக்கு அரங்கநாதர் மோட்சம் அருளிய நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து கோவிலின் வடக்குபகுதியில் 10 நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கபட்டிருந்த சொர்க்கவாசல் அடைக்கப்பட்டது. இனி அடுத்த வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.


    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சந்தை பேட்டையை ஒட்டி உள்ள பெரிய தெப்பக்குளத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செப்ப தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • கடந்த 51 ஆண்டு களாக பல்வேறு காரணங்களால் இந்த விழா நடைபெறவில்லை.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சந்தை பேட்டையை ஒட்டி உள்ள பெரிய தெப்பக்குளத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செப்ப தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 51 ஆண்டு களாக பல்வேறு காரணங்களால் இந்த விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தெப்ப தேர உற்சவம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் விரும்பினர்.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தெப்பத்தேர் விழா நடத்த அனுமதி அளித்தது.விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இன்று தெப்பத்திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    தெப்பக்குளம்

    கிருஷ்ண தேவராயர் மன்னர் காலத்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க இந்த தெப்பக்குளம் 1512-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் திருமலையில் இருந்து பரிவார மூர்த்தி களுடன் நகருக்கு எழுந்த ருளியும்போது பெரிய தெப்ப குளத்தில் தெப்போற்சவம் நடந்ததாக கூறப்படுகிறது. திருச்சி சமயபுரம், ஸ்ரீரங்கம் தெப்பத்தேர் அமைத்து நடத்தும் குழுவினர் இந்த தேரை உருவாக்கியுள்ளனர்.

    90பேரல்களை கட்டி அதன் மீது பலகைகள் அமைத்து சவுக்கு கட்டைகளை வைத்து கட்டியுள்ளனர். நேற்று தெப்பத்தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.

    இன்று மாலை நடைபெறும் தெப்பத் தேர் உற்சவத்தை காண பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.

    • தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்கின்ற சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது.
    • சுவாமிநாதசாமிக்கு சிறப்பு அபிஷேகமும் சண்முகார்ச்சனையும் நடைபெற உள்ளது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அணுகையுடன் தொடங்கியது. வருகிற 4 - ந் தேதி வரை விழா நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகருக்கு 108 சங்காபிஷேகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு தாயார் மீனாட்சி அம்மனுடன் ஸ்ரீ சண்முக சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்கின்ற நிகழ்சியும் தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்கின்ற சூரசம்ஹார நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவீதி வழியாக ஸ்ரீ சண்முகர் உலா வந்து கோயிலை வந்தடைந்தார்.

    விழாவில் இன்று காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளன. பின்னர் மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் விழா நடைபெற உள்ளது.

    மேற்படி நாட்களில் ஸ்ரீ சுவாமிநாத சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் சண்முகார்ச்சனையும் நடைபெற உள்ளது .

    இதனை காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடாக பக்தர்கள் வந்து செல்வதற்கு பேருந்து வசதி, கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் எளிதில் கீழ்ப்பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வண்ணம் தெற்கு ராஜகோபுரத்தில் இருந்து சாய்வு தளம் அமைத்து சக்கர நாற்காலியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கல்கண்டு பால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை கோவில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் கண்காணிப்பாளர், பணியா ளர்கள் செய்திருந்தனர்.

    • 7 சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    • ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரை வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் நாள் மற்றும் மாத கடைசி நாளில் 7 சுவாமிகள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று ஐப்பசி முதல் நாளில் ரங்கநாத பெருமாள், மீனாட்சி சுந்தரேசுவரர், சிதம்பர விநாயகர், கைலாசநாதர், கோதண்ட ராமர், கிருஷ்ணர், கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேள தாளத்துடன் நகரில் முக்கிய வீதிகளின் வலம் வந்து மதியம் தேவகோட்டை விருசுழி ஆற்றை வந்தடைந்தது.

    ஆற்றில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப் பட்டன.

    முடிவில் அனைத்து சுவாமிகளும் பிரியாவிடை பெற்று முக்கிய வீதி வழியாக அந்தந்த கோவில்களுக்கு சென்றடைந்தன. இந்த விழாவில் தேவகோட்டை காரை சேர்க்கை கோட்டூர் நைனார் வயல் அடசி வயல் கள்ளிக்குடி சேன்டல் பெரியாண், திருமண வயல் பாவனக்கோட்டை பூங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரை வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.

    • வருகிற 30-ம் தேதி சண்முகருக்கு 108 சங்காபிஷேகம்.
    • 31-ந் தேதி இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவம்.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 24-ந்தேதி அன்று இரவு 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, அணுகையுடன் தொடங்கி அடுத்த மாதம் 4 - ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு 25ஆம் தேதி அன்று சந்திரசேகரர், அம்பாள், வள்ளி, தெய்வானை, சண்முகர் சமேதமாக வீரகேசரி வீரபாகு உடன் மலைக் கோயிலில் இருந்து படியிறங்கி உற்சவம் மண்டபத்தில் காலை 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள் எழுந்தருதல் நிகழ்ச்சியும், தினமும் இரு வேளையும் சந்திரசேகர் வீரபாகு மற்றும் வீரகேசரி ஆகியோர் சூரபத்மனுடன் எதிர்கொண்டு யாகசாலை பூஜை நடைபெற்ற பின் திருவீதி உலா நடைபெற உள்ளது.

    இதன் முக்கிய நிகழ்ச்சியான வருகின்ற 30ஆம் தேதி அன்று வள்ளி தெய்வானை சமேத சண்முகருக்கு காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு தாயார் மீனாட்சி அம்மனுடன் ஸ்ரீ சண்முக சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்வும் மற்றும் கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்கின்ற நிகழ்வும் தெற்கு வீதியில் சூர பத்மனை வதம் செய்கின்ற நிகழ்வும் நடைபெற்று திருவீதி வழியாக சண்முகர் உலா வந்து கோயிலை வந்தடைகிறார்.

    அதனை தொடர்ந்து 31ஆம் தேதி அன்று காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி மற்றும் இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெற உள்ளன.

    அதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் விழா நடைபெற உள்ளது .

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் கண்காணிப்பாளர், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திருப்புவனம் அருகே உள்ள கொந்தகை பெருமாள் கோவிலில் கருட வீதி உற்சவம் அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது.
    • வைணவ திவ்யதேச தலங்களில் ஒன்றும் ஆகும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவில் உள்ளது. இது திருமலையாழ்வாரின் அவதார திருத்தலம் ஆகும். வைணவ திவ்யதேச தலங்களில் ஒன்றும் ஆகும்.

    தென்கலை வைணவ மரபின் முதன்மை ஆச்சாரியார் மணவாளமாமுனிகள், குரு திருவாய்மொழி பிள்ளையிடம் உபதேச சாரங்களை கற்று தெளிந்தது இந்த கோவிலில் தான். இங்கு கோவில் கொண்டுள்ள பெருமாளை வழிபடுவோர் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

    இறைவனை பூரம் நட்சத்திரத்தில் வணங்கி வழிபடுவோருக்கு திருமணத்தடைகள் நீங்கும்.பதவி உயர்வுகள் கிட்டும் என்பது ஐதீகம் ஆகும்.

    கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு ஸ்தபன, விசேட திருமஞ்சனமும், 11.30 மணிக்கு விசேட தீபாராதனை, தீர்த்த கோஷ்டி பிரசாதம் வழங்குதலும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தெய்வநாயகப் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடக்கிறது.

    ×