குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
Published on

குன்னூர்,

குன்னூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் வருடந்தோறும் தேர்த்திருவிழா வெகு விமரி சயைாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

முக்கிய திருவிழாவான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை யொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்றது.

தொடர்ந்து மதியம் வேணுகோபால் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் தாலி மற்றும் பூஜை பொருட்களுடன் சீர் தட்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

பின்னர் அனைவருக்கும் கல்யாண உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை கம்பு நடுதல், அக்னி சட்டி ஊர்வலம் மற்றும் அம்மன் தேர் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com