search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி எடப்பாடி சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தெப்பத் தேர் உற்சவம்
    X

    புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி பெரிய ஏரியில் தெப்ப தேர் உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி எடப்பாடி சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தெப்பத் தேர் உற்சவம்

    • புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜையுடன், பெருமாள் சுவாமி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் அதிகாலையில் பெருமாளுக்கு 108 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    எடப்பாடி:

    புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜையுடன், பெருமாள் சுவாமி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக எடப்பாடி மேட்டுதெரு சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் அதிகாலையில் பெருமாளுக்கு 108 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சவுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தெப்ப உற்சவம்

    விழாவின் முக்கிய நிகழ்வாக எடப்பாடி பெரிய ஏரியில் தெப்ப தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க ஏரியின் மறுகரையில் உள்ள வெள்ளூற்று பெருமாள் சன்னதிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் சவுந்தரராஜ பெருமாள் சன்னதியை வந்தடைந்தார்.

    இதேபோல் எடப்பாடி அடுத்துள்ள வீரப்பம்பாளையம் வெள்ளைகரடு மலை கோவிலில் உள்ள திம்மராய பெருமாள் சன்னதி, பழைய எடப்பாடி சென்றாய பெருமாள் ஆலயம், எடப்பாடி நரசிம்ம மூக்கரை பெருமாள் கோவில், பூலாம்பட்டி மலைமாட்டுப் பெருமாள் கோவில், ரெட்டிபட்டி கிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×