search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interviews"

    • மோடி, 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு முறை கூட பேட்டியளித்ததில்லை
    • சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து கேட்டால் முகத்தை திருப்பி கொள்வார் என்றார் ஜஃப்ரெலாட்

    கடந்த 2014ல் முதல்முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி.

    அவரது முதல் பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் 2019ல் பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார்.

    காங்கிரஸ் கட்சி அல்லாத, காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறாத ஒரு கட்சியில் இருந்து தொடர்ந்து 2 முறை ஒருவர் பிரதமர் ஆனது நாட்டிலேயே அப்போதுதான் முதல்முறையாக நடந்தது.

    இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மீண்டும் பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க.வினால் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒருவர் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதும், தொலைக்காட்சியில் மக்களுக்கு செய்தியளிப்பதையும் கடந்து ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நடைமுறையை ஒரு முறை கூட கடைபிடிக்கவில்லை.


    பலரும் இதனை விமர்சித்து வரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் அரசியல் குறித்து விமர்சித்து வருபவரான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 60 வயதான கிறிஸ்டோஃப் ஜஃப்ரெலாட் (Christophe Jaffrelot) இதனை விமர்சனத்துள்ளார்.

    கிறிஸ்டோஃப் விமர்சனத்தில் தெரிவித்ததாவது:

    பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் மோடி, ஊடகவியலாளர்கள் சந்திப்பையோ, கலந்துரையாடல்களையோ ஏன் தவிர்க்கிறார்? ஏனென்றால், அவர் பேச்சில் குறிப்பிடும் "இந்தியா" என ஒரு இந்தியா இல்லவே இல்லை.

    இல்லாத ஒரு இந்தியா இருப்பதாக மிக அழகாக நீங்கள் கற்பனை செய்து வைத்துள்ள நிலையில், கற்பனையை உடைக்கும் வகையில் எந்த கேள்வி எழுப்பப்பட்டாலும், அது ஒரு வெற்றிடத்தை காட்டி விடும்.

    பொருளாதாரம் சிறப்பாக இல்லை. சீனாவுடனான உறவுமுறை சரியாக இல்லை. இது குறித்து கேட்கப்பட்டால் அவர் முகத்தை திருப்பி கொள்வார்.

    சீனா நம் நாட்டை ஆக்கிரமித்துள்ளது என்பதை அவர் எவ்வாறு ஒப்பு கொள்வார்? அவரால் பதில் சொல்ல முடியாது.

    அதைத்தான் அவர் மாதந்தோறும் "மன் கி பாத்" (Mann ki baat) நிகழ்ச்சியில் செய்து வருகிறார். அது ஒரு ஒன்வே டிராஃபிக்.

    ஆனால், பத்திரிகையாளர்கள் அவரிடம் அவர் நம்பிக்கைக்கு எதிரான கேள்விகளை எழுப்பினால் அவரால் சமாளிக்க முடியாது.

    இவ்வாறு கிறிஸ்டோஃப் கூறினார்.

    • நடப்பாண்டில் மனநல ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
    • மதுரையில் சர்வதேச ரோட்டரி தலைவர் பேட்டியளித்தார்.

    மதுரை

    மதுரையில் ரோட்டரி தலைவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் 1500-க்கும் மேற்பட்ட ரோட்டரி ஆளுநர்கள், முன்னாள் ஆளுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சர்வதேச ரோட்டரி சங்க தலைவர் கார்டன் மெக்கனரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரோட்டரி இயக்கத்தில் உலகம் முழுவதும் 14 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் மட்டும் 1.80 லட்சம் பேர் உள்ளனர். 200 நாடுகளில் ரோட்டரி சங்கம் சேவை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பெண்கள் முன்னேற்றம், ஆரோக்கியம் நல்வாழ்வு, கல்வி மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு உதவும் வகையில், ரூ.28 ஆயிரம் கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். நடப்பாண்டில் (2023-24) மனநல ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    பொதுமக்கள் மன நோயாளிகளை கனிவுடன் பார்க்கும் வகையில் மாற்றுவோம். சென்னை எழும்பூரில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் மென்டல் ஹெல்த் மையம், ரூ.1 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரோட்டரி மண்டல முன்னாள் ஆளுநர் முருகானந்தம், பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், முன்னாள் ஆளுநர் குமணன், ஆனந்த ஜோதி, கார்த்திக், இந்நாள் ஆளுநர் ஜெரால்டு, அடுத்த நிதி ஆண்டுக்கான ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    மதுரை பசுமலை ஓட்டலில் ரோட்டரி சங்க கூட்டத்துக்கான ஏற்பாடு களை வெங்கடேஷ், முரு கையா பாண்டியன், வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.
    • பொதுமக்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்கா நல்லூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கிபல்வேறு துறைகள் சார்பில் ரூ.31 லட்சத்து 97 ஆயிரத்து 901 மதிப்பில் 131 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் செயல் படுத்திவரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

    ஏழை-எளிய மக்கள் எவ்வித சிரமமுமின்றி நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும். இதற்காக மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை கல்வியாளர்களாக உருவாக்கிட வேண்டும். கல்வி ஒன்றுதான் நிரந்தர சொத்து.

    பொதுமக்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அதற்காக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி களை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சிங்கராஜ், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) உத்தண்டராமன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கலுசிவலிங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, ஊராட்சி மன்ற தலைவர் இசக்கிராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தேர்வுக்குச் செல்வதும் மனதில் ஒருவித பயத்தை கட்டாயம் ஏற்படுத்தி விடும். இன்டர்வியூவில் இதை எல்லாம் செய்தால் வேலை நிச்சயமாக கிடைக்கும்.
    என்னதான் கல்லூரியில் படிக்கும் போது நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் அடுத்தகட்டமாக வேலைக்குச் செல்வது அனைவருக்குமே புதுவித அனுபவத்தை அளிக்கக்கூடியதாகும். குறிப்பாக வேலைக்காகத் தயாராவதும், நேர்காணல்,

    தேர்வுக்குச் செல்வதும் மனதில் ஒருவித பயத்தை கட்டாயம் ஏற்படுத்தி விடும். சிலர் நேர்காணலுக்காக முன்கூட்டியே பயிற்சிகள் எடுத்திருந்தாலும் இறுதியில் நம் எதிரே அமர்ந்து கேள்வி கேட்போரைக் கண்டு அஞ்சியே சொதிப்பி விடுவோம். இப்படி பலரது வாழ்வில் நடந்திருக்கலாம், நடக்கவும் நேரிடலாம். அதற்கு முன்னதாக இன்டர்வியூ-வில் வெற்றிகரமாகச் செயல்பட என்னவெல்லாம் செய்யலாம் என இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

    * பெரும்பாலும் நம் தோல்விகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இந்த பயமே. முடிந்தவரை பயத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். அல்லது பிறரிடம் பயமின்றி இருப்பதைப் போல செயல்படுங்கள். அதுவே உங்களுக்குள் மன தைரியத்தை மேலும் ஊக்குவித்து உங்களைத் திடமாக்கும்.

    * இன்டர்வியூக்கு முன் காத்திருக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற கூகுளில் சென்று ஏதேனும் படியுங்கள். அல்லது ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் நேரத்தைச் செலவிடுங்கள். அவை உங்களது பொது அறிவை மேலும் பலப்படுத்தும். அன்றாட நடப்பைக் கூட அவற்றின் மூலம் அறிய முடியும்.

    * சில சமயங்களில் நேர்காணலின் போது இந்த நிறுவனம் குறித்து கூறுங்கள் என்ற கேள்வியும் கூடக் கேட்கப்படும். வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிறுவனம் குறித்து அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். மேலாளர், நிர்வாகி, தலைவர், நிறுவப்பட்ட வருடம் உள்ளிட்டவற்றை அறிந்து வைத்துக் கொள்வதன் மூலம் உங்களது மீதான மதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும்.

    * வேலை கிடைத்தால் மட்டும் போதும், கொடுத்த வேலையை அப்படியே செய்வேன் என்பதைப் போல பதில் அளிக்காமல் தனக்கான பணியை, நிறுவனத் தயாரிப்பை அடுத்த கட்டத்திற்கு முன்நோக்கி எடுத்துச் செல்லும் வகையிலான பதில்களைக் கூறுங்கள். வேலையளிப்போரே இதில் மெய் சிலிர்த்துவிடுவார்.

    * இந்த இன்டர்வியூ உங்களுக்கு முதன் முறையாக இருந்தாலும் கூட அதனை வெளிக்காட்டாமல் இருங்கள். நிமிர்ந்து அமர்தல், தெளிவாகப் பதில் அளித்தல் உள்ளிட்டவற்றின் மூலம் உங்கள் எதிரே இருப்பவரைக் கவர்ந்திழுங்கள்.



    * ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளீர்கள் என்றால் பழைய நிறுவனத்தைக் குறித்து எக்காரணத்தைக் கொண்டும் தவறாகக் கூறிவிடாதீர்கள். ஏனெனில் பிற்காலத்தில் தற்போது விண்ணப்பித்துள்ள நிறுவனம் குறித்தும் நீங்கள் தவறாகக் கூறலாம் என்ற மன நிலையை ஏற்படுத்தி விடும்.

    * நேர்காணலின் போது எனக்கு அது தெரியும், இது தெரியும் என்ற தேவையற்ற பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். உங்களுக்குத் தெரிந்தால் கூட அதுகுறித்தான முழுத் தகவலையும் வெளிப்படுத்தாமல் ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் உங்களிடம் கேட்கப்படும் கேள்விகள் வளர்ந்துகொண்டே போகும்.

    * பெரும்பாலும் நேர்காணல் தேர்வின் போது கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று தான் உங்களைப் பற்றிக் கூறுங்கள் (Tell me about yourself). இக்கேள்விக்கு உங்களிடம் உள்ள சிறந்த குணங்களை மட்டுமே கூறுங்கள், பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை போன்ற தனித்திறன்களை மட்டும் கூறுங்கள். முடிந்தவரை உங்களது வீக்னெஸை சொல்லாமல் இருங்கள்.

    * ஆள் பாதி ஆடை பாதி என்பதைப் போலவே நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் போதும், தேர்விற்குச் செல்லும் போதும் நன்றாகப் படித்திருந்தாலும், ஆடையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஒருவேலை நீங்கள் சந்தைப் படுத்துதல் போன்ற நிறுவனத்திற்கு தேர்விற்குச் சென்றுள்ளீர்கள் என்றால் சிறந்த ஆடை அணிந்திருப்பது கட்டாயம்.

    * உங்களிடம் நேர்காணலில் ஈடுபட்டுள்ள வேலையளிப்போரின் கண்களை மட்டுமே பார்த்துபேசுங்கள். நீங்கள் கேள்விகளுக்கு தவறான பதில் அளித்தாலும் உங்களது கண்களின் மூலம் வெளிப்படும் உணர்வு சில சமயங்களில் கூடுதலான மதிப்பெண்களை இடும். குறிப்பாக, நீங்கள் எந்த மனநிலையில் உள்ளீர்கள், உங்களது சிந்தனை உள்ளிட்டவற்றைக் கண்களின் மூலமே அறிந்துகொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்தியர் அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார். #DonaldTrump #AmulThapar
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அந்தோணி கென்னடி. 81 வயதான இவர் வரும் 31-ந் தேதி ஓய்வு பெற உள்ளார். இது குறித்து ஜனாதிபதி டிரம்பை கடந்த வாரம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர், அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

    இதையடுத்து காலியாகிற ஒரு நீதிபதி பதவிக்காக 25 பேரது பெயர்களை ஜனாதிபதி டிரம்ப் பரிசீலனை செய்து வருகிறார் என தகவல்கள் கசிந்தன. அந்த 25 பேரில் ஒருவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபர் (49) ஆவார்.



    இந்த நிலையில், அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார்.

    மற்றவர்கள் பிரெட் கவனாக், எமி கோனி பேரட், ரேமண்ட் கேத்லெட்ஜ் ஆவர்.

    அமுல் தாபருக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கன்னல் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இந்த நேர்முக தேர்வு குறித்து ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, “இன்னும் 2 அல்லது 3 பேரிடம் நேர்முகத் தேர்வு நடத்துவேன். அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு உரியவர் தேர்வு செய்யப்படுவார். இது குறித்த அறிவிப்பு 9-ந் தேதி வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படுகிற நபர், மிகச் சிறந்த நபராக இருப்பார்” என்று குறிப்பிட்டார்.

    கடந்த ஆண்டு அமுல் தாபரை 6-வது அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக டிரம்ப் நியமனம் செய்தது நினைவுகூரத்தக்கது.   #DonaldTrump #AmulThapar #tamilnews
    ×