search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amul Thapar"

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு 3 பேரைக் கொண்ட இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் இந்தியர் அமுல் தாபர் பெயர் இல்லை என்றும் ஊடக தகவல் ஒன்று நேற்று கூறியது. #DonaldTrump #AmulThapar
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அந்தோணி கென்னடி (வயது 81), இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் ஏற்படுகிற காலி இடத்தை நிரப்புவதற்கான பணியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு உள்ளார்.

    முதலில் அவர் தகுதியான 25 பேரது பட்டியலை தயார் செய்தார். அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபரும் (49) இடம் பிடித்து இருந்தார்.



    அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் கடந்த 2-ந் தேதி டிரம்ப் நேர்காணல் நடத்தினார். அதைத் தொடர்ந்து மேலும் 3 நீதிபதிகளிடமும், 3 தனி நபர்களிடமும் அவர் நேர்காணல் நடத்தினார்.

    இப்போது 3 பேரைக் கொண்ட இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் இந்தியர் அமுல் தாபர் பெயர் இல்லை என்றும் ஊடக தகவல் ஒன்று நேற்று கூறியது. அந்த பட்டியலில் பிரெட் கவனாக், எமி கோனி பேரட் மற்றும் ரேமண்ட் கெத்லெட்ஜ் ஆகிய 3 பேரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளதாக தேசிய பொது வானொலி செய்தி கூறுகிறது. இந்த 3 பேரில் முதல் 2 பேரில் ஒருவரை டிரம்ப் தேர்வு செய்யலாம் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

    இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிரம்ப் ஓரிரு நாளில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமுல் தாபர், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கான தேர்வில் வாய்ப்பை நழுவ விட்டிருப்பது இது 2-வது முறை ஆகும். ஆன்டனின் ஸ்கேலியா என்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி 2016-ம் ஆண்டு இறந்தபோது, முதல் கட்ட பரிசீலனை பெயரில் அமுல் தாபர் பெயர் இடம் பெற்றிருந்தது. அப்போது நீல் கோர்சச் என்பவரை டிரம்ப் நியமனம் செய்து விட்டார். #DonaldTrump #AmulThapar #Tamilnews 
    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்தியர் அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார். #DonaldTrump #AmulThapar
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அந்தோணி கென்னடி. 81 வயதான இவர் வரும் 31-ந் தேதி ஓய்வு பெற உள்ளார். இது குறித்து ஜனாதிபதி டிரம்பை கடந்த வாரம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர், அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

    இதையடுத்து காலியாகிற ஒரு நீதிபதி பதவிக்காக 25 பேரது பெயர்களை ஜனாதிபதி டிரம்ப் பரிசீலனை செய்து வருகிறார் என தகவல்கள் கசிந்தன. அந்த 25 பேரில் ஒருவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபர் (49) ஆவார்.



    இந்த நிலையில், அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார்.

    மற்றவர்கள் பிரெட் கவனாக், எமி கோனி பேரட், ரேமண்ட் கேத்லெட்ஜ் ஆவர்.

    அமுல் தாபருக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கன்னல் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இந்த நேர்முக தேர்வு குறித்து ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, “இன்னும் 2 அல்லது 3 பேரிடம் நேர்முகத் தேர்வு நடத்துவேன். அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு உரியவர் தேர்வு செய்யப்படுவார். இது குறித்த அறிவிப்பு 9-ந் தேதி வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படுகிற நபர், மிகச் சிறந்த நபராக இருப்பார்” என்று குறிப்பிட்டார்.

    கடந்த ஆண்டு அமுல் தாபரை 6-வது அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக டிரம்ப் நியமனம் செய்தது நினைவுகூரத்தக்கது.   #DonaldTrump #AmulThapar #tamilnews
    ×