search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனநல ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும்
    X

    சர்வதேச ரோட்டரி தலைவர் கார்டன் மெக்கனரி பேட்டியளித்தார்.

    மனநல ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும்

    • நடப்பாண்டில் மனநல ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
    • மதுரையில் சர்வதேச ரோட்டரி தலைவர் பேட்டியளித்தார்.

    மதுரை

    மதுரையில் ரோட்டரி தலைவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் 1500-க்கும் மேற்பட்ட ரோட்டரி ஆளுநர்கள், முன்னாள் ஆளுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சர்வதேச ரோட்டரி சங்க தலைவர் கார்டன் மெக்கனரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரோட்டரி இயக்கத்தில் உலகம் முழுவதும் 14 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் மட்டும் 1.80 லட்சம் பேர் உள்ளனர். 200 நாடுகளில் ரோட்டரி சங்கம் சேவை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பெண்கள் முன்னேற்றம், ஆரோக்கியம் நல்வாழ்வு, கல்வி மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு உதவும் வகையில், ரூ.28 ஆயிரம் கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். நடப்பாண்டில் (2023-24) மனநல ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    பொதுமக்கள் மன நோயாளிகளை கனிவுடன் பார்க்கும் வகையில் மாற்றுவோம். சென்னை எழும்பூரில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் மென்டல் ஹெல்த் மையம், ரூ.1 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரோட்டரி மண்டல முன்னாள் ஆளுநர் முருகானந்தம், பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், முன்னாள் ஆளுநர் குமணன், ஆனந்த ஜோதி, கார்த்திக், இந்நாள் ஆளுநர் ஜெரால்டு, அடுத்த நிதி ஆண்டுக்கான ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    மதுரை பசுமலை ஓட்டலில் ரோட்டரி சங்க கூட்டத்துக்கான ஏற்பாடு களை வெங்கடேஷ், முரு கையா பாண்டியன், வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×