search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delays"

    • திட்டப்பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும் என்று ஊராட்சித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணிகளை முடிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில், ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது தலைமையில் நடந்தது.

    கடந்த நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு செய்தார். இதில் அவர் பேசியதாவது:-

    ஊரக வளர்ச்சித்து றையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுதல், அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கும் பணி, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 15-வது நிதி குழுவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், சமத்துவபுரம் வீடுகளை சீரமைக்கும் பணிகள், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணிகளை முடிக்க வேண்டும்.

    அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மற்றும் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை பயனாளிகளுக்கு காலதாமதமின்றி கட்டுமான பொருட்களை வழங்க வேண்டும்.

    ஒவ்வொரு நிதியாண்டி லும் மேற்கொள்ளப்பட தேர்வு செய்யப்பட்ட பணிக ளுக்கான ஆணைகளை காலதாமதமின்றி பயனா ளிகளுக்கு வழங்கி பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் மற்றும் மண்டபம் ஊராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த பதிவேடுகளை ஆணையர் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர் ஊராட்சிகள் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு திட்டப்பணிகள் ஊராட்சிகளுக்கு உரிய காலத்தில் அனுமதி வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்து காலதா மதமின்றி பணிகளை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    2 மாதங்கள் நடைபெற உள்ள அமர்நாத் யாத்திரை இன்று துவங்க இருந்த நிலையில், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #AmarnathYatra
    ஸ்ரீநகர்:

    ஆண்டு தோறும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வர். கடந்த ஆண்டு இந்த யாத்திரையின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இந்த ஆண்டு யாத்திரைக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ரேடியோ அதிர்வெண் பயன்படுத்தி யாத்ரீகர்களின் வாகனங்களை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று துவங்கி ஆகஸ்ட் மாதம் இறுதி வரை இந்த அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது.



    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பாரம்பரியமிக்க பகல்காம் மற்றும் பல்தல் பாதைகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பாதயாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மழை நின்ற பின்னர், பாத யாத்திரை மேற்கொள்வதற்கான பாதுகாப்பான நிலையை உறுதி செய்த பின்னர் பனி லிங்கம் உருவாகும் புனித குகைக்குச் செல்ல யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #AmarnathYatra
    ×