search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரிசு நிலங்களை மேம்படுத்த ரூ.3.70 கோடியில் திட்டபணிகள்
    X

    தரிசு நிலங்களை மேம்படுத்த ரூ.3.70 கோடியில் திட்டபணிகள்

    • கலெக்டர் தகவல்
    • 100 கிராம ஊராட்சிகள் தேர்வு

    வேலூர்:

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச் சித் திட்டத்தின் கீழ், வேலூர் மாவட்டத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தும் வகையில், ரூ.3.70 கோடியில் திட்டப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுவருகிறது.

    இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து கிரா மங்களும் 5 ஆண்டுகளில் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சி, தன்னிறைவு அடைந்திடும் வகையில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    புதிய நீர் ஆதாரங்களை உரு வாக்கி, தரிசு நிலங்களை சாகுப டிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி, சாகுபடி பரப்பை அதிகரித்தல், வேளாண் உற்பத்தி, உற்பத்தி திறனை அதிகரித்தல், உழவர்க ளின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

    இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சமு தாய நீர் ஆதாரத்தை உருவாக் குதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், சிறுபாசன குளங் கள், ஊரணிகள், நீர் வரத்துக் கால் வாய்களைத் தூர்வாரி மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிற 2021 - 2022- ஆம் ஆண்டில் 317 சிறு கிராமங்களை உள் ளடக்கிய 43 கிராம ஊராட்சிக ளில் 390.26 ஏக்கர் பரப்பளவில்22 தொகுப்புகள் தேர்ந்தெடுக் கப்பட்டு 293 விவசாயிகள் பயன் பெறும் வகையில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறி யியல் துறை மூலம் ரூ.2 கோடியே 73 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    2022 - 2023 ஆம் ஆண்டில் 271 சிறு கிராமங்களை உள்ளடக்கிய 57 கிராம ஊராட்சிகளில் 293.10 ஏக்கர் பரப்பளவில் 20 தொகுப்பு கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 230 விவ சாயிகள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ.95 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, 2021 - 2023 ஆகிய இரு நிதியாண்டுகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 கிராம ஊராட்சி களில்தேர்வு செய் யப்பட்டு, அந்த கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை மேம்படுத் தும் வகையில் இதுவரை ரூ.3.70 கோடி மதிப்பிலான திட்டப் பணி கள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×