search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selvaraj"

    • பெரம்பலூரைச் சேர்ந்த இயக்குனர் செல்வராஜ் என்ற அப்துல் ரஹ்மான்.
    • இவர் ’தமிழ் தேசம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    பெரம்பலூரைச் சேர்ந்த செல்வராஜ் என்ற அப்துல் ரஹ்மான் (வயது 40). இயக்குனரான இவர் மறைந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணனை வைத்து 'தமிழ் தேசம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் பிரபல ரவுடியான இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

    செல்வராஜ் என்ற அப்துல் ரஹ்மான் நேற்று தனது பிறந்த நாள், திருமண நாளை பெரம்பலூர், பாலக்கரை பகுதியில் ஒரு தனியார் ஓட்டலில் உள்ள பாரில் தன்னுடைய நண்பர்களான பெரம்பலூர் அன்பு நகரை சேர்ந்த தியாகராஜ் (43) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டாடினார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பாருக்குள் அதிரடியாக புகுந்து மது அருந்தி கொண்டிருந்த அப்துல் ரஹ்மானை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் அப்துல் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக்கண்ட அப்துல் ரஹ்மானின் நண்பர்கள் மற்றும் பாரில் மது அருந்தி கொண்டிருந்த சக மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும் இது குறித்து பார் ஊழியர்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். போலீஸ் மோப்ப நாய் பைரவா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரஹ்மான் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் தனியார் ஓட்டல் பாரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, அப்துல் ரஹ்மானுடன் சேர்ந்து மது அருந்திய நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கோவை செல்வராஜ் சொல்கிறார்.
    • ஒருவர் காமிரா பையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    கோவை

    சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ், கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    முதல்-அமை ச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அமைதியாக இருக்கிறது. தொடர்ந்து தமிழக அரசு மீது குறை கூறி வரும் பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தைதடுக்க சட்டம் இயற்ற குரல் கொடுக்க தயாராக இருக்கிறாரா?, இந்த சூதாட்டம் காரணமாக ஏராளமான இளைஞர்கள் உயிரை மாய்த்து வருவதுடன் கடனுக்குள்ளாகி வருகி றார்கள். கொரோனா காலத்தில் வங்கியில் கடன் வாங்கியவர்கள் அதை செலுத்த முடியாமல் அவதியடை ந்தனர். ஆனால் அதற்கு வட்டி கூட தள்ளுபடி செய்யாத மத்திய அரசு, 540 தொழில் அதிபர்கள் செலுத்த வேண்டிய ரூ.12½ லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்து உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது மத்திய அரசு மக்களுக்கான அரசு இல்லை. தொழில் அதிபர்களுக்காக தான் இருக்கிறது. விரைவில் கோவையில் இருந்து 3 ஆயிரம் பேரை சென்னை அழைத்துச் சென்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைப்பேன். இவவாறு அவர் கூறினார். 

    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • தி.மு.க. நிர்வாகிகள்,மாநகராட்சி அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலிபாளையம் பகுதி 44 வது வார்டில் உள்ள கோம்பை தோட்டம் பகுதி பள்ளிவாசல் அருகே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணிகளை செல்வராஜ் எம்.எல்.ஏ., இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது திருப்பூர் தெற்கு மாநகர தி.மு.க. செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜ்,வடக்கு மாநகரக் அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வாலிபாளையம் பகுதி செயலாளர் மு .க .உசேன் , 44 வது வட்ட செயலாளர் ரபிக், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், திலகராஜ் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள்,மாநகராட்சி அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

    திருச்சியில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது. #FormerMinisterSelvaraj
    திருச்சி:

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் (வயது 75). என்ஜினீயரான இவர் 1980-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை திருச்சி தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருந்தார். இவர் 1987-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்தார்.

    ம.தி.மு.க. தொடங்கப்பட்டபோது, அந்த கட்சிக்கு சென்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்களில் செல்வராஜூம் ஒருவர். பின்னர் மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்த இவர் 2006-ம் ஆண்டு முசிறி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் செல்வராஜூக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கடந்த ஓர் ஆண்டு காலமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் திருச்சி வந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், செல்வராஜ் சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் நலம் விசாரித்தார்.

    இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார். அவரது உடல் தில்லைநகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. செல்வராஜின் உடலுக்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    செல்வராஜின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 3 மணி அளவில் திருச்சி தில்லைநகர் முதல் குறுக்கு சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது. செல்வராஜூக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.  #FormerMinisterSelvaraj



    ×