என் மலர்
நீங்கள் தேடியது "கருப்பு நாள்"
- எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. வாக்குகள் திருடப்படுகின்றன.
- நாடு அறிவிக்கப்படாத அவசர நிலையை நோக்கிச் செல்கிறது என்றார்.
மும்பை:
காங்கிரஸ் எம்.பி.யான பிரணிதி ஷிண்டே மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை இன்று சந்தித்தார். அதன்பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியின் பிறந்தநாள் எங்களுக்கு கருப்பு நாள்.
நாடு அறிவிக்கப்படாத அவசர நிலையை நோக்கி செல்கிறது. எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. வாக்குகள் திருடப்படுகின்றன.
பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மோடிக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
விவசாயிகளின் போராட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
பாகிஸ்தானுடன் சண்டை போடும் அதே வேளையில், அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறோம்.
இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
சோலாப்பூர் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டாக சோலாப்பூர் நகராட்சித் தேர்தல்கள் நடத்தப்படாதது ஜனநாயகப் படுகொலை என தெரிவித்தார்.
- சுதந்திர இந்தியாவில் இன்றைய நாள் கருப்பு நாள்.
- நாட்டில் ஜனநாயகம் தோற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.
சென்னை:
முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வீடியோ உரையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர இந்தியாவில் இன்றைய நாள் கருப்பு நாள். ஜனநாயகத்தின் குரல்வலையை நெறித்து அவசர நிலையை காங்கிரஸ் அமுல்படுத்திய தினம்.
இன்று பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. தி.மு.க.வும் அதற்கு துணைபோகிறது.
அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் நாட்டில் அவசர நிலையை இந்திரா பிரகடனப்படுத்தினார். பத்திரிகைகள் முடக்கப்பட்டன. தலைவர்களை கைது செய்தனர். யாரை எங்கு வைத்துள்ளார்கள் என்பதுகூட தெரியாத இருண்ட சூழ்நிலை நிலவியது.
ஒரு நாட்டில் அவசர நிலை அமுல்படுத்தினால் அந்த நாட்டில் ஜனநாயகம் தோற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.
ஆனால் இன்று பிரதமர் மோடியை பார்த்து அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார் என்கிறார்கள். ஆனால் எனது புனிதநூல் எங்கள் அரசியல் அமைப்பு சட்ட புத்தகம்தான் என்று நம் நாட்டில் மட்டுமல்ல அமெரிக்க பாராளுமன்றத்திலும் மோடி முழங்கினார்.
இன்று அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கப் போவதாக காங்கிரஸ் கூச்சல் போடுகிறது. அதற்கு தி.மு.க.வும் துணைபோகிறது.
அரசில் அமைப்பு சட்ட நகலை கிழித்து எறிந்து போராட்டம் நடத்தியவர்கள்தான் தி.மு.க.வினர். இதனால் வழக்கை சந்திக்க நேர்ந்தது. நாங்கள் அரசியல் அமைப்பு சட்ட நகலை எரிக்கவில்லை. வெறும் காகிதத்தைதான் எரித்தோம் என்று பல்டி அடித்தார் கருணாநிதி.
அப்போதும் அரசியல் சட்டத்தை பாதுகாக்க குரல் கொடுத்தது பா.ஜனதா தலைவர்கள்தான். நாடு முழுவதும் ஜனதா, பா.ஜனதா, காமராஜ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
எனது தந்தை காமராஜரின் பழைய காங்கிரசில் இருந்தார். 6 மாதங்கள் அவர் சிறையில் இருந்தார். நான் பள்ளி மாணவியாக இருந்தேன். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அம்மாவை கவனிக்க யாருமில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது நானே அழுதுகொண்டு ஆபரேசனுக்கு கையெழுத்துபோட்டுக் கொடுத்தேன். அந்த நிகழ்வுகள்தான் காங்கிரசை வெறுக்க வைத்தது.
இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பது மோடி அரசு. ஆனால் அதன் குரல்வளையை நெறித்த காங்கிரசையும், அதற்கு துணைபோன தி.மு.க.வையும் புறக்கணிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.






