என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்"
- நாங்கள் அந்த நாயுடன் மிகவும் பாசமாகிவிட்டதால், அதை அதன் பழைய இடத்திற்கே திருப்பி அனுப்ப மனம் வரவில்லை.
- பீச்சஸ் எங்கள் செல்லப் பிராணியாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது அலுவலகத்தின் முன்பு இருந்த தெருநாயை வளர்ப்பு பிராணியாக பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
2021-ல் நான் அமைச்சரான சில மாதங்களில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள எனது அலுவலகத்திலிருந்து வெளியேறும்போது உடைந்த காலுடன் ஒரு நாயை கண்டேன் (செயலகத்தில் இருந்த பல நாய்களில் அதுவும் ஒன்று). சமீபத்தில் ஒரு விபத்தில் அதன் கால் உடைந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் (அது தவறான தகவல் என்று பின்னர் தெரியவந்தது), அதன் காலைச் சரிசெய்து, அதை மீண்டும் அதன் இடத்திற்கே கொண்டு சேர்க்க முடிவு செய்தேன்.
ஆனால் மருத்துவரிடம் சென்றபோது, அது பல மாதங்களுக்கு முன் நடந்த விபத்து என்றும் உடைந்த கால் தவறான முறையில் கூடிவிட்டதும் தெரியவந்தது. பின்னர் அதற்கான சிகிச்சை சில மாதங்கள் நீடித்தது. நாயின் காலில் ஒரு உலோகத் தகடு மற்றும் திருகுகள் பயன்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, அதன் காலை சரிசெய்ய ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஒரு (மனிதர்களுக்கான) எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரின் உதவியும் தேவைப்பட்டது!
அதற்குள் நாங்கள் அந்த நாயுடன் மிகவும் பாசமாகிவிட்டதால், அதை அதன் பழைய இடத்திற்கே திருப்பி அனுப்ப மனம் வரவில்லை. அதனால் நாங்கள் அதற்கு 'பீச்சஸ்' என்று பெயரிட்டோம், அது எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாகிவிட்டது. சமீபத்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, செயலகத்தில் இருந்த நாய்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன... அவை எங்கு கொண்டு செல்லப்பட்டன என்று தெரியவில்லை.
மறுபுறம் மறுபுறம், சென்னை மாநகராட்சியின் புதிய விதிகளின் கீழ், இப்போது பீச்சஸ் எங்கள் செல்லப் பிராணியாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






