search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    மதுரையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    • மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை கார் வெடிப்பு மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் தீவிர படுத்தி உள்ளனர்.

    24 மணி நேர வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளையும் முடுக்கி விட்டுள்ள போலீசார் முன்னே எச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரங்காட்டி வருகிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், மார்க்கெட்டுகள் வழிபா ட்டுத் தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் நீண்ட நேரமாக நிறுத்தப்படும் வாகனங்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    அழகர் கோவில், ஒத்தக்கடை, திருமங்கலம், கப்பலூர், உசிலம்பட்டி, வடக்கம்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் சி.ஆர்.பி.எப். போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நகர் பகுதியில் போலீஸ் கமிஷன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கிடமான வாகனங்களும் சோதனை நடத்தப்படுகிறது. போலீசார் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×