search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karamadai"

    • ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்
    • முக்கிய நிர்வாகிகள் உள்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை நகராட்சி க்குட்பட்ட காமராஜர் நகர், காந்தி நகர், அம்பேத்கர் நகர், வாணியர் வீதி, அண்ணா வீதி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலைஞரின் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய தார் சாலைகள் அமைத்தல், தார் சாலைகளை புதுப்பித்தல், புதிதாக போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. திமுக துணைப்பொது செயலாளரும், நீலகிரி எம்.பி. யுமான ஆ.ராசா கலந்து கொண்டு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. பா.அருண்குமார், திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட அவைத்தலைவர் புருஷோத்தமன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மனோகரன், நகர செயலாளர் வெங்கடேஷ், நகர் மன்றத்தலைவர் உஷா வெங்கடேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உள்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். 

    • அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.
    • கடந்த 28ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மக திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோ ட்டம் நாளை மறுநா ள்(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.இதில் பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்து போலீசார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    அதன்படி கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் பெட்டத்தாபுரம், திம்ம ம்பாளையம், மங்களக்கரை புதூர், டீச்சர்ஸ் காலனி வழியாக காந்திநகர் செல்ல வேண்டும்.

    அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் வாகனங்கள் காந்திநகர் வழியாக தொட்டிபாளையம் பெள்ளாதி, கண்ணார்பா ளையம் வழியாக மத்தம்பா ளையம் செல்லும்.

    தேர் திருவிழா நடைபெறும் 6 மற்றும் பந்த சேவை நிகழ்வு நடைபெறும் 7-ந் தேதி ஆகிய இரு தினங்களிலம் இந்த போக்குவரத்து மாற்றமானது இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கோவை-மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம்-கோவை செல்லும் வாக னங்கள் இதனை பின்பற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி நடைபெற்றது
    • போட்டியில் மொத்தம் 480 பேர் பங்கேற்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா, காரமடை மேற்கு ஒன்றிய இளைஞரணி மற்றும் விவேகானந்தர் பசுமை இயக்கம் சார்பில் தேசிய இளைஞர் தினம் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இதற்கு காரமடை மேற்கு ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.

    கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, மாவட்ட பொதுக்குழு செயலா ளர்கள் சத்தியமூர்த்தி, சுபாஷ், மாவட்டத் துணைத் தலைவர் விக்னேஷ், ஒன்றிய இளைஞரணி தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக காரமடை ஸ்ரீ விநாயக வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளி தாளாளர் சோமசுந்தரம் பங்கேற்றார். மாரத்தான் போட்டி மருதூர் பெட்ரோல் பங்கில் தொடங்கி வெள்ளியங்காடு பகுதியில் உள்ள போரேகவுடர் திருமண மண்டபத்தில் முடிவுற்றது.

    இதில் காரமடை நகர தலைவர் ஆனந்தகுமார், நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கதிர்வேல், மத்திய அரசின் நலத்திட்ட மாவட்ட தலைவர் ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.போட்டியில் மொத்தம் 480 பேர் பங்கேற்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

    • திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.
    • 3 மணிக்கு திம்மராய பெருமாள் கருடவாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை கா.புங்கம்பாளையம் திம்மராய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து 10 மணிக்கு அம்மன் அழைப்பும் மற்றும் பஜனை நடைபெற்றது. பின் மதியம் 1.30 மணிக்கு மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 3 மணிக்கு திம்மராய பெருமாள் கருடவாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திம்மராயபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த உற்சவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • சிறுத்தை, யானை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தாக்கியும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் வருகிறது.
    • கழுகு கொத்தி தேவாங்கு காயம் அடைந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தன

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாைளம், காரமடை ஆகிய பகுதிகள் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகள் ஆகும்.

    இங்கு புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டு பன்றி, காட்டெருமை உள்பட ஆபத்தான விலங்குகளும், மயில், மான், முயல், தேவாங்கு, குரங்கு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் சிறுத்தை, யானை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தாக்கியும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் வருகிறது.

    மனித-விலங்கு மோதலும் ஏற்படுகிறது. மான், மயில் ஊருக்குள் புகும்போது நாய்கள் அதனை கடித்து காயப்படுத்தி விடும்.அதனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்து வருகின்றனர். இந்த நிலையில் அத்திகடவு முகாமில் உள்ள சிறப்பு அதிரடி படையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு 4 வயது தேவாங்கு ஒன்று ஒரு கண் பார்வையற்று கையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியவாறு பரிதாபமாக அமர்ந்து இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறப்பு அதிரடி படையினர் தேவாங்கை மீட்டு தண்ணீர் கொடுத்து அரவணைத்தனர். பின்னர் அதனை பத்திரமாக மீட்டு வெளியே வந்தனர்.

    உடனே காரமடை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காரமடை வன அலுவலர் திவ்யா தலைமையிலான வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களிடம் தேவாங்கை ஒப்படைத்தனர் .வனத்துறையினர் சிகிச்சைக்காக தேவாங்கை வெள்ளியங்காடு கால்நடை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தேவாங்கிற்கு சிகிச்சை அளித்து அதனை கண்காணித்து பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.கழுகு கொத்தி தேவாங்கு காயம் அடைந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். அல்லது அதனை யாராவது வேட்டையாடும் போது காயம் அடை ந்து தப்பியதா? அல்லது வேறு ஏதாவது காரணமா எனவும் வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது
    • அறையில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 3 அழகிகளை போலீசார் மீட்டனர்.

    கோவை

    கோவை மாவட்டம் காரமடை குந்தா காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்துவது போல இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

    பின்னர் போலீசார் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்த பெண் புரோக்கர் பரிமளா (வயது 36) என்பவரை கைது செய்தனர். அங்குள்ள அறையில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 28, 33 ,24 வயதுடைய 3 அழகிகளை போலீசார் மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட பெண் புரோக்கர் பரிமளாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீட்கப்பட்ட 3 அழகிகளையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

    • மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மருதூர் ஊராட்சி.
    • 2 பேரையும் சஸ்பெண்டு செய்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மருதூர் ஊராட்சி. இந்த ஊராட்சி செயலாளராக சதீஷ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார், காரமடை ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர் உடன் சேர்ந்து மருதூர் ஊராட்சியில் சாலை அமைத்தல், ஊராட்சிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குதல் மற்றும் பல்வேறு பணிகளில் ஊழலில் ஈடுபட்டதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. அதன்பேரில் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சதீஷ்குமாரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியமர்த்தும் வரை 17 ஊராட்சிகளில் பணியாற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் இன்று விடுப்பு எடுத்து மாவட்ட கலெக்டரிடம் நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவர்களின் இந்த போராட்டத்தால், அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறக்கூடிய வளர்ச்சி திட்ட பணிகள் தாமதமாக வாய்ப்புள்ளது. மேலும் இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    • சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • தப்பியோடிய முருகேசன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டூர் அன்சூர் மோரிப்பாளையம் பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அந்த பகுதியில் காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் குண்டூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (35), வீரையன்(எ) காளிமுத்து, ஆனந்தகுமார் (42), சொரண்டி பகுதியை சேர்ந்த சஞ்சித் (21) ஆகிய 4 பேரும் 15 சந்தன மரங்களை வெட்டி செதுக்கி கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து வீரையன்(எ) காளிமுத்து, சஞ்சித், ஆனந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து சந்தன மரத்தையும் பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய முருகேசன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.  

    • அலாரம் ஒலித்ததால் ஏ.டி.எம். எந்திரதில் இருந்த பணம் தப்பியது
    • காரமடை டீச்சர்ஸ் காலனியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை டீச்சர்ஸ் காலனியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த குடியிருப்புகளை சுற்றி பல கடைகள் உள்ளது.

    மேலும் இந்த டீச்சர்ஸ் காலனி பகுதி கோவை- மேட்டுப்பாளையம் செல்லும் முக்கிய சாலை ஆகும். எனவே அந்த பகுதியில் அதிக மக்கள் பயன்பாடு உள்ளதால் அந்த பகுதியில் ஏ.டி.எம் எந்திரம் வைக்க கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து மேட்டுப்பாளைத்தில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி கிளை அந்த பகுதியில் ஏ.டி.எம் மையத்தை அமைத்தது. பொதுமக்கள் அதிகளவில் அந்த ஏ.டி.எம்.மை பயன்படுத்தி வந்தனர்.

    இதனால் அந்த ஏ.டி.எம்.மில் எப்போதும் அதிகளவில் பணம் இருக்கும்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த ஏ.டி.எம்.க்கு மர்ம நபர் ஒருவர் வந்தார். அவர் அந்த பகுதியில் ஆள் நடடமாட்டம் இல்லாததை பார்த்தார்.

    பின்னர் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை வைத்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தார். இதனால் எந்திரத்தில் பொருத்தப்பட்டு இருந்த அலாரம் ஒலித்தது. மேலும் வங்கி மேலாளருக்கு மெசேஜ் சென்றது. அலாரம் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் வருவதை பார்த்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

    பின்னர் மேலாளர் இதுகுறித்து காரமடை போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு காமிராக்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • காரமடை நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என கிராம மக்கள் சார்பில் கூறப்படுகிறது.
    • போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ‌‌

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது.

    இந்த வார்டு மக்களுக்கு மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி அருகில் உள்ள பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அதே பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் சுத்திகரித்து படுகிறது.

    ‌‌

    அதன் பின்னர் அங்கிருந்து குழாய்கள் மூலம் ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி குழாய்கள் மூலம் முறை வைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் காரமடை நகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் 1, செல்வபுரம்2, இம்மானுவேல் நகர், சத்தியசாய் நகர், சிவாஜி நகர், காமாட்சி அம்மன் நகர், புத்தர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 600க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இப்பகுதி மக்களுக்கு காரமடை நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என கிராம மக்கள் சார்பில் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக இப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் மற்றும் தலைவர் உஷா வெங்கடேஷ் ஆகியோரிடம் தொடர்ந்து புகார் கோரி வந்துள்ளனர். ஆனால் இதுவரை இப்பகுதியினருக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே காலி குடங்களுடன் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ‌‌

    ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். இல்லையெனில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் மற்றும் வார்டு உறுப்பினர் ராம்குமார் ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் நாளைக்கு குடிநீர் வழங்கப்படும் என ஆணையாளர் பால்ராஜ் கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • காரமடை நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
    • நகராட்சியில் உள்ள பகுதிகளில் அரசு நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்

    காரமடை நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஸ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஆணையாளர் பால்ராஜ், துணைத்தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    ராம்குட்டி (திமுக): நகராட்சியில் உள்ள பகுதிகளில் அரசு நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    இதனை ஆய்வு செய்து தற்போதுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களை வேலிகள் அமைத்து அந்த இடங்களில் அப்பகுதி மக்களுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சித்ரா(திமுக): எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ெரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் சப்வே உள்ளது. அங்கு வாகனம் சென்று வர முடியாத நிலையில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு பல்வேறு சர்ம வியாதிகள் ஏற்பட்டு வருகிறது. இதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவிதா (மதிமுக): எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் தெருவிளக்கு, குடிநீர்குழாய் சீரமைப்பு, உள்ளிட்ட பணிகளை செய்து தரக்கோரி கடந்த 7 மாத காலமாக கூறி வருகிறேன். இதுகுறித்து சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் மெத்தன போக்காக உள்ளன. பெயரளவிற்கு கூட யாரும் வந்து பார்த்தது இல்லை. மேலும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் பணிகள் எடுத்தும் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. தவறும் பட்சத்தில் எனது வார்டுக்குட்பட்ட பொதுமக்களை திரட்டி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

    மஞ்சுளா(திமுக): அரங்கநாதர் கோவிலில் வாரந்தோறும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அன்று மட்டும் கூடுதலாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    27 வார்டு வனிதா (அதிமுக): எனது வார்டுக்குட்பட்ட ஆர்.வி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல போதிய வடிகால் கால்வாய் அமைக்காததால் குளம் போன்று கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு சரும நோய்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் பழுதுநீக்க நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தால் ஊழியர்கள் ரசீது இருந்தால் மட்டுமே குழாய்களை பழுது பார்க்க முடியும் என கூறி வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விக்னேஷ்(பாஜக): காரமடை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சாலையோரம் மற்றும் நடை பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனை உடனடியாக நகராட்சி நிர்வாகம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    ஆணையாளர் பால்ராஜ்: குடிநீர் தெருவிளக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே மேம்பாலம் சப்வே பகுதியில் ரயில்வே கட்டுப்பாட்டு துறையில் உள்ளதால் அதனை அகற்ற ெரயில்வே மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது என்றார்.

    • மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது.
    • ரெயில் நிலையத்தில் கழிவறை வசதி பூட்டிய நிலையிலேயே உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினசரி 8 முறை பயணிகள் மெமோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயிலில் மேட்டுப்பாளையம், காரமடை, தோலம்பாளையம், சிறுமுகை, வெள்ளியங்காடு, சிக்காரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்காக தினசரி சுமார் 2,000க்கும் அதிகமான பயணிகள் கோவைக்கு சென்று வருகின்றனர்.

    இதன்படி இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. அவ்வாறு காரமடை ெரயில் நிலையத்தில் ெரயிலுக்காக தினசரி 500க்கும் மேற்பட்டோர் வந்து காத்திருந்து ெரயிலில் பயணம் செய்கின்றனர்.

    அப்போது ரெயில் நிலையங்களில் ரெயிலுக்காக காத்திருக்கும் போது பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் குடிநீர் வசதி இல்லை.

    இது மட்டுமல்லாமல் ரெயில் நிலையத்தில் கழிவறை வசதி பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் ரயிலுக்காக வந்து காத்திருக்கும் சிறுவர்கள், முதல் ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் பல இடங்களில் நிழற்கூடைகள் இல்லாததால் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ெரயில் பயணிகள் ெரயில்வே நிர்வா கத்திலும் பலமுறை புகார் தெரி வித்தும் இது வரை எந்த நடவடிக் கையும் எடுக்கப் படவில்லை என கூறப் படுகிறது.

    எனவே இது தொடர் பாக சம்பந் தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து காரமடை ரெயில் நிலை யத்தில் உடன டியாக கழி வறை மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டு மென ரெயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், காரமடை ரெயில் நிலையத்தில் தினசரி ஏராளமான பயணிகள் ெரயிலுக்காக வந்து காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் இங்கு வரும்போது ெரயில் பயணிகள் வசதிக்காக ெரயில் நிலையத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவது கிடையாது. அவசர தேவைக்கு செல்வதற்கு கழிவறைகள் வசதியில்லை. இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

    ×