நகராட்சி கூட்டம்: அடிப்படை வசதிகள் கேட்டு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செல்போன் வெளிச்சத்தில் கூட்டத்தை நடத்தினர். கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி கூட்டம்: அடிப்படை வசதிகள் கேட்டு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Published on

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ஆணையாளர் மதுமதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்றனர். கவுன்சிலர்கள், மாதந்தோறும் கூட்டம் நடத்தப்படுவதில்லை. 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தினால் எப்படி மக்கள் பிரச்சனையை பேசுவது. எங்களது வார்டுகளுக்கு தேவையான திட்டங்களை கேட்டும் இதுவரை நிறைவேற்றி தரவில்லை என பேசினர்.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் சாந்தி, மலர்க்கொடி, வனிதா சஞ்சீவ் காந்தி, காந்தி ஆகியோர் தங்களது வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நகராட்சி அலுவலகத்தில் மின் நிறுத்தம் ஏற்பட்டதால் கூட்ட அரங்கு இருட்டாக காணப்பட்டது. அப்போது வார்டு உறுப்பினர்கள் தங்களது செல்போன் வெளிச்சத்தில் கூட்டத்தை நடத்தினர். இதனால் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com