search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரமடை ஒன்றியத்தில் 17 ஊராட்சி செயலாளர்கள் நீதிகேட்டு விடுப்பு போராட்டம்
    X

    காரமடை ஒன்றியத்தில் 17 ஊராட்சி செயலாளர்கள் நீதிகேட்டு விடுப்பு போராட்டம்

    • மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மருதூர் ஊராட்சி.
    • 2 பேரையும் சஸ்பெண்டு செய்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மருதூர் ஊராட்சி. இந்த ஊராட்சி செயலாளராக சதீஷ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார், காரமடை ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர் உடன் சேர்ந்து மருதூர் ஊராட்சியில் சாலை அமைத்தல், ஊராட்சிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குதல் மற்றும் பல்வேறு பணிகளில் ஊழலில் ஈடுபட்டதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. அதன்பேரில் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சதீஷ்குமாரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியமர்த்தும் வரை 17 ஊராட்சிகளில் பணியாற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் இன்று விடுப்பு எடுத்து மாவட்ட கலெக்டரிடம் நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவர்களின் இந்த போராட்டத்தால், அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறக்கூடிய வளர்ச்சி திட்ட பணிகள் தாமதமாக வாய்ப்புள்ளது. மேலும் இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    Next Story
    ×