search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle check"

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்ஜுகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
    • விமான நிலையம் மற்றும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் ஆகியவை மத்திய போலீஸ் படையின் முழு கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் சென்னை வருகிறார். இதையொட்டி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது.

    சந்தேகத்துக்கு இடமாக யாராவது சுற்றித்திரிகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்ஜுகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது லாட்ஜ்களில் தங்கி உள்ள வர்கள் எதற்காக தங்கி இருக்கிறார்கள்? அவர்கள் கொடுத்துள்ள முகவரி உண்மையானது தானா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பிரதமர் மோடி இன்று பிற்பகலில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்திற்கு செல்கிறார். இதைத் தொடர்ந்து அவர் காரில் பயணிக்கும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழி நெடுக போலீசார் நேற்று இரவில் இருந்தே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களில் இன்றும் கண்காணித்து வருகிறார்கள். சென்னை விமான நிலையம் மற்றும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் ஆகியவை மத்திய போலீஸ் படையின் முழு கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இதே போன்று கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடலோரங்களிலும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் வருகையொட்டி நேற்று பிற்பகலில் விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வரையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று சென்னையில் இருந்து கல்பாக்கம் வரையில் 3 ராணுவ ஹெலிகாப்டர்களும் ஒத்திகையில் ஈடுபட்டு கண்காணித்தன.

    இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி இன்று சென்னை பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு தெலுங்கானாவுக்கு புறப்பட்டு செல்லும் வரையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பெயரில் அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளும் சென்னை மாநகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ரூ .50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

    தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் ரூ .50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சத்து 53 ஆயிரத்து 370 ரூபாயை பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பா ட்டு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் ஒப்படைத்த னர்.

    இந்நிலையில் நேற்று இரவு 10.45 மணி அளவில் வீரப்பம்பாளையத்தில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கார் வந்தது. அந்த காரை அதிகாரிகள் மற்றும் போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.3 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் வந்த நபரிடம் விசாரித்த போது அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்த செல்வ பாரதி (30) என்பது தெரியவந்தது.

    அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர். இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் ரூ. 41 லட்சத்து 53 ஆயிரத்து 370 ரூபாய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    • ஈரோடு இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
    • துணை ராணுவத்தினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் பணிபுரிவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படையினர் மற்றும் 4 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பணம் பட்டுவாடா நடப்பதாக வந்த புகார் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் துணை ராணுவத்தினர், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த 8-ந் தேதி சென்னை ஆவடி, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 160 வீரர்கள் ஈரோட்டுக்கு வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து துணை ராணுவ படை வீரர்கள் ஈரோடு வருகை தந்தனர். நேற்று முன்தினம் இரண்டு கம்பெனி துணை ராணுவத்தினர் ரெயில் மூலம் ஈரோடு வந்தனர். மேலும் இரண்டு கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஈரோடு வந்தனர். மொத்தம் 5 கம்பெனி வீரர்கள் ஈரோடு வந்துள்ளனர். துணை ராணுவத்தினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் பணிபுரிவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    மேலும் அவர்கள் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினருடன் வாகன சோதனையிலும் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் துணை ராணுவத்தினர் பறக்கும் படை குழுவினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    ஒரு குழுவில் 8 துணை ராணுவத்தினர், நிலை கண்காணிப்பு குழுவினர் 4 பேர் , காவல்துறையினர் 3 பேர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஓட்டுனர் என 17 நபர்கள் செயல்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு ரெயில் நிலையம், காளை மாட்டு சிலை, கொல்லம்பாளையம், செங்கோடம்பள்ளம் அக்ரஹாரம் , சூரம்பட்டி நால்ரோடு, குமலன்குட்டை, வில்லரசம்பட்டி, வீரப்பம்பாளையம் பிரிவு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், வெண்டிபாளையம் பேரேஜ், மரப்பாலம் ஆகிய 15 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்கின்றனர். அதில் பயணம் செய்யும் நபர்கள் எங்கிருந்து வருகிறார்கள் முகவரி, செல்போன் எண் விவரம் போன்றவற்றை பதிவு செய்கின்றனர்.

    கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் நேற்று இரவு திருக்கனூர் கடை வீதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஏதேனும் கஞ்சாவை மறைத்து வைத்திருக்கிறார்களா? என அவர்களிடமும், வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர்.  இதனால் கடைவீதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கும்மிடிப்பூண்டி அருகே போலீசார் வாகன சோதனையில் ரூ. 56 கோடி மதிப்புள்ள 175 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. #Gold #LokSabhaElections2019

    கும்மிடிப்பூண்டி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பை தீவிரப் படுத்தி உள்ளனர்.

    அவர்கள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம், தங்கத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஆரம்பாக்கம் போலீஸ் சோதனைச்சாவடியில், நேற்று இரவு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் முன்னும், பின்னும் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் துப்பாக்கி ஏந்திய 2 தனியார் பாதுகாவலர்கள் உள்பட மொத்தம் 4 பேர் அதில் இருந்தனர்.

    மொத்தம் 7 பெட்டிகளில் தலா 1 கிலோ எடை கொண்ட 25 தங்க கட்டிகள் இருந்தது. இதன் மொத்த எடை 175 கிலோ. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 56 கோடி ஆகும்.


     

    விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் இருந்து தங்ககட்டிகளை இறக்குமதி செய்து அதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள ஒரு குடோனில் இருப்பு வைத்து பின்னர் அங்கிருந்து அனைத்து அரசு துறைகளின் உரிய அனுமதியுடன் இந்தியா முழுவதும் தங்கத்தை சப்ளை செய்து வருவது தெரியவந்தது.

    175 கிலோ தங்க கட்டிகளும், சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மும்பை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் வங்கி மூலம் அனுப்பி வைக்க இருந்ததாக வேனில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

    அதற்குரிய ஆவணங்கள் இருந்தாலும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்து கண்டறியவும், முறையான அனுமதியுடன் தான் இந்த தங்க கட்டிகள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு வரப்படுகிறதா? என்பதை அறியவும் வேனுடன் 175 கிலோ தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி, கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்பாபு ஆகியோர் தங்க கட்டிகளையும், அதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் இரவு நேரம் என்பதால் தங்க கட்டிகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள கருவூலத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

    மேலும் நள்ளிரவில் சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தங்க கட்டிகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது எத்தகைய ஆவணங்கள் இருப்பினும் போதிய பாதுகாப்பை உறுதி செய்திடாமல் இது போன்று இரவு நேரத்தில் தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இருப்பினும் பிற துறை சார்ந்த உரிய ஆய்விற்கு பிறகே தங்க கட்டிகள் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி தெரிவித்தார். #Gold #LokSabhaElections2019

    சேலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் லாரி டிரைவர்களிடம் ரூ. 1.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

    சேலம்:

    சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டி பகுதியில் இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அழகர்சாமி என்பவர் ஓட்டி வந்த லாரியில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது.

    இது குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரித்த போது விஜயவாடாவுக்கு செல்வதாகவும், டீசல் மற்றும் செலவுகளுக்கு அந்த பணத்தை வைத்ததுள்ளாகவும் கூறினர்.

    ஆனால் அதற்கு சரியான ஆவணங்கள் இல்லை எ ன்று கூறிய பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதே போல அந்த வழியாக செல்வம் என்பவர் ஓட்டி வந்த லாரியையும் நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

    அப்போது லாரியில் இருந்த ரூ.57 ஆயிரம் சிக்கியது. அது குறித்து செல்வத்திடம் கேட்ட போது வடமாநிலத்திற்கு செல்வதாகவும், செலவுக்காக இந்த பணத்தை வைத்துள்ளதாகவும் கூறினார்.

    ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை என்று கூறிய அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    அப்போது செலவுக்கு கொண்டு செல்லும் பணத்திற்கு எப்படி ஆவணம் காட்ட முடியும் என்று புலம்பியபடியே செல்வம் அங்கிருந்து சென்றார்.

    திருப்பூரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ. 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூரில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு திருப்பூர் - மங்கலம் சாலையில் பாரப்பாளையத்தில் பறக்கும் படை அதிகாரி கோவிந்த பிரபாகர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 3 லட்சம் பணம் இருந்தது. இது தொடர்பாக காரில் வந்த திருப்பூர் சிவசக்தி நகர் 2-வது தெருவை சேர்ந்த இளமணிமாறனிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர் தனது கம்பெனியில் வசூலான பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் கூறி சென்றனர். திருப்பூரில் இதுவரை ரூ. 10 லட்சம் வரை அதிகாரிகள் சோதனையில் சிக்கி உள்ளது.  #Parliamentelection #LSPolls

    வேலூரில் இன்று காலை பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும்படை தாசில்தார் ரூபிபாய் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது காட்பாடியில் இருந்து வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்த ஒரு பேக்கில் ரூ. 1 லட்சம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பணம் எடுத்து வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் காட்பாடி காந்தி நகரை சேர்ந்த மணிவண்ணன் (45) என்பது தெரியவந்தது.

    சென்னைக்கு பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை வேலூர் தாசில்தார் பழனியிடம் பறக்கும் படை போலீசார் ஒப்படைத்தனர். #Parliamentelection #LSPolls

    ×