என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேலத்தில் வாகன சோதனை - லாரி டிரைவர்களிடம் ரூ. 1.77 லட்சம் பறிமுதல்
சேலம்:
சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டி பகுதியில் இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அழகர்சாமி என்பவர் ஓட்டி வந்த லாரியில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது.
இது குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரித்த போது விஜயவாடாவுக்கு செல்வதாகவும், டீசல் மற்றும் செலவுகளுக்கு அந்த பணத்தை வைத்ததுள்ளாகவும் கூறினர்.
ஆனால் அதற்கு சரியான ஆவணங்கள் இல்லை எ ன்று கூறிய பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதே போல அந்த வழியாக செல்வம் என்பவர் ஓட்டி வந்த லாரியையும் நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
அப்போது லாரியில் இருந்த ரூ.57 ஆயிரம் சிக்கியது. அது குறித்து செல்வத்திடம் கேட்ட போது வடமாநிலத்திற்கு செல்வதாகவும், செலவுக்காக இந்த பணத்தை வைத்துள்ளதாகவும் கூறினார்.
ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை என்று கூறிய அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
அப்போது செலவுக்கு கொண்டு செல்லும் பணத்திற்கு எப்படி ஆவணம் காட்ட முடியும் என்று புலம்பியபடியே செல்வம் அங்கிருந்து சென்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்