search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் வாகன சோதனை - லாரி டிரைவர்களிடம்  ரூ. 1.77 லட்சம் பறிமுதல்
    X

    சேலத்தில் வாகன சோதனை - லாரி டிரைவர்களிடம் ரூ. 1.77 லட்சம் பறிமுதல்

    சேலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் லாரி டிரைவர்களிடம் ரூ. 1.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

    சேலம்:

    சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டி பகுதியில் இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அழகர்சாமி என்பவர் ஓட்டி வந்த லாரியில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது.

    இது குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரித்த போது விஜயவாடாவுக்கு செல்வதாகவும், டீசல் மற்றும் செலவுகளுக்கு அந்த பணத்தை வைத்ததுள்ளாகவும் கூறினர்.

    ஆனால் அதற்கு சரியான ஆவணங்கள் இல்லை எ ன்று கூறிய பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதே போல அந்த வழியாக செல்வம் என்பவர் ஓட்டி வந்த லாரியையும் நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

    அப்போது லாரியில் இருந்த ரூ.57 ஆயிரம் சிக்கியது. அது குறித்து செல்வத்திடம் கேட்ட போது வடமாநிலத்திற்கு செல்வதாகவும், செலவுக்காக இந்த பணத்தை வைத்துள்ளதாகவும் கூறினார்.

    ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை என்று கூறிய அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    அப்போது செலவுக்கு கொண்டு செல்லும் பணத்திற்கு எப்படி ஆவணம் காட்ட முடியும் என்று புலம்பியபடியே செல்வம் அங்கிருந்து சென்றார்.

    Next Story
    ×