என் மலர்
நீங்கள் தேடியது "gold seized"
- மின்னணு சாதனப் பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்.
- கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் கே.ஆர்.உதய் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
துபாயிலிருந்து 03.08.2022 அன்று சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் மற்றும் 04.08.2022 அன்று சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் ஆகியவற்றில் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை தகவல் அளித்தது.அதன்படி, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானங்களில் சோதனையிட்டனர்.
அப்போது, சென்னையை சேர்ந்த சையத் மீர்சாவின் மகன் முகமது இப்ராஹிம் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹனிஃபாவின் மகன் சாதிக் அலி ஆகியோர் பசை வடிவில் மறைத்து வைத்திருந்த தங்கம் மற்றும் கால்சட்டையில் மறைத்து வைத்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையின்போது, 1.38 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.98 கிலோ தங்கம் மற்றும் 8.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணு பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொரு சோதனையில், அண்ணா பன்னாட்டு விமான நிலைய வரவேற்புப் பகுதியில் உள்ள ஆண்கள் கழிவறைக்குப் பின்னால் பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 தங்க பொட்டலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்படி, 1.63 கோடி ரூபாய் மதிப்பிலான 3.52 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பாங்காங், கோலாலம்பூர், துபாயில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனை.
- தங்கம் கடத்தி வந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டு விசாரணை.
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, பாங்காங்கிலிருந்து ஏர் ஏஷியா விமானம் மூலம் சென்னை வந்த சென்னை அசோக் நகரைச்சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் திருச்சியைச் சேர்ந்த ரஷீத், ஆகியோரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல், கோலாலம்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த அருண்பாண்டியன், துபாயிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்த புதுக்கோட்டை கல்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி ஆகிய பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது இவர்கள் பல்வேறு வழிகளில் கடத்தி வந்த மொத்தம் 3.08 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.1.38 கோடியாகும். இது தொடர்பாக அருண்பாண்டியன் மற்றும் பழனிசாமி ஆகிய இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
- இந்த நிலையில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் கடந்த மார்ச் மாதம் முதல் தினசரி விமான சேவைகள் வழங்கப்பட்டு அனைத்து வெளிநாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
திருச்சி:
திருச்சி விமா ன நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், ஷார்ஜா, மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி, உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை கடத்தி வரும் போதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் கடந்த மார்ச் மாதம் முதல் தினசரி விமான சேவைகள் வழங்கப்பட்டு அனைத்து வெளிநாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் ரூ.63.80 லட்சம் மதிப்பிலான 974 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சார்ஜாவில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.12.62 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி கொண்டு வந்த லேப்டாப்பில் மறைத்து வைத்திருந்த ரூ.28.11 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கமும் சிக்கியது.
இதேபோன்று 9 சிறிய கட்டிகளாக மறைத்து எடுத்து வந்த ரூ.23.07 மதிப்பிலான 449 கிராம் என மொத்தமாக 974 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் கொழும்பை சேர்ந்த முகமது முனஸ்(வயது 40), ஜவ்சீர்(40), சென்னையை சேர்ந்த முகமது கலிபத்துல்லா(41), பெரோஸ்கான்(24), இமாம் பாபு(40), பைஷாத் ரகுமான்(35), விருதுநகரை சேர்ந்த சையத் சிக்கந்தர் (26), புதுக்கோட்டையை சேர்ந்த கலந்தர் சாகுல் அமீது (21), ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் இப்ராகிம் (39), விஸ்வநாதன்(48), முகமது ஆதம்(30), சிராஜுதீன் (38), பைசல் ஹக்(20), சையத் சுல்தான் (39), சுபையர் அலி(32), சபீர் முகமது (44), யூசுப் சாகிப் (28), நைனா முகமது (51), புருஷ்கான்(34), கலந்தர் ஹைதர்அலி (42) உள்பட 23 பேர் ஒரு குழுவாக வந்தனர்.
அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் விழுப்புரத்தை சேர்ந்த சிவா(31), மும்பையை சேர்ந்த பெண் பர்சானா பேகம்(40) ஆகியோரும் வந்தனர்.
கொழும்பு, துபாயில் இருந்து வந்த மும்பை பெண் உள்பட 25 பேர் மீதும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அனைவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் அனைவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் எதுவும் இல்லாததால் அனைவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் மும்பை பெண் உள்பட 25 பேரும் தங்களது உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 25 பேரிடம் இருந்தும் ரூ.2 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள், இந்த தங்கத்தை கொழும்பு, துபாயில் இருந்து யாருக்காக சென்னைக்கு கடத்தி வந்தனர்? என மும்பை பெண் உள்பட 25 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து, ஓமன் நாட்டிலிருந்து இன்று காலை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் வெகு துல்லியமாக சோதனையிட்டனர். அப்போது, ஒரு பயணியின் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பிஸ்கட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கடத்திவந்த நபரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பை தீவிரப் படுத்தி உள்ளனர்.
அவர்கள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம், தங்கத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஆரம்பாக்கம் போலீஸ் சோதனைச்சாவடியில், நேற்று இரவு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் முன்னும், பின்னும் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் துப்பாக்கி ஏந்திய 2 தனியார் பாதுகாவலர்கள் உள்பட மொத்தம் 4 பேர் அதில் இருந்தனர்.
மொத்தம் 7 பெட்டிகளில் தலா 1 கிலோ எடை கொண்ட 25 தங்க கட்டிகள் இருந்தது. இதன் மொத்த எடை 175 கிலோ. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 56 கோடி ஆகும்.

விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் இருந்து தங்ககட்டிகளை இறக்குமதி செய்து அதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள ஒரு குடோனில் இருப்பு வைத்து பின்னர் அங்கிருந்து அனைத்து அரசு துறைகளின் உரிய அனுமதியுடன் இந்தியா முழுவதும் தங்கத்தை சப்ளை செய்து வருவது தெரியவந்தது.
175 கிலோ தங்க கட்டிகளும், சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மும்பை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் வங்கி மூலம் அனுப்பி வைக்க இருந்ததாக வேனில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
அதற்குரிய ஆவணங்கள் இருந்தாலும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்து கண்டறியவும், முறையான அனுமதியுடன் தான் இந்த தங்க கட்டிகள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு வரப்படுகிறதா? என்பதை அறியவும் வேனுடன் 175 கிலோ தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி, கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்பாபு ஆகியோர் தங்க கட்டிகளையும், அதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் இரவு நேரம் என்பதால் தங்க கட்டிகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள கருவூலத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
மேலும் நள்ளிரவில் சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தங்க கட்டிகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது எத்தகைய ஆவணங்கள் இருப்பினும் போதிய பாதுகாப்பை உறுதி செய்திடாமல் இது போன்று இரவு நேரத்தில் தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் பிற துறை சார்ந்த உரிய ஆய்விற்கு பிறகே தங்க கட்டிகள் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி தெரிவித்தார். #Gold #LokSabhaElections2019
கோவை சிங்காநல்லூர் தொகுதி பறக்கும்படை அலுவலர் செல்வராஜ் தலைமையிலான அலுவலர்கள் புலிய குளம் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த ஒரு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் ஏராளமான துணிப்பைகளில் மொத்தம் 149 கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகள் இருந்தது. வேனில் இருந்த ஊழியர்களிடம் விசாரித்த போது, புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் தங்க கட்டிகளை மொத்தமாக வாங்கி பெரியகடைவீதி, டவுன் ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைகடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இவற்றின் மொத்தமதிப்பு ரூ.44 கோடி ஆகும்.
இதுகுறித்து வருமான வரித்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துவெங்கட் ராம் தலைமையில் ஏராளமான நகைக்கடைக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.
இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. உரிய ஆவணங்களை காட்டினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
149 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறை, சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விசாரணை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளுக்கு ஆவணங்கள் இருப்பதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறி உள்ளது. இன்று காலை ஆவணங்களை கொண்டு வந்து காட்டுவதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு காட்டினால் ஆவணங்களை சரி பார்த்த பின்பு, முறையாக இருந்தால் தங்ககட்டிகள் திரும்ப ஒப்படைக்கப்படும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.

சூலூர் பறக்கும்படை அலுவலர் சந்தோஷ்உதய ராகவன் தலைமையிலான அலுவலர்கள் சோமனூர் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் காடா துணிகள் இருந்தது. விசாரணையில் அவை சோமனூர் லாரி அலுவலகத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு வழக்கமாக அனுப்பப்படுகிற காடா துணிகள் என்றனர். ஆனால் காடாதுணி பேல்களுக்கு முறையான இ-பில் இல்லை. இதையடுத்து காடாதுணிகளு டன் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் பறக்கும்படை அலுவலர்கள் இன்று அதிகாலை சுகுணாபுரம் சோதனை சாவடியில் வாகனசோதனை செய்த போது அவ்வழியாக வந்த ஒரு மினிஆட்டோவை சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது.
இதுகுறித்து ஆட்டோவில் இருந்த பாலக்காடை சேர்ந்த சேமையர் (வயது 22) என்பவரிடம் விசாரித்த போது வியாபார ரீதியாக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார். அவரிடம் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections #GoldSeized
சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை சேலம் கொண்டலாம்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டெம்போ டிராவல்ஸ் வேன் ஒன்று வந்தது.
இந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் பைகளில் 73 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை இருந்தது.
இதையடுத்து அதிகாரிகள் வேனில் இருந்தவர்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த நகையை எங்கு எடுத்து செல்கிறீர்கள்? இதற்கு உரிய ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என விசாரித்தனர்.
அதற்கு அவர்கள் நாங்கள் நகைக்கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக மும்பையில் இருந்து வேனில் கொண்டு வருகின்றோம் என்று கூறி ஆவணங்களை கொடுத்தனர்.
இந்த ஆவணத்தை பரிசோதித்தபோது, அதில் குறிப்பிட்டிருக்கும் எடையை காட்டிலும் அதிகமாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை இருந்தது.
இதனால் பறக்கும் படை அதிகாரிகள், வேனில் இருந்த தங்கம், வெள்ளியை பறிமுதல் செய்து தேர்தல் உதவி அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் ரோகிணி, உடனடியாக தேர்தல் உதவி அலுவலகத்திற்கு விரைந்து வந்து அங்கு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த தங்கம்- வெள்ளி ஆகியவற்றை பார்வையிட்டார். வேனில் நகையை கொண்டு வந்த நபர்களிடமும் விசாரணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து நகைக்கான ஆவணங்கள் பற்றி விசாரிப்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உரிய வரி செலுத்தப்பட்டு இருக்கிறதா? என விசாரித்து வருகின்றனர். #LokSabhaElections2019
ஆத்தூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகள் பட்டுவாடா செய்யாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.இதற்காக சேலம் மாவட்டத்தில் 33 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மற்றும் சந்தேக இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சேலத்தை நோக்கி வேன் ஒன்று வந்தது. இந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். இதில் வேனுக்குள் 3 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வேனில் இருந்தவர்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த நகையை எங்கு கொண்டு செல்கிறீர்கள்? இதற்கு உரிய ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என அதிகாரிகள் விசாரித்தனர்.
அதற்கு அவர்கள், தாங்கள் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து ஒரு தனியார் ஏஜென்சி நிறுவனம் மூலமாக வேனில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை எடுத்துக் கொண்டு சேலத்தில் உள்ள நகைக் கடைகளில் கொடுப்பதற்காக வருகிறோம் என தெரிவித்தனர். ஆனால், தங்கம் மற்றும் வெள்ளிக்கான உரிய ஆவணங்கள் தங்களிடம் இல்லை என கூறினர்.
இதனால் தேர்தல் பறக்கும் படை 3 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 24 லட்சத்து, 54 ஆயிரத்து 648 ஆகும்.
இது குறித்து ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் உதவி அலுவலருமான அபுல்காசிமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரிடம் தங்கம்- வெள்ளி ஆகியவற்றை பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
பின்னர் கோட்டாட்சியர் அபுல் காசிம் , பார்வையிட்டு ஆய்வு செய்கையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட அதிகமாக இருந்ததால் தங்கம்-வெள்ளி ஆகியவற்றை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வில்லை.
இது குறித்து கோட்டாட்சியர் அபுல்காசிம் சேலம் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, தங்கம்- வெள்ளி ஆகியவற்றுக்கு உரிய வருமானவரி செலுத்தி இருக்கவில்லை என்றால் அதனை பறிமுதல் செய்து விடுவார்கள் என பறக்கும் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #LSPolls
கே.கே.நகர்:
துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகம்மது ஜவாஹிர் (வயது 26 ) என்ற பயணி தனது உடைமையில் மறைத்து ரூ.9.62 லட்சம் மதிப்புள்ள தலா 100 கிராம் எடை கொண்ட 3 தங்க சங்கிலிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் நேற்றிரவு மலேசிய தலைநகர் கோலா லம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது , மகேந்திரன் , கேசவன் செல்வேந்திரன் ஆகியோர் ரூ.22.43 லட்சம் மதிப்புள்ள 733 கிராம் தங்க ஆபரணங்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்தல் தொடர்பாக 3பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் ரெட்டிப் பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). இலங்கை நாட்டின் குடியுரிமையை பெற்ற இவர், போலி ஆவணங்கள் மூலம் இந்திய நாட்டின் பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவர் திருச்சியில் இருந்து இலங்கை செல்ல முயன்றார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்த போது அவர், பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை அதிகாரிகள் ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி ஜெயக்குமாரை கைது செய்தனர். #trichyairport