என் மலர்
நீங்கள் தேடியது "தங்கம் பறிமுதல்"
- கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 உயர் ரக வெளிநாட்டு கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை தீவிரவாத தடுப்பு படையினர் வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அந்த குடியிருப்பில் தீவிரவாத தடுப்பு படையினர் (ஏ.டி.எஸ்.) மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவினர் இணைந்து அதிரடி சோதனை நடத்த சென்றனர்.
அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது. விசாரணையில் அந்த வீட்டில் வசிக்கும் மேக்ஷா என்பவர் துபாயில் பங்குச்சந்தை முதலீட்டாளராக இருப்பது தெரியவந்தது.
மேலும் அவரின் உறவினர் ஒருவர் அதே குடியிருப்பில் 4-வது மாடியில் வசிப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து வீட்டின் சாவியை பெற்று தீவிரவாத தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் உள்ளே 87.9 கிலோ தங்க கட்டிகள், 19.6. கிலோ தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 உயர் ரக வெளிநாட்டு கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சிக்கிய பணத்தின் அளவு அதிகமாக இருந்ததால் அதை எண்ணுவதற்காக எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் மூலம் வீட்டில் இருந்த ரொக்கப் பணம் ரூ.1.37 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள், தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை தீவிரவாத தடுப்பு படையினர் வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வீட்டில் வசிக்கும் மேக்ஷா, அவரது தந்தை மஹிந்தரஷா ஆகிய இருவருக்குமான நிதி பரிவர்த்தனைகள் போலி நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தீவிரவாத தடுப்பு படை டி.எஸ்.பி. சுனில் ஜோஷி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விமான நிலைய ஊழியர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- தங்கம் பறிமுதல் தொடர்பாக 2 விமான நிலைய ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது.
மும்பை:
மும்பை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலை தடுக்க சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அதிகாரிகள் வெவ்வேறு சம்பவங்களில் 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட ரூ.8½ கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய விமான நிலைய ஊழியர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து இருந்த ரூ.2 கோடியே 27 லட்சம் மதிப்பிலான 2.8 கிலோ தங்க பசையை பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவத்தில் விமான நிலைய ஊழியர் ஒருவர் உள்ளாடையில் மறைத்து வெளியில் எடுத்து செல்ல முயன்ற ரூ.1 கோடியே 31 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்க பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் தங்கத்தை வாங்க வந்த மேலும் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இதேபோல இன்னொரு சம்பவத்தில் வெளிநாட்டில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமான கழிவறை குப்பை தொட்டியில் இருந்து அதிகாரிகள் 2 கருப்பு நிற பையில் ரூ.2 கோடியே 53 லட்சம் மதிப்பிலான 3.1 கிலோ தங்கத்தை மீட்டனர்.
தங்கம் பறிமுதல் தொடர்பாக 2 விமான நிலைய ஊழியர்கள் உள்பட 4 பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரை சோதனையிட்ட அதிகாரிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
- தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை-ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்க சாவடியில் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. அப்போது அந்த வழியாக வந்த காரில் பயணித்த 3 பேரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் காரை சோதனையிட்ட அதிகாரிகள், அவர்கள் காரில் மறைத்து கடத்தி கொண்டு வந்த ரூ.18.34 கோடி மதிப்புள்ள 35.6 கிலோ வெளிநாட்டு தங்கத்தை மீட்டு, பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை வழியாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் முதன்மையான கடத்தல் தடுப்பு அமைப்பான டிஆர்ஐ சென்னையில் மேற்கொண்ட தீவிர கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளால் ஏப்ரல் மாதம் முதல் தமிழக கடற்கரை வழியாக 105 கிலோவுக்கு மேல் கடத்தப்பட்ட வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- பயணி உடலில் மறைத்து எடுத்து வரப்பட்ட பசை வடிவ தங்கம் பறிமுதல்.
- செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவரை சோதனை செய்தபோது, அவர் ரூ.17.15 லட்சம் மதிப்புள்ள 385 கிராம் தங்க கட்டியை உலோகத் தகடுகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அவரது பைகளிலிருந்து 15 செல்பேசிகளும் 9000 சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 3.15 லட்சம் ஆகும்.
இதே போல் அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியை சோதனை செய்தபோது ரூ. 23.38 லட்சம் மதிப்புள்ள 525 கிராம் எடையுள்ள தங்கத்தை பசை வடிவில் அவரது உடலில் மறைத்து எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்த இரு வேறு சோதனைகளில் மொத்தம் ரூ.40.53 லட்சம் மதிப்புள்ள 910 கிராம் தங்கம், 3.15 லட்சம் மதிப்புள்ள செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பசை வடிவிலான தங்கத்தை அபுதாபி பயணி ஒருவர் உடலில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.
- தங்கம் கடத்தல் குறித்து பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில அந்த பயணி தனது உடலில் பசை வடிவிலான தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.
அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 1.15 கிலோ எடை கொண்ட 24 கேரட் தங்கம் 51 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்தி வந்த அந்த பயணி கைது செய்யப்பட்டார். இதுகுறித்த புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- துபாயிலிருந்து சென்னை வந்த விமான பயணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
- பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.16.49 லட்சம் என தகவல்.
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறையின் முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 23.11.2022 அன்று, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் எண் மூலம் துபாயிலிருந்து வந்த ஒரு ஆண் பயணியை விமான சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது பொருட்களை சோதனையிட்டனர். அப்போது ஸ்ட்ரோலர் சூட்கேஸின் கைப்பிடி கம்பியின் உள்ளே துருப்பிடிக்காத இரும்புக் குழாய்க்குள் வெவ்வேறு அளவுகளில் தங்கக் கம்பிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

345 கிராம் எடையுள்ள 15 தங்க கம்பிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 16 லட்சத்து 43 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விமானத்தில் வந்த பயணிகளை சுங்க துறையினர் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
- தங்கம் கடத்தி வந்த 3 பயணிகளை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறையினர் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகளின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை தனியாக அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் உடலுக்குள் காப்ஸ்யூல் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
3 பேரிடம் இருந்தும் மொத்தம் 1015.80 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.28 கோடியாகும். இதனை கடத்தி வந்த 3 பயணிகளையும் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- துபாயில் இருந்து கேரளாவின் நெடும்பாச்சேரிக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
திருவனந்தபுரம்:
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது.
தங்க கடத்தலை கண்காணிக்க அனைத்து விமான நிலையங்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர விமான நிலையம் முழுவதும் மாறுவேடத்திலும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் துபாயில் இருந்து கேரளாவின் நெடும்பாச்சேரிக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. அவரை கண்காணித்தபோது அந்த நபர் தனது உள்ளாடையில் தங்கத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதில் 172 பவுன் இருந்தது தெரியவந்தது. இந்த தங்கத்தை அந்த பயணி, விமான நிலையத்தில் பணியில் இருந்து விமான நிறுவன ஊழியர்கள் இருவரிடம் கொடுத்தார்.
அவர் கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு சென்று அங்கு காத்திருந்த இன்னொரு நபரிடம் சேர்த்தார். இவை அனைத்தையும் ரகசியமாக கண்காணித்த அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த பயணி கோழிக்கோட்டை சேர்ந்த முகமது பாசில் மற்றும் அவருக்கு உதவி செய்த விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
கைதான விமான நிறுவன ஊழியர்கள் இருவரும் இதற்கு முன்பும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவங்களில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டனர்.
- 122 கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.
மீனம்பாக்கம் :
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் அதிகமாக இருக்கும். வெளிநாட்டுக்கு கடத்தப்படும் வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கம் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பவுடர், வனவிலங்குகள், வைரம் போன்ற கடத்தலும் அதிகரித்து விட்டன. நாளுக்கு நாள் புது புது விதமாக நவீன முறையில் கடத்தப்பட்டு வருகின்றன.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 2021-ம் ஆண்டைவிட 2022-ம் ஆண்டில் தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு பணம் போன்ற கடத்தல் பொருட்கள் அதிக அளவில் பிடிபட்டது.
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை ரூ.94.22 கோடி மதிப்புள்ள 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் கடத்தல்கள் சம்பந்தமாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட 97 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த கடத்தல் தங்கம் அதிகமாக துபாய், சார்ஜா, குவைத், சவுதி அரேபியா, இலங்கை உள்பட வளைகுடா நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளன. மேலும் மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் தங்கம் கடத்தப்பட்டு வந்தன.
பெண்கள் தலை முடி கூந்தலுக்குள் தங்கத்தை மறைத்து வைத்தும், தங்க ஸ்பேனர்கள், டூல்ஸ் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வருவது, தங்கத்தை பவுடராக்கி குங்குமம் பொடிக்குள் மறைத்து வைத்துக்கொண்டு வருவது என நூதன முறையில் கடத்தி வரும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன.
அதேபோல் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடியே 97 லட்சம் அமெரிக்க டாலர், யூரோ கரன்சி, சவூதி ரியால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவங்களில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரூ.14 கோடி மதிப்புள்ள 27.66 கிலோ ஹெராயின், மெத்தகுலோன், கொகைன் போன்ற போதை பவுடர்களையும் பறிமுதல் செய்தனர். இதில் உகாண்டா, தான்சான்யா, வெனிசுலா, எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாட்டைச் சேர்ந்த பெண்கள் உள்பட 12 பேர் சார்ஜா, எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நாடுகளில் இருந்து கடத்தி வந்துள்ளனர்.
தாய்லாந்தில் இருந்து டாமரின் குரங்குகள், மலைப்பாம்பு குட்டிகள், நரிக்குட்டிகள், விஷ தேள்கள், விஷ பாம்புகள், ஆமைகள் உட்பட 134 அரிய வகை வன விலங்குகள் கடத்தி வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அனைத்து அரிய வகை உயிரினங்களும் எந்த நாட்டில் இருந்து வந்ததோ அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டன.
மேலும் கொழும்பில் இருந்து ரூ.1 கோடியே 26 லட்சம் மதிப்பிலான 5,274 காரட் வைர கற்கள், நவரத்தினங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ஒரு புத்தர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.3 கோடியே 90 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆக மொத்தம் 2022-ம் ஆண்டில் ரூ.124 கோடியே 88 லட்சம் மதிப்பிலான தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தப்பட்டுள்ளன. 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 122 கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெண்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து மின்னணு சாதன பொருட்கள் சென்னைக்கு கடத்தி வரப்படுவது பெரிய அளவில் குறைந்து விட்டது. அதேபோல் சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு அடிக்கடி கடத்தப்படும் நட்சத்திர ஆமைகள், கடல் குதிரைகள், மயில் இறகுகள் போன்றவைகள் கடத்தலும் பெருமளவு குறைந்து விட்டன.
2021-ம் ஆண்டில் ரூ.70 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ தங்கம் பறிமுதல் ஆனது. 2022-ம் ஆண்டில் அது ரூ.94 கோடியே 22 லட்சம் மதிப்புள்ள 205 கிலோவாக அதிகரித்து உள்ளது.
இதேபோல் 2021-ம் ஆண்டில் ரூ.11 கோடி மதிப்பிலான ஹெராயின், மெத்தோ குயிலோன், பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்கள் பிடிபட்டன. 2022-ம் ஆண்டில் அது ரூ.14 கோடியாக அதிகரித்து உள்ளது.
சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு பிடிப்பட்ட வெளிநாட்டு பணம் 2021-ம் ஆண்டில் ரூ.9 கோடியாக இருந்தது. 2022-ம் ஆண்டில் அது ரூ.10 கோடியே 98 லட்சமாக அதிகரித்தது.
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா மட்டுமின்றி மத்திய வருவாய் புலனாய்வு துறை, மத்திய போதை தடுப்பு பிரிவு துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் திடீர் சோதனைகள் நடத்தி கடத்தல் தங்கம், போதைப் பொருட்கள், வெளிநாட்டு பணம் போன்றவைகளை பெரிய அளவில் பறிமுதல் செய்து உள்ளனர்.
- ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- மொத்தம் 3 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1029 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:
பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்தக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து 192 கிராம் தங்கம் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் இலங்கையின் கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு வெவ்வேறு விமானங்களில் பயணம் செய்த 2 பெண் பயணிகளிடம் இருந்து 837 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் 3 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1029 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் கடத்தல் தொடர்பாக 3 பெண் பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
குவைத்தில் இருந்து கேரளா வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குவைத்தில் இருந்து கொச்சிக்கு வந்த விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 1978.89 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.85 லட்சம் ஆகும்.
கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
- பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மீனம்பாக்கம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அவரது காலில் அணிந்திருந்த ஷூ சாக்ஸை கழற்றியபோது, தங்கத்தை பேஸ்ட் போல் மாற்றி அதை கறுப்பு நிற பாலித்தீன் பையில் மறைத்து கால் பாதத்தில் பேஸ்ட் போட்டு ஒட்டி அதன் மேல் சாக்சை அணிந்து நூதன முறையில் கடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவரிடம் இருந்து ரூ.66 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 340 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் இருந்த லேப்டாப் சார்ஜர் பின்னில் உருளை வடிவ தங்க கம்பிகளை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.27 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள 548 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.94 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 888 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






