search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blockade"

    அரியலூர்

    அரியலூர் தமிழ்நாடு சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான சாலை மறியல் நடைபெற்றது. அதன்படி அரியலூரில் அண்ணா சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசன், மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் சிறப்பு ஓய்வூதிய தொகையாக ரூ.6,750 வழங்க வேண்டும். அரசுத்துறை காலி பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்தனர்.

    • ஒப்பந்த நர்சுகள் கொரோனா பரவல் குறைந்தவுடன் நீக்கப்பட்டனர்.
    • நர்சுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    அரசு மருத்துவ மனைகளில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த நர்சுகள் கொரோனா பரவல் குறைந்தவுடன் நீக்கப்பட்டனர். பின்னர், 3 மாதத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் ஒப்பந்த நர்சுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் சுகாதாரத்துறை 105 நர்சு பணியிடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பில் ஒப்பந்த நர்சுகளுக்கு முன்னு ரிமை வழங்கவில்லை.

    இதில் முன்னுரிமை வழங்க கோரி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை 2 நாட்கள் முற்றுகையிட்ட ஒப்பந்த நர்சுகள் முதல்-அமைச்சர் ரங்கசாமி அளித்த உறுதியை ஏற்று போரா ட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க எதிர்கட்சி தலைவர் சிவா, அ.தி.மு.க. மாநில செய்லாளர் அன்பழகன் ஆகியோர் ஒப்பந்த நர்சுகளை அழைத்து சென்றனர்.அப்போது முதல் அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய முடியாது என மத்திய அரசே கூறிவிட்டது. செவிலியர் பணி நியமனத்தில் சலுகை வழங்க முடியாது என விதிகளை காட்டி அதிகாரிகள் மறுக்கின்றனர். தன்னால் முடிந்த வரை முயற்சித்து விட்டேன்.இருப்பினும் ஒப்பந்த பணியை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய கோப்பு தயாரித்து கவர்னருக்கு அனுப்பி உள்ளேன். கவர்னர் அனுமதி கிடைத்த பிறகு சம்பளம் உயர்த்தப்படும். இனி அதிகாரி களின் அலுவல கத்தை முற்றுகையிடுவது, மறியல் செய்யக் கூடாது என அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து முதல் -அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஒப்பந்த நர்சுகள் புறப்பட்டனர்.

    • 15-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வர்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்்ளது. இங்கு கிள்ளை பகுதியை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வர். இந்நிலையில் கிள்ளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் இருளர் சமூக மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 10 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தனர். இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். கிள்ளை பகுதியில் வசிக்கும் இருளர் சமுதாய மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இருளர் மக்கள் வந்தாலே, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கும் டாக்டர்கள், நர்சுகளை பணி நீக்கம் செய்ய வேண்டுமென போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாசலில் அமர்ந்து இருளர் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இத்தகவல் அறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இருளம் இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மற்ற சமுதாய மக்களுக்கு சிகிச்சை வழங்கப்படுவதை போல, தங்களுக்கும் சிகிச்சை வழங்க வேண்டும். கிராம மக்களிடையே பாரபட்சம் காட்டும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி னர். இருளர் இன மக்களின் திடீர் போராட்டத்தால் கிள்ளை பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 18 பெண்கள் உள்பட 28 பேர் கைது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி அமைப்பினர் சார்பில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, இந்தி திணிப்பு ஆகிய பிரச்சினைகளுக்காக மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தாலுகா செயலாளர் மொரச்சன் தலைமை தாங்கினார். போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் இப்ராகிம், ஆஷா பணியாளர் சங்க மாநில துணை தலைவர் வசந்தகுமாரி, ஏ.ஐ.டி.யு.சி செயலாளர் பெனடிக்ட், போக்குவரத்துக்கழக தொழிலாளர் சங்க நிர்வாகி தங்கதுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது அவர்கள் திடீரென பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைைமயி லான போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 18 பெண்கள் உள்பட 28 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது

    கடலூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட குழு கூட்டம் கடலூர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், மருதவாணன், உதயகுமார், கருப்பையா, ராமச்சந்திரன், திருவரசு, அசோகன், ரவிச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விலைவாசி உயர்வை எதிர்த்து, வேலையின்மைக்கு எதிராக காலி பணியிடங்களை மத்திய அரசு நிரப்ப அவுட்சோர்சிங் முறையை கைவிட கோரியும் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும், என்.எல்.சி நிறுவனத்தில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை மாற்று இடம் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 1 ந்தேதி முதல் 7 ந்தேதி வரை கடலூர் மாவட்ட முழுவதும் பிரச்சார இயக்கம் தெரு முனை கூட்டம் வீடுவீடாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்வது, கடலூர், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடியில் ெரயில் மறியல் போராட்டம். மற்றும் சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மையங்களில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 100-நாள் வேலை திட்டத்தில் முறையாக வழங்கவில்லை
    • தேவையானவர்களுக்கு மட்டும் வேலை வழங்கி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    கடலூர்:

    எழுத்தூர், பெருமுளை பகுதிகளில் முறையாக 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த எழுத்தூர் கிராமத்தில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு அங்கு நடைபெறும் ராஜூவ்காந்தி ஊராக 100-நாள் வேலை திட்டத்தில் முறையாக வழங்கவில்லை எனவும், எழுத்தூர் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு வறுமை கோடு சான்றிதழ் வழங்காமல் மாடி வீடு, சொத்துக்கள் உள்ளவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார்கள்.

    குறிப்பாக 100 நாள் வேலையில் தலைவர், செயலாளர், வார்டு நபர் உள்ளிட்டோர் அவர்களுக்கு தெரிந்த நபர்கள் மற்றும் உறவினர்களுக்கு வேலை கொடுத்து மற்றவர்களுக்கு முறையாக வேலை வழங்காததை கண்டித்து எழுத்தூர் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஊராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு முறையாக வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதின்பேரில் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    இதேபோன்று திட்டக்குடி அடுத்த பெருமுளை ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நடந்து வருகிறது. இதில் பணியாளர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேவையானவர்களுக்கு மட்டும் வேலை வழங்கி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தற்போது 6-வது வார்டு பொதுமக்கள் வேலை செய்யும் நாட்களில் 1-வது வார்டு பொதுமக்களுக்கு வேலை வழங்கியதால் 6-வது வார்டு பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் சசிகுமாரை இன்று காலை வழிமறித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் அனைத்து வார்டில் உள்ள அனைவருக்கும் வேறுபாடு இன்றி முறையாக அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் எனவும். ஊராட்சி பணியாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வரவேண்டும். அலுவலகத்தில் வைத்து தான் அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும், பெருமுளை ஊராட்சியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பட்டி யலில் பெரும் முறைகேடு கள் நடந்துள்ளது அதனை சரிசெய்ய வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் சசிக்குமாரை முற்றுகையிட்டனர்.

    ஊராட்சி செயலாளர் மற்றும் வார்டு நபர் இருவரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விரைவில் இந்த கோரிக்கைகள் நிறை வேற்றாவிட்டால் மங்களூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் தெரிவித்தனர்.

    • தனியார் துறை முகத்தை அண்மையில் அதானி குழுமம் கையகப்ப ப்டுத்தியுள்ளது.
    • பல்வேறு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திரு.பட்டினத்தை அடுத்துள்ள வாஞ்சூர் பகுதியில் இயங்கி வந்த, தனியார் துறை முகத்தை அண்மையில் அதானி குழுமம் கையகப்ப ப்டுத்தியுள்ளது. அதுமுதல், துறைமுகத்தின் பல்வேறு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வாஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் துப்புரவு ஊழியர்கள், கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்ப டுவார்கள் என கூறியதாக தெரிகிறது. ஆனால், 14 ஆண்டுகள் ஆகியும் ஒரு ஊழியரை கூட பணி நிர ந்தரம் செய்யப்படவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள், துறைமுகம் வாயிலில் முற்றுகையிட்டு போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட் டத்தின்போது, 14 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பெண் துப்புரவு ஊழியர்களை, உடனே பணி நிரந்தரம் செய்யவேண்டும். என வலியுறுத்தப்பட்டது. இதை அறிந்த, திரு.பட்டினம் போலீசார், போராட்டக்காரர்களுடன் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, துறை முகம் நிர்வாகத்துடன் இது குறித்து பேசப்படும் என சமாதானம் செய்ததையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனர்.

    • விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பிரகதீஷ், கோடீஸ்வரன், பால ஜனகராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம்சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் முத்து கேசவலு, கோவிந்தராஜ், பாலுசாமி, ராமமூர்த்தி, தினேஷ், பிரகதீஷ், கோடீஸ்வரன், பால ஜனகராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் நிர்வாகிகள் வீர.பாரதி, ராமச்சந்திரன், ஜனா,சுப்பிரமணி, ஆறுமுகம், அசோக், சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் மாநிலத்தில் விளையாட்டு துறை மற்றும் விளையாட்டு வீரர்கள் நிலை குறித்து முழுவதும் விவாதிக்கப்பட்டது.

    விளையாட்டுக்கு தனி துறை ஏற்படுத்துவது, விளையாட்டு கவுன்சிலை தொடர்ந்து நடத்த அரசு ஏற்பாடு செய்ய வற்புறுத்துவது, தொகுதி வாரியாக அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கங்கள் ஏற்படுத்த வலியுறுத்துவது வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு பென்ஷன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல வருடங்களாக கணக்கு தாக்கல் செய்யாமல் பணம் செலவு செய்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட விளையாட்டு கவுன்சில் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காதது, செய்த தவறுகளை மறைப்பதற்காக புதிதாக சட்ட விரோதமாக புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையம் ஏற்படுத்தியதை பலமுறை சுட்டிக்காட்டியும் இதுவரை கலைக்காமல் இருப்பது, சென்டாக் மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தகுதி இல்லாத உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு விளையாட்டு வீரர்களின் சான்றிதழை சரி பார்ப்பது, விளையாட்டு வீரர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் வழங்காதது இதுபோன்று தொடர்ந்து விளையாட்டு வீரர்களை அலட்சியம் செய்து வரும் புதுவை அரசையும், கல்வித்துறையும் கண்டித்து விரைவில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    முன்னதாக சதீஷ் வரவேற்றார் முடிவில் செந்தில்வேல் நன்றி கூறினார்.

    • பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.
    • பிரதான நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.

    பேச்சுவார்த்தை

    அப்போது அங்கு பிரதான நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் அலுவலகத்திற்குள் மனு கொடுக்க அனைவரையும் அனுமதிக்க முடியாது. எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதிகபட்சம் 5 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றனர்.

    இதனை தொடர்ந்து 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர். அவர்கள் மனு கொடுத்து விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக விரோதிகள் அட்டகாசம்

    வாய்க்கால் பட்டறை அரசு பள்ளி அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த பகுதியில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பதும், மது குடிப்பதும் என அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் நடந்து செல்லும் பெண்களை தகாத வார்த்தையில் பேசி மிரட்டி வருகின்றனர்.

    மேலும் கடந்த 8-ந் தேதி சிறுமி ஒருவரை தகாத வார்த்தையில் பேசி உள்ளனர். இதனால் தட்டி கேட்ட எங்கள் மீது மர்ம கும்பல் சரமாரியாக தாக்கினர்.

    இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    எனவே அப்பகுதியில் கஞ்சா, மது குடித்து ரகளையில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக கைது செய்து பொதுமக்களை அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஏக்குனி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் சென்றனர்.
    • 24 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகா உல்லத்தி ஊராட்சியில் பன்னிபுரா, ஏக்குனி உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் மலைவேடர் இனத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. இதில் ஏக்குனி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் சென்றனர். அப்போது பன்னிபுரா, ஏக்குனி பகுதி மலைவேடர் இனத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து ஏக்குனி பள்ளிக்கூடத்தை காலை 10 மணிக்கு திடீரென முற்றுகையிட்டனர்.

    மேலும் அப்பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளை வகுப்புகளில் இருந்து வெளியே அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மலை வேடர் இன மக்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள பழனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மலை வேடர் இன மக்கள் வசித்து வருகிறோம். கடந்த 1999-ம் ஆண்டு வரை எங்களுக்கு இந்து மலைவேடர் பழங்குடியினர் என குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

    ஆனால் அதன் பின்னர் 24 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்க வில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எங்களின் குழந்தைகள் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் படித்து என்ன பயன். லட்சியத்துடன் படிக்கும் மாணவர்கள் எதிர்காலம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது, இதனால் பள்ளிக்கூடங்களில் படிக்கும் எங்கள் குழந்தைகளின் மாற்று சான்றிதழை கேட்டு பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பங்கள் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் ஆவேசமாக கூறினர்.

    தகவல் அறிந்த ஊட்டி வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து மலைவேடர் இன மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தங்கள் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மலை வேடர் இன மக்கள் தெரிவித்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் 10-ம்வகுப்பில் மதிப்பெண் குறைந்த மாணவர்களை சேர்க்க மறுப்பதுடன், வேறு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை தர இயலாது என தலைமையாசிரியர் கூறியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இதனால் தலைமையாசிரியரை மாணவர்களின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பவானி ஆற்றில் இருந்து சிட்டேபாளையத்திற்கு வரும் தண்ணீர் சுத்தமாக வருவதில்லை.
    • பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமாரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது பெள்ளேபாளையம் ஊராட்சி.

    இதில் மொத்தம் 13 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு பவானி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வந்து இரும்பறை ஊராட்சியில் உள்ள சிட்டேபாளையம் நீரேற்று கிணற்றில் தண்ணீர் நிரப்பி அங்கு 3 அடுக்கு முறையில் தண்ணீரை சுத்திகரித்து அதன் பின் ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம், இலுப்பநத்தம், இரும்பறை உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் பவானி ஆற்றில் இருந்து சிட்டேபாளையத்திற்கு வரும் தண்ணீர் சுத்தமாக வருவதில்லை என்றும், அருகே உள்ள குட்டை நீர் சிட்டேபாளையம் நீரேற்று நிலையத்தில் கலந்து பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் தண்ணீர் வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமாரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து இன்று காலை பெள்ளேபாளையம் ஊராட்சியை சேர்ந்த வெள்ளிகுப்பம்பாளையம், எஸ்.ஆர்.எஸ்.நகர் தென்பொன்முடி, எலகம்பாளைய,ம் வடபகத்தூர், எஸ்.எஸ்.நகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உள்ள சிறுமுகை-அன்னூர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஊராட்சி தலைவர் சிவக்குமார், அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது இன்ஸ்பெக்டர் நித்யா திடீரென மறியலில் ஈடுபட்டிருந்த ஒருவரை பிடித்து இழுக்க முயற்சித்தார். இதனைப் பார்த்த சக பொதுமக்கள், இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் மறியல் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் தொடர்ந்தது.

    ×