search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Principal"

    • பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் 10-ம்வகுப்பில் மதிப்பெண் குறைந்த மாணவர்களை சேர்க்க மறுப்பதுடன், வேறு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை தர இயலாது என தலைமையாசிரியர் கூறியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இதனால் தலைமையாசிரியரை மாணவர்களின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் செயல்படுத்தி வருகிறார்.
    • தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் என்று மானாமதுரை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் உள்ள இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தமிழக அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஏராளமான திட்டபணிகள் நடைபெற்று வருகிறது.

    மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்-முன்னாள் அமைச்சர் ஆ.தமிழரசி ரவிக்குமார் கூறியதாவது:- தாயுள்ளம் கொண்ட நமது தமிழக முதல்வர் இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும், திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் செயல்படுத்தி வருகிறார்.

    மகளிர் முன்னேற்றத்தில்மிகவும் அக்கறையுடன் கட்டணமில்லா பஸ்பயணம், உயர் கல்வி கற்கும் மாணவிகளுக்குமாதம் ரூ.1000 திட்டம், வரும்பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், வீடுதேடிவரும்மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங்களும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    இதுதவிர மாதந்தோறும் மாவட்டங்களில் திட்டங்கள் செயல்படுத்துவது பற்றி கள ஆய்வு பணி, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் நிறைவேற்றப்படாத வளர்ச்சி பணிகள் நமது மானாமதுரை தொகுதியில் இளையான்குடி பேரூராட்சிக்கு தற்போது ரூ.9 கோடி மதிப்பில் திட்டப்பணிகள், மானாமதுரை வைகை ஆற்றில் புதிய பாலம், நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலக கட்டிடங்கள், உயர் நிலை-மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், புதிதாக நெல்கொள்முதல் நிலையங்கள், மானாமதுரையில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம், திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல், செல்லப்பனேந்தல் இடையே வைகைஆற்றில் புதிய பாலம், மானாமதுரை வைகைஆற்றில் குடிநீர்திட்டத்திற்காக தடுப்பணைகள், கிராமங்கள் முழுவதும் புதிதாக பஸ் வசதி, மானாமதுரையில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி மையம்,சொட்டதட்டி- பனையூர் சுற்றுசாலை திட்டம், தற்போது உலகமே வியக்கும் கீழடி, கொந்தகை, மணலூர்அகழ்வாராய்ச்சி பணிகள் முடிக்கப்பட்டு இன்று ரூ.18 கோடி மதிப்பீட்டில் தமிழக செட்டிநாடு கலையில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும், அகழ்வாராய்ச்சி பணியில் கிடைத்த பல அரிய பொருட்களை தமிழக மக்கள் எளிதாக பார்த்து பயன் அடையும் வகையில் எதிர்கால நமது தலைமுறைக்காக கீழடியில் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்தை தாயுள்ளம் படைத்த நமது தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு பெருமை ஆகும்.

    மதுரை-ராமேசுவரம் சாலையில் இருந்து எளிதாக கீழடிஅருங்காட்சியகம் வருவதற்காக புதிய சர்வீஸ் சாலை மற்றும் சாலையை கடக்க நடைபாலம் அமைக்கவும், சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம், கீழக்கரையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
    • குடியரசு தின விழா தலைமையாசிரியர் தபசுமுத்து தலைமையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரசபை அலுவலகத்தில் குடியரசு தினவிழா ஆணையாளர் சுரேந்திரன் தலைமையில் நடந்தது. நகரசபை தலைவர் கார்மேகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    தொடர்ந்து நகர சபை அலுவலக வளாகத்தில் உள்ள காத்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துணை தலைவர் பிரவின் தங்கம், கணக்காளர் பத்மநாபன், மேலாளர் நாகநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடந்தது. யூனியன் தலைவர் பிரபாகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் துணை தலைவர் ராஜவேணி, ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது கொடியேற்றினார். நேர்முக உதவியாளர் பாலமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவில் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் ராசிகா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். மாணவ- மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சத்தியேந்திரன் செய்தார்.

    கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த 74-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு முதல்வர் சதக்கத்துல்லா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். குடியரசு தின விழா உறுதிமொழியை நுண்ணு யிரியல் துறை பேராசிரியை ஷோபனா முன்மொழிய, அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக் கொண்டனர்.

    பெரியப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா தலைமையாசிரியர் தபசுமுத்து தலைமையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அசன் அலி, முகமது களஞ்சியம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நல்லாசிரியர் முத்துக்குமார் தொகுத்து வழங்கினார்.

    • கழிவறைக்குள் வைத்து பூட்டுவேன் என பள்ளிக் குழந்தைகளை மிரட்டிய நபர்.
    • சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை அடுத்து நடவடிக்கை.

     பல்லியா:

    உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது.

    அந்த வீடியோவில் பள்ளி குழந்தைகள் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்வதும், ஒரு நபர் அவர்களை திட்டுவதும் இடம் பெற்றுள்ளது. சொன்னபடி செய்யா விட்டால் கழிவறைக்குள் வைத்து பூட்டி விடுவேன் என்றும் அந்த நபர் மிரட்டுவது அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அந்த பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து தெரிவித்துள்ள மாவட்ட கல்வி அதிகாரி மணிராம் சிங், சோஹான் பிளாக்கில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இந்த வீடியோ பதிவு நடந்துள்ளது என்றும், இது தொடர்பாக அந்த பகுதி கல்வி அதிகாரி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பள்ளி முதல்வர் மிருத்யுஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்றும் கூறினார். தலைமையாசிரியர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

    ×