search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், தலைவாசலில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை, ஆர்ப்பாட்டம்
    X

    தலைவாசல் தபால் நிலையம் முன்பு மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் போராட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    சேலம், தலைவாசலில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை, ஆர்ப்பாட்டம்

    • 2 ஆண்டு சிறை தண்டனையை கண்டிக்கின்ற வகையில், இன்று காலை சேலம் செவ்வாய்பேட்டை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு,
    • மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சேலம்:

    ராகுல் காந்தி எம்.பி பதவி பறிப்பு மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனையை கண்டிக்கின்ற வகையில், இன்று காலை சேலம் செவ்வாய்பேட்டை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.ஆர். பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் வர்த்தக பிரிவு எம்.டி.சுப்பிரமணி, பொதுச்செயலாளர் தாரை ராஜகணபதி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணசாமி, மேகநாதன், வக்கீல் பிரிவு ரஞ்சித்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் மெடிக்கல் பிரபு, பழனி, திருமுருகன் வசந்தம் சரவணன், மாநகர பொதுச்செயலாளர் கோபி குமரன், உடையாபட்டி பிரகாஷ், சுரேஷ் பாபு, மொட்டையாண்டி, ஓ.பி.சி பிரிவு பர்வேஷ், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிசார், சிவக்குமார், வரதராஜ், இளைஞரணி ராஜ்பாலாஜி, ரத்தினவேல் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தலைவாசல்

    ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனையை கண்டித்து இன்று காலை, சேலம் மாவட்டம், தலைவாசல் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சங்கரைய்யா, வட்டாரத் தலைவர் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மூடுதுறை கனகராஜ், ஜே.பி.கிருஷ்ணா, ஆட்டையாம்பட்டி சாமி, தங்கராஜ், அருள்ஆனந்தம்,

    கண்ணன், ராமர், தன்ராஜ், சிவாஜி, சசிகுமார் குருசேவ், ரவிக்குமார், முருகேசன், அழகுவேல், நேதாஜி மணிமாறன், ராஜேஷ், வெள்ளையன், கிருஷ்ணன், நந்தினி, டைலர் கணேசன், ஜெய்ஆனந்த், மணிகண்டன், ஜெயபால், செல்வமுருகன், ஆத்தூர் சம்பத் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×