search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mail"

    • கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (திங்கட்கி ழமை) காலை 10.30 மணிக்கு சேலம் தலைமை அஞ்சல் அலுவல கத்தில் நடைபெறுகிறது.
    • சேலம் கிழக்கு கோட்டம் அலுவலக முகவரிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்கா ணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறி இருப்பதா வது:-

    கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (திங்கட்கி ழமை) காலை 10.30 மணிக்கு சேலம் தலைமை அஞ்சல் அலுவல கத்தில் நடைபெறுகிறது.

    எனவே பொதுமக்கள் அஞ்சல் சம்பந்தமான குறை கள் இருப்பின் புகார்களை குறைதீர்க்கும் நாளன்று நேரில் அல்லது முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம் அலுவலக முகவரிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மணியார்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் எனில் அனுப்பிய தேதி, முழு விலாசம், பதிவு அஞ்சல் எண், அலுவல கத்தின் பெயர் அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

    சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்பு தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை (சனிக்கிழமை) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது.
    • சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்பமாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 30-ந் தேதி உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது. ஒருவர் தனது சராசரி தேவைகளுக்கு பிறகு சேமிக்கும் சிறிய பணமும் சேமிப்பாகும். எனவே, பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் சேமிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய அஞ்சலகங்களின் சேமிப்பு கணக்கு சிறந்ததாகும்.

    அஞ்சலகத்தில் எல்லா பிரிவினர், வயதினருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்பமாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை. இதுவரை அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறாத பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எளிய முறையில் கணக்கு தொடங்கலாம். எனவே, அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வேறு திட்டத்தில் சேர்ந்து கூடுதல் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேலும், கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். உலக சிக்கன தினத்தை முன்னிட்டு அனைத்து பெரிய தபால் அலுவலகங்களிலும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு கவுன்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×