search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிழக்கு கோட்ட அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    கிழக்கு கோட்ட அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம்

    • கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (திங்கட்கி ழமை) காலை 10.30 மணிக்கு சேலம் தலைமை அஞ்சல் அலுவல கத்தில் நடைபெறுகிறது.
    • சேலம் கிழக்கு கோட்டம் அலுவலக முகவரிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்கா ணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறி இருப்பதா வது:-

    கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (திங்கட்கி ழமை) காலை 10.30 மணிக்கு சேலம் தலைமை அஞ்சல் அலுவல கத்தில் நடைபெறுகிறது.

    எனவே பொதுமக்கள் அஞ்சல் சம்பந்தமான குறை கள் இருப்பின் புகார்களை குறைதீர்க்கும் நாளன்று நேரில் அல்லது முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம் அலுவலக முகவரிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மணியார்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் எனில் அனுப்பிய தேதி, முழு விலாசம், பதிவு அஞ்சல் எண், அலுவல கத்தின் பெயர் அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

    சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்பு தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×