என் மலர்
நீங்கள் தேடியது "government doctors"
- கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு.
- கொரோனோ பெருந்தொற்று பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும்.
முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் - செவிலியர் பணியிடங்களை நியமனம் வேண்டும் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியைக்கூடச் செய்ய மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
கொரோனா பெருந்தொற்றுக் காலம் முதல் தற்போதைய டெங்கு தொற்றுக் காலம் வரை தம் உயிரைப் பொருட்படுத்தாது, மக்கள் உயிர் காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றி வருபவர்கள் அரசு மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள் வர அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க கடின உழைப்பே முதன்மையான காரணமாகும். தமிழ்நாட்டின் 18000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை-எளிய தமிழக மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளனர்.
ஆடம்பரத் திட்டங்களுக்காகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கும் திமுக அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவர்கள் வீதியில் இறங்கிப் போராடியும், அவர்களது அடிப்படை உரிமைகளைக் கூட இன்றுவரை நிறைவேற்றாமல் அலட்சியம் செய்வது கொடுங்கோன்மையாகும்.
அதுமட்டுமன்றி, கொரோனோ பெருந்தொற்றுப் பணியின்போது உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும், அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சிறிதும் மனச்சான்று இன்றி திமுக அரசு ஏற்கமறுப்பது அதைவிடவும் பெருங்கொடுமையாகும்.
கடந்த 22.11.2020 அன்று மருத்துவப்பணியில் இருக்கும்போதே கொரோனா தொற்றால் மரணமடைந்த திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் விவேகானந்தன் அவர்கள் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அவருடைய மனைவி திவ்யாவிற்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி கேட்டுப் பலமுறை முறையிட்டும் திமுக அரசு அவரது கோரிக்கைக்கு இன்றுவரை செவிமடுக்கவில்லை.
அரசு மருத்துவர் விவேகானந்தன் மரணத்திற்குப் பிறகு அவரது ஏழைக் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அவரது மனைவிக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்று முதலில் அறிக்கை வெளியிட்டது வேறு யாருமல்ல; அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய முதல்வருமான ஐயா ஸ்டாலின் அவர்கள்தான்! தான் முன்வைத்த கோரிக்கையை, தன் கையில் அதிகாரம் கிடைத்த பிறகு நிறைவேற்ற மறுப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.
கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, உயிரைக் காப்பாற்றும் அரசு மருத்துவர் பணியின் போது ஏற்பட்ட கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவரது குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைப்பதுதான் சமூக நீதியா?!
உயிர்களைக் காக்க நாள்தோறும் போராடிவரும் மருத்துவர்கள் தங்கள் உரிமைகளைக் காக்க ஆண்டுக்கணக்கில் போராடிவரும் துயரம் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலை நீடிப்பது மருத்துவர்களின் ஈகத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதை உணர்ந்து, திமுக அரசு, மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அரசாணை 354-ன் படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் உயிர் காக்க தன் உயிரைப் பணயம் வைத்த அரசு மருத்துவரின் குடும்பத்தை ஒரு கருணை வேலைக்காகக் காத்திருக்கச் செய்து அலைகழிப்பது என்பது, மருத்துவர்களின் ஈகத்தையும், அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துவதாகும். திமுக அரசின் இத்துரோகச்செயல், இனிவரும் இளந்தலைமுறை மருத்துவர்களிடத்தில் சேவைபுரிய வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடும் கொடுஞ்சூழலை ஏற்படுத்திவிடும்.
ஆகவே, கொரோனோ பெருந்தொற்று பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும், முறைப்படி வழங்க வேண்டிய உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும், போதிய மருத்துவர் - செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி எதிர்வரும் 11.06.2025 அன்று சேலம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அரசு மருத்துவர் பெருமக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.
- பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்களா?
- மருத்துவர் பிரபாகரனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவரை தனியாருக்கு மாற்றி பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் மனித உரிமைகள் ஆணையம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க செல்லும் அரசு மருத்துவர்களை கண்காணிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.
பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்களா? என கண்காணிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனை தீக்காயப்பிரிவு மருத்துவர் பிரபாகரனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க ஆஐண பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- பதவி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அரசு டாக்டர்கள் கூறினர்.
- கோரிக்கையை நிறைவேற்ற வில்லை யென்றால் அடுத்து நடத்தும் போராட்டம் நோயாளிகளை பாதிக்கும்.
மதுரை
மதுரையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் செந்தில், இளமாறன், குமரதேவன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தனர். அவர்கள் கூறிய தாவது:-
தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி அரசு மருத்துவர்க ளுக்கான பதவி உயர்வு தொடர்பான அர சாணை 293-ஐ அமல் படுத்துவோம் என்று தெரிவித்தது. ஆனால் இன்று வரை இந்த கோரிக் கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்ப்பு தெரி விப்பவர்கள் நீதிமன்றம் வரை சென்று இந்த அரசா ணைக்கு தடை விதிக்க உத்தரவு பெற இருப்பதா கவும் கூறினர்.
இந்த அரசாணையை பலமுறை நிறைவேற்ற எங்களது சங்க நிர்வாகி களிடம் அமைச்சர் பேசியும் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனவே முதல்- அமைச்சர் இதில் தலையிட்டு 16 ஆயிரம் மருத்துவர்கள் பயன்பெறக்கூடிய இந்த ஆணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக ளில் காலியாக உள்ள 450 பேராசிரியர் பணியிடங்க ளையும், 550 இணை பேரா சிரியர்கள் பணியிடங்க ளையும் உடனடியாக நிரப்ப வேண்டும். இல்லையென் றால் வரும் காலங்களில் அரசு கல்லூரிகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.
மேலும் வருகிற 14-ந் தேதி நடைபெறும் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் மே 29-ந்தேதி முதல் நடத்தவுள்ள போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும். இதுவரை நாங்கள் நடத்திய போராட்டங்கள் அமைச்சரின் வாக்குறுதியை கேட்டு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த நிலையில் கால தாமதப்படுத்தாமல் உடனடி யாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை யென்றால் அடுத்து நடத்தும் போராட்டம் நோயாளிகளை பாதிக்கும் அளவில் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- எப்போது புதிய மருத்துவர்கள் தேர்வு நடைபெறும் என்பது தெரியவில்லை.
- காலியிடங்களையும் அண்மையில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புவது தான் சரியாக இருக்கும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு மருத்துவமனைகளில் காலியிடங்கள் அதிகரித்ததற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு ஐந்தாண்டுகளில் முதன் முறையாக இப்போது தான் மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்குப் பிறகு எப்போது புதிய மருத்துவர்கள் தேர்வு நடைபெறும் என்பது தெரியவில்லை. அரசு மருத்துவமனைகளில் புதிதாக ஏற்பட்டுள்ள காலியிடங்களையும் அண்மையில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புவது தான் சரியாக இருக்கும். அது தான் தமிழ்நாட்டு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயன் அளிக்கும். எனவே, மக்களின் நலனையும், மருத்துவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை 1752 ஆக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது.
- இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
சமீப காலங்களில் இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. பல இளம் வயது நபர்கள் இதில் பலியாகின்றனர். இக்கால வாழ்க்கை முறையும், உணவு பழக்க வழக்கங்களும், மன அழுத்தம், சமூதாய சூழல் மற்றும் பல காரணங்கள் மாரடைப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
பெரும்பாலும் ஒருவரின் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் மருத்துவர்கள், அவர்களுக்கு முதலில் செய்யும் ஒரு சிகிச்சை ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி. இதில் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் எந்த இரத்த குழாயில் அடைப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்து அதில் ஸ்டெண்ட் வைத்து அந்த அடைப்பை அகற்றுவர். இதில் இரத்த குழாயில் எந்தளவுக்கு அடைப்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து மருத்துவர் சதவீத அளவை கணக்கிடுவர்.
இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். பொதுவாக 100 சதவீத அடைப்பு ஏற்பட்டவர்கள் உயிர்பிழைப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த நிலையை புரட்டிப் போடும் வகையில், மருத்துவர்கள் ஒரு மனம் நெகிழும் சம்பவத்தை நடத்தியுள்ளனர்.
இதயத்தின் பெரிய இரத்தக்குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்ட 58 வயதான வழக்கறிஞர் எம்.ஸ்டாலின் மணி என்பவரை மருத்துவர்கள் குணப்படுத்தி உள்ளனர். இதற்காக அவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ரத்தக்குழாயில் "ஸ்டென்ட்" பொருத்தி அடைப்பை சரி செய்துள்ளனர். இதன் மூலம் அவர் மறுவாழ்வு பெற்றுள்ளார்.
பூரண குணமடைந்ததிற்கு பின் அவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் , மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதியை சந்தித்து சால்வை அணிந்து நன்றி தெரிவித்தார். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூட செய்யத் தயங்கும் அறுவை சிகிச்சையை அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து நடத்தி வெற்றி பெற்று இருப்பது பாராட்டை குவித்து வருகிறது.
மேலும், இதுபோன்ற செயல்கள் நடக்கும் போது அரசு மருத்துவனை மீதும் அரசு மருத்துவர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
- உய்யூரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் கவுட் என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவித்தார்.
- ஆந்திர மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
ஆந்திரா மாநில அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் டாக்டர்கள் சரிவர வேலைக்கு வராததால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன.
இந்த நிலையில் கிருஷ்ணா மாவட்டம், உய்யூரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் கவுட் என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவித்தார்.
புகாரில் மாவட்டத்தில் உள்ள டாக்டர்கள் கடந்த ஒரு ஆண்டாக எந்தவித அனுமதியோ விடுப்போ எடுக்காமல் வேலைக்கு வராமல் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இது குறித்து ஆந்திர மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 55 அரசு டாக்டர்களை பணி நீக்கம் செய்தனர்.
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த முகமதுயூனிஸ் ராஜா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் கடந்த 4-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நோயாளிகளுக்கு ஆபரேசன் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் ஏழை நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
எனவே நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு டாக்டர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கஜா புயல் நிவாரண பணிகளில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார். அந்த பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் டாக்டர்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றித்தரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் கடந்த 15 நாட்களாக கஜா புயல் நிவாரண பணிகள் நடக்கிறது. அதற்கு முன்பே ஏன் டாக்டர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
அரசு டாக்டர்கள் சங்க வக்கீல் வாதாடுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தையும், பதவி உயர்வை மட்டுமே செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். அதுகுறித்து நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன் பின்னர் வருகிற 17-ந்தேதி வரை போராட்டத்தை நிறுத்திவைப்பதாக அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. #Doctorsstrike
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் அரசு டாக்டர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் அனைத்து பயணப்படிகளும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை பேட்ஜ் அணிவது, தர்ணா உள்பட தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அரசின் கவன ஈர்ப்பு பேரணி நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கவன ஈர்ப்பு பேரணி புறப் பட்டது. பேரணிக்கு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் சிவ பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரியில் இருந்து பேரணி புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்.
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பு நிர்வாகி சீனிவாசன் தலைமையில் அரசு டாக்டர்கள் சுரேஷ்பாபு, திருலோகசந்தர், உமாதேவி, செந்தில்குமார், சந்தனகுமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து பேரணியாக புறப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து டாக்டர்கள் தெரிவிக்கையில், ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளோம். அடுத்த கட்டமாக செப்டம்பர் 9-ந் தேதி சென்னை கோட்டையை நோக்கி ஊர்வலம் செல்வது என்றும் அதன்பின்னும் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவது எனவும் தெரிவித்தனர். #tamilnews
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக டாக்டர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் பாலாஜி நாதன், தாமோதரன், பேராசிரியர்கள் பிரிவு தலைவர் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் சங்க பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உயர்த்திடு உயர்த்திடு அலவென்ஸ் பணத்தை உயர்த்திடு, வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும், வேலைக்கேற்ற ஊதியம் மருத்துவர்களுக்கு கவுரவம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து டாக்டர் செந்தில் நிருபர்களிடம் கூறுகையில், மற்ற துறைகளை விட டாக்டர்களுக்கு அதிக பணிசுமை ஏற்படுகிறது. மதுரையை பொறுத்தமட்டில் டாக்டர்களின் பணி முக முக்கியமாதாக இருக்கிறது. எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்க வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுள்ளது.
போராட்டத்தின் அடுத்தகட்டமாக வருகிற 24-ந்தேதி ஊர்வலமும், 27-ந்தேதி ஒத்துழைமையாக இயக்கம் என்ற பேரில் போராட்டமும் நடக்கிறது. இந்த போராட்டங்களால் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதது.
போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக அடுத்த மாதம் 21-ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருக்கிறோம். எனவே அரசு எங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவமனைக்கு இணையான ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதில் டாக்டர்கள் புலிகேசி சாமிநாதன் சசிகுமார் ஸ்ரீதரன் உள்பட 40க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் விருத்தாசலம் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் கடலூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews






