search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Doctors"

    • எப்போது புதிய மருத்துவர்கள் தேர்வு நடைபெறும் என்பது தெரியவில்லை.
    • காலியிடங்களையும் அண்மையில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புவது தான் சரியாக இருக்கும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு மருத்துவமனைகளில் காலியிடங்கள் அதிகரித்ததற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு ஐந்தாண்டுகளில் முதன் முறையாக இப்போது தான் மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்குப் பிறகு எப்போது புதிய மருத்துவர்கள் தேர்வு நடைபெறும் என்பது தெரியவில்லை. அரசு மருத்துவமனைகளில் புதிதாக ஏற்பட்டுள்ள காலியிடங்களையும் அண்மையில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புவது தான் சரியாக இருக்கும். அது தான் தமிழ்நாட்டு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயன் அளிக்கும். எனவே, மக்களின் நலனையும், மருத்துவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை 1752 ஆக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பதவி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அரசு டாக்டர்கள் கூறினர்.
    • கோரிக்கையை நிறைவேற்ற வில்லை யென்றால் அடுத்து நடத்தும் போராட்டம் நோயாளிகளை பாதிக்கும்.

    மதுரை

    மதுரையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் செந்தில், இளமாறன், குமரதேவன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தனர். அவர்கள் கூறிய தாவது:-

    தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி அரசு மருத்துவர்க ளுக்கான பதவி உயர்வு தொடர்பான அர சாணை 293-ஐ அமல் படுத்துவோம் என்று தெரிவித்தது. ஆனால் இன்று வரை இந்த கோரிக் கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் எதிர்ப்பு தெரி விப்பவர்கள் நீதிமன்றம் வரை சென்று இந்த அரசா ணைக்கு தடை விதிக்க உத்தரவு பெற இருப்பதா கவும் கூறினர்.

    இந்த அரசாணையை பலமுறை நிறைவேற்ற எங்களது சங்க நிர்வாகி களிடம் அமைச்சர் பேசியும் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனவே முதல்- அமைச்சர் இதில் தலையிட்டு 16 ஆயிரம் மருத்துவர்கள் பயன்பெறக்கூடிய இந்த ஆணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக ளில் காலியாக உள்ள 450 பேராசிரியர் பணியிடங்க ளையும், 550 இணை பேரா சிரியர்கள் பணியிடங்க ளையும் உடனடியாக நிரப்ப வேண்டும். இல்லையென் றால் வரும் காலங்களில் அரசு கல்லூரிகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.

    மேலும் வருகிற 14-ந் தேதி நடைபெறும் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் மே 29-ந்தேதி முதல் நடத்தவுள்ள போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும். இதுவரை நாங்கள் நடத்திய போராட்டங்கள் அமைச்சரின் வாக்குறுதியை கேட்டு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த நிலையில் கால தாமதப்படுத்தாமல் உடனடி யாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை யென்றால் அடுத்து நடத்தும் போராட்டம் நோயாளிகளை பாதிக்கும் அளவில் இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வருகிற 17-ந்தேதி வரை போராட்டத்தை நிறுத்திவைப்பதாக அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. #Doctorsstrike
    மதுரை:

    மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த முகமதுயூனிஸ் ராஜா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் கடந்த 4-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நோயாளிகளுக்கு ஆபரேசன் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் ஏழை நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    எனவே நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு டாக்டர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.



    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு நபர் கமி‌ஷன் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    கஜா புயல் நிவாரண பணிகளில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார். அந்த பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் டாக்டர்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றித்தரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து நீதிபதிகள் கடந்த 15 நாட்களாக கஜா புயல் நிவாரண பணிகள் நடக்கிறது. அதற்கு முன்பே ஏன் டாக்டர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

    அரசு டாக்டர்கள் சங்க வக்கீல் வாதாடுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தையும், பதவி உயர்வை மட்டுமே செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். அதுகுறித்து நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என்றார்.

    இதையடுத்து நீதிபதிகள் டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன் பின்னர் வருகிற 17-ந்தேதி வரை போராட்டத்தை நிறுத்திவைப்பதாக அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. #Doctorsstrike


    கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 21-ந்தேதி அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் செந்தில் தெரிவித்தார்.
    பெரம்பலூர்:

    மத்திய அரசு, டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பணப்படிகளுக்கு இணையாக தமிழ்நாடு அரசு அனைத்து டாக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த கோரிக்கையை குறித்த விளக்க கூட்டம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மகாலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை வகித்து பேசினார். துணைத்தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் டாக்டர் அர்ச்சுனன், செயலாளர் டாக்டர் ரமேஷ் மற்றும் அந்த கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த டாக்டர்களும் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் செந்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு, டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பணப்படிகளுக்கு இணையாக தமிழ்நாடு அரசு அனைத்து டாக்டர்களுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஏற்கனவே சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள அரசு டாக்டர்கள் மாவட்ட அளவில் தர்ணா போராட்டமும், கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலத்தை நடத்தினர். கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி டாக்டர்கள் பேரணியும் நடத்தவுள்ளோம். அப்படியும் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லையென்றால் செப்டம்பர் 21-ந்தேதி எந்தவித சிகிச்சை பணிகளிலும் ஈடுபடாமல் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.
    மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் அரசு டாக்டர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் அனைத்து பயணப்படிகளும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை பேட்ஜ் அணிவது, தர்ணா உள்பட தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அரசின் கவன ஈர்ப்பு பேரணி நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கவன ஈர்ப்பு பேரணி புறப் பட்டது. பேரணிக்கு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் சிவ பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரியில் இருந்து பேரணி புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர். 
    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    திண்டுக்கல்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கூட்டமைப்பு நிர்வாகி சீனிவாசன் தலைமையில் அரசு டாக்டர்கள் சுரேஷ்பாபு, திருலோகசந்தர், உமாதேவி, செந்தில்குமார், சந்தனகுமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து பேரணியாக புறப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து டாக்டர்கள் தெரிவிக்கையில், ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளோம். அடுத்த கட்டமாக செப்டம்பர் 9-ந் தேதி சென்னை கோட்டையை நோக்கி ஊர்வலம் செல்வது என்றும் அதன்பின்னும் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவது எனவும் தெரிவித்தனர். #tamilnews
    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கக்கோரி மதுரையில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக டாக்டர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் பாலாஜி நாதன், தாமோதரன், பேராசிரியர்கள் பிரிவு தலைவர் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உயர்த்திடு உயர்த்திடு அலவென்ஸ் பணத்தை உயர்த்திடு, வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும், வேலைக்கேற்ற ஊதியம் மருத்துவர்களுக்கு கவுரவம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து டாக்டர் செந்தில் நிருபர்களிடம் கூறுகையில், மற்ற துறைகளை விட டாக்டர்களுக்கு அதிக பணிசுமை ஏற்படுகிறது. மதுரையை பொறுத்தமட்டில் டாக்டர்களின் பணி முக முக்கியமாதாக இருக்கிறது. எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்க வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

    போராட்டத்தின் அடுத்தகட்டமாக வருகிற 24-ந்தேதி ஊர்வலமும், 27-ந்தேதி ஒத்துழைமையாக இயக்கம் என்ற பேரில் போராட்டமும் நடக்கிறது. இந்த போராட்டங்களால் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதது.

    போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக அடுத்த மாதம் 21-ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருக்கிறோம். எனவே அரசு எங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    மத்திய அரசு மருத்துவமனைக்கு இணையான ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்க வலியுறுத்தி கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவமனைக்கு இணையான ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோ‌ஷம் எழுப்பினார்கள். இதில் டாக்டர்கள் புலிகேசி சாமிநாதன் சசிகுமார் ஸ்ரீதரன் உள்பட 40க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் விருத்தாசலம் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் கடலூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் நடந்தது.

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பணியின் போது ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளில் உள்ள ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கோரிக்கையினை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    சென்னையில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் பி.பால கிருஷ்ணன் தலைமையில் இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    தர்ணா போராட்டம் குறித்து டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    மத்திய அரசில் பணிபுரியும் டாக்டர்களும், தமிழக அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கும் இடையே ரூ.25 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை ஊதிய முரண்பாடு இருக்கிறது.

    இதனால் ஆண்டுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படுகிறது. 7-வது ஊதிய குழுவில் இதனை சரி செய்து அறிவிக்க வேண்டும். 2008-ம் ஆண்டு முதல் ஊதிய முரண்பாடு குறித்து போராடி வருகிறோம். ஆனால் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார். #tamilnews
    மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க கோரி நாளை தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம் என்று சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரிகளில் தர்ணா போராட்டம் நடைபெறும். தொடர்ந்து வருகிற 24-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்படும். வருகிற 27-ந் தேதி முதல் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தமிழக அரசு சார்பில் நடக்கும் அனைத்து விதமான ஆய்வுக்கூட்டங்களும் புறக்கணிக்கப்படும். 

    தொடர்ந்து செப்டம்பர் 12-ந் தேதி சென்னையில் அனைத்து மருத்துவர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டு கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும். அதன்பிறகும் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என்றால் செப்டம்பர் 21-ந் தேதி அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகளில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அப்போது முக்கியமான அறுவை சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை போன்றவைகளை மேற்கொள்ள நாங்களே ஒரு மருத்துவக்குழுவை ஏற்படுத்தி நோயாளிகள் பாதிக்காத வகையில் போராட்டம் முன்னெடுத்து செல்லப்படும். எங்களது போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அவசர சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்க முடியாது என மேல்முறையீடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    சென்னை:

    மாவட்ட மற்றும் தாலுகா அரசு ஆஸ்பத்திரிகளில் விபத்து, அவசர சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்க முடியாது என மேல்முறையீடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    மருத்துவ மேற்படிப்பில் சேரும்போது, தொலைதூரம், எளிதில் அணுக முடியாத பகுதி, குக்கிராமங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்நிலையில், எது தொலைதூரப் பகுதி, எளிதில் அணுக முடியாத பகுதி என வரையறை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    தமிழக அரசு, நகரங்களுக்கு அருகேயுள்ள பகுதிகளை தொலைதூரப்பகுதி, எளிதில் அணுக முடியாத பகுதி என வரையறை செய்துள்ளதால் நகர்ப்புறங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என்றும், உண்மையில் தொலை தூரப்பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அரசு டாக்டர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.

    பின்னர், தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ஏற்க முடியாது என்றும், அந்த அரசாணையை ரத்து செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சி.மணிசங்கர், மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், பி.வில்சன், ரிச்சர்டு வில்சன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    தொலைதூர பகுதிகள், எளிதில் அணுகமுடியாத பகுதிகள் ஆகியவற்றில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கும், மருத்துவ மேற்படிப்புக்கான சலுகை மதிப்பெண்கள் வழங்குகிற வரையறை விதிகள் செல்லும்.

    அதேசமயம் அரசாணைப்படி மாவட்ட, தாலுகா அரசு ஆஸ்பத்திரிகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, தாய்சேய் நலம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு, என்.ஐ.சி.யு., எஸ்.என்.சி.யு. போன்ற குழந்தைகள் நலப்பிரிவுகளில் பணியாற்றும் அரசு டாக்டர்கள் இத்தகைய சலுகை மதிப்பெண்களை பெற முடியாது.

    இந்த பகுதிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு சலுகை வழங்குவது என்பது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது. எனவே, இந்த வகைப்பாட்டினை மட்டும் ரத்து செய்கிறோம். மற்றபடி அந்த அரசாணை செல்லும்.

    இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்கவும், சலுகை மதிப்பெண்கள் வழங்குவதற்கு ஏற்ற பகுதிகளை கண்டறியவும் ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து முடிவு செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். 
    ×