search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private hospitals"

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை
    • தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து அரசுக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சுகாதாரத்துறை, ரோட்டரி கிளப் பிரைடு அமைப்பு இணைந்து புற்றுநோயை கண்டறிய 3 நாள் முகாம் நடத்துகிறது.

    முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

    கேன்சருக்காக புரோட்டான் என உயர் ரக சிகிச்சை தரப்படுகிறது. இதன் மூலம் ஆரம்பத்தி–லேயே சிகிச்சையை மேற்கொண்டு புற்றுநோயை சரி செய்யலாம். புதுவையில் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். கேரளா–வில் பரவும் நிபா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது.

    மாகியில் தடுப்பு நடவடிக்கை எடுத்துள் ளோம். முககவசம் அணிய கோரிக்கை வைத்துள்ளோம். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டுள்ளோம். கொரோனா அளவுக்கு பரவக்கூடாது. பஸ்கள், விமானம், ரெயில் பயணிகளிடம் அறிகுறி இருக்கிறதா என்பதை கண்காணிக்கிறோம்.

    டெங்கு ஒழிப்புக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். 2 பேர் உயிரிழக்குப் பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை ஏற்க முடியாது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து அரசுக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை.

    உடலுக்குள் ரத்தகசிவு டெங்கு பாதிப்பால் ஏற்படும். நோய் அறிகுறி வந்தவுடன் மக்கள் முன் எச்சரிக்கையுடன் மருத்துவ மனைக்கு வரவேண்டும். முன்னர் நடந்த உயிரிழப்பு கள் கவலை தரக்கூடியது தான். இனிமேல் யாருக்கும் பாதிக்கப்படக்கூடாது. டெங்கு பொருத்தவரை காலதாமதம் செய்வது காலனை வரவழைக்கும்.

    தமிழகத்தில் ஆயிரம் குடமுழுக்கு செய்ததாக சொல்லியுள்ளார்கள். அதில் எத்தனை குட முழுக்கில் முதல்-அமைச்சர் சென்று கலந்து கொண்டார்? என கேட்கிறேன். இப்படி கேட்டால், தமிழகத்தை பற்றி பேச தமிழிசைக்கு தார்மீக உரிமை இல்லை என்கிறார்கள். தமிழகத்தின் சார்பாக இரு மாநில கவர்னராக இருக்கும் எனக்கு உரிமை இல்லா விட்டால், வேறு யாருக்கு உரிமை உள்ளது. உரிமை என்பதில் என்ன அளவுகோல் வைத்துள்ள னர்?

    புதுவை சுகா தாரத்துறை உயர் பொறுப் பில் உள்ள டாக்டர்கள் தனியார் மருத்துவமனை யிலும், தனியாகவும் சிகிச்சை அளிக்கின்றனர். அரசு மருத்துவ மனைக்கு அவர்கள் முழுமையாக பணியாற்ற வேண்டும். தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு தாமதமாக வருவது, ஆபரேஷனை தனக்கு தெரிந்த இடத்தில் மாற்று வது உள்ளிட்டவற்றில் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியு ள்ளோம். தனியார் மருத்துவ மனை யில் கவனம் செலுத்த விரும்பினால் அங்கு சென்று சிகிச்சை தரட்டும். மக்கள் பாதிக்கப்பட்டால், அரசு டாக்டர்கள் தனியார் மருத்து வமனையிலோ, தனியாகவோ சிகிச்சை செய்வதை தடை செய்ய தயங்க மாட்டோம். இதை தொலை நோக்கு திட்டமாக வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் மேயர் சரவணன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

     நெல்லை:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    விழிப்புணர்வு கூட்டம்

    இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் மேயர் சரவணன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, நகர்நல அலுவலர் சரோஜா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    248 மருத்துவ முகாம்கள்

    அவர்களுக்கு தற்போது பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப் பட்டது. கூட்டத்துக்கு பின் மேயர் சரவணன் கூறியதாவது:-

    தற்போது பருவ காய்ச்சலை கட்டுப்படுத்த நெல்லை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை மாநகர் பகுதியில் மட்டும் இந்த மாதம் 248 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு தற்போது மக்கள் பயன்படும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவ -மாணவிகள் பயன்பெறும் வகையில் கடந்த 16-ந் தேதி வரை 121 முகாம்கள் நடத்தப்பட்டு 214 குழந்தைங்களுக்கு காய்ச்சல் உள்ளதை கண்டறிந்து அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு 25 ஆயிரத்து 256 பேர் பயன் பெற்றுள்ளனர். வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் கொசுப்புளு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணியில் 557 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதுபோல தற்போது சில தனியார் மருத்துவ மனைகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டெங்கு காய்ச்சல் குறித்து தவறான அறிக்கை தருவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எனவே அவர்கள் டெங்கு தொடர்பாக முறையான பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

    இது குறித்து 38 தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். மேலும் தவறான தகவல் தெரிவித்தால் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மற்ற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு
    • 2-வது அலை, 3-வது அலைகளில் சிக்கி மொத்தம் 1765 பேர் இறந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதும், குறைவதுமாக என மாறி மாறி நிலவி வருகிறது. சேலத்தில் நேற்று 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம் மாநகராட்சியில் 8 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில் சேலம், எடப்பாடி பகுதிகளில் 2 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் தருமபுரி, கடலூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் முதல் அலை, 2-வது அலை, 3-வது அலைகளில் சிக்கி மொத்தம் 1765 பேர் இறந்துள்ளனர்.

    தனியார் மருத்துவமனைகள் ஏழை-எளியவர்களுக்கும் உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami
    சென்னை:

    அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையத்தை துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு இன்று தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக சிறந்து விளங்கி வருகிறது.

    தாய்சேய் நலம் மற்றும் குடும்ப நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், நோய்களைத் தடுப்பதற்காகவும் பல முன்னோடித் திட்டங்களை அரசு திறம்பட செயல்படுத்தி வருகிறது.

    உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துதல், மருத்துவ மனித வளத்தை பெருக்குதல் போன்றவைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    இதன் காரணமாக இந்தியாவில் உயரிய மருத்துவ சேவை பெற வசதியுள்ள இடமாக தமிழ்நாடு கருதப்படுகிறது.

    வளர்ந்த நாடுகள் அடைந்துள்ள சுகாதார குறியீடுகளை, 2023-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற இலக்கு அம்மாவால் வெளியிடப்பட்ட “தொலைநோக்கு திட்டம் 2023”ல் சேர்க்கப்பட்டுள்ளது.

    தாய்மார்கள் இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் போன்ற சுகாதார குறியீடுகளில் ஐக்கிய நாடுகளின் மில்லினியம் வளர்ச்சி இலக்குகளை ஏற்கனவே அடைந்த நிலையில், மற்ற மாநிலங்களுக்கு முன்னதாகவே தேசிய இலக்குகளையும் தமிழ்நாடு அடைந்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் காப்பீட்டுத் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 27.73 லட்சம் பயனாளிகள் 5,426.74 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நமது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    சமீபத்தில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு கைகளையும் இழந்த ஒருவருக்கு, கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது ஒரு சாதனையாகும்.



    புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு அரசு, அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்தி வருகிறது. புற்றுநோய் உட்பட தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

    மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 60 கோடி ரூபாய் செலவில் 4 மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஏழை மக்களுக்கு தரமான, உயரிய சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படுகின்றது.

    இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலிருந்தும் நோயாளிகள் தமிழ்நாட்டிற்கு சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். இதனால், தமிழ்நாடு மருத்துவ சுற்றுலாவின் தலைமையிடமாக விளங்குவது மட்டுமன்றி, நமது நாட்டிற்கு அந்நிய செலாவணியையும் ஈட்டித்தருகிறது.

    ஏழை எளிய மக்களுக்கு உயரிய சிகிச்சைகள் தேவைப்பட்டு, அவர்கள் தனியார் மருத்துவமனைகளை அணுக வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதை இத்தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

    அப்பல்லோ மருத்துவமனையின் பணி தொடர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அப்பல்லோ மருத்துவமனை குழு தலைவர் பிரதாப் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். #EdappadiPalaniswami

    ×