search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demonstrated"

    • கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இலாபகரமான விலை வழங்க வலியுறுத்தினர்

    திருச்சி:

    தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பருத்தி மற்றும் மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் தமிழ்நாடு அரசு மக்காச்சோளம் கிலோ ஒன்றுக்கு ரூ.21.50 காசுக்கும், பருத்திக்கு 75 ரூபாயும் வழங்குகிறது. படைப்புழு தாக்குதல் உள்ளிட்டவற்றால் ஏற்கனவே பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்.

    இந்த நிலையில் விலையும் குறைவாக வழங்கும் போது கூடுதல் பாதிப்பை தான் விவசாயிகள் சந்திக்கின்றனர். எனவே பருத்திக்கு ரூ.100ம், மக்காச்சோளத்திற்கு ரூ30 ம் உயர்த்தி வழங்க வேண்டும். விலையை உயர்த்தி வழங்கினால் மட்டுமே விவசாயிகள் லாபகரமாப தொகை பெற முடியும் என தெரிவித்து மக்காச்சோளம் மற்றும் பருத்தியை திருச்சி மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சென்னையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.


    • நாங்குநேரியில் மாவட்ட மருத்துவமனை அமைக்க கோரி பல்வேறு தரப்பினர், பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நாங்குநேரியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    களக்காடு:

    நாங்குநேரியில் மாவட்ட மருத்துவமனை அமைக்க கோரி, அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுநல அமைப்பினர் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் போரட்டக் குழு அமைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக களக்காட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கிருஷ்ணன் (இந்திய கம்யூனிஸ்டு), ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.), ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ஜெயராமன், வேல்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் செல்வராஜ், பா.ஜ. ஒன்றிய தலைவர் ராமேஸ்வரன், நகர தலைவர் கணபதி, சேர்மன்துரை, ம.தி.மு.க.வை சேர்ந்த பேச்சிமுத்து, துரைஅழகன், அ.ம.மு.க.ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாரியப்பன், காங்கிரஸ் முத்துகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் பூலுடையார், புரட்சி பாரதம் நெல்சன், நாம் தமிழர் செல்வின் மற்றும் ச.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் நாங்குநேரியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    3-வது நாளாக நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இதில் கடலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    15 சதவீதம் ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதியமாற்றத்தை அமல்படுத்த வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும், அரசு விதிகளின்படி மட்டுமே நிறுவனத்திடம் இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கடந்த 18-ந் தேதி மு தல் தொடர் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன்படி கடலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊழியர் அன்பழகன் தொடக்க உரையாற்றினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சேகர், ஒப்பந்த ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ஆனந்தன், தனியார் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி குருராமலிங்கம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள்.

    போராட்டம் நடத்திவரும் எங்களை நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் எங்களது போராட்டம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமாக நடைபெற வாய்ப்பு உள்ளது. அப்படி போராட்டம் நடந்தால் பி.எஸ்.என்.எல். சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும் என பி.எஸ்.என்.எல். ஊழியர் ஒருவர் தெரிவித்தார். 
    ஜாக்டோ-ஜியோஅமைப்பினரின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பெரும்பாலான அரசு பணிகள் முடங்கின. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
    ராமநாதபுரம்:

    தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதும் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    அதன்படி மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா தலைநகரங்களிலும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவபாலன், முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    பரமக்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சாமிஅய்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். ராமேசுவரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் புதுராஜா முன்னிலை வகித்தார்.

    கீழக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக தமிழாசிரியர் கழக அமைப்பாளர் குமாரவேல் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ராமு முன்னிலை வகித்தார். திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய தாலுகாக்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டதால் மாவட்டத்திலுள்ள ஆயிரத்து 244 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் செயல்படாமல், பள்ளிகள் பூட்டிக் கிடந்தன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

    இதேபோல் மாவட்டத்திலுள்ள 64 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அந்த பள்ளிகளிலும் கல்வி பணி பாதிக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தலைவர் துரைராஜ், செயலாளர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் முழுமையாக போராட்டத்தில் கலந்து கொண்டதால் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம் உள்ளிட்டவைகள் பூட்டப்பட்டிருந்தன. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் இந்த அலுவலகங்களை நாடி வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    மாவட்டத்தில் 9 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டதால் ஒட்டுமொத்தமாக அரசு பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. அரசு தரப்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 36 துறைகளில் பணியாற்றிவரும் 15 ஆயிரத்து 748 பேரில், 11 ஆயிரத்து 182 பேர் பணியில் ஈடுபட்டதாகவும், 281 பேர் விடுமுறையில் உள்ளதாகவும், 4 ஆயிரத்து 285 பேர் மட்டும் எவ்வித விடுமுறை அறிவிப்புமின்றி வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மக்களின் அரசு சார்ந்த பணிகள், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.

    கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் முருகேஸ்வரி தலைமை தாங்கினார். துணை தாசில்தார் செந்தில்வேல்முருகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் முனியசாமி, செயலாளர் ஆனந்தராஜ், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இணை செயலாளர் குருசாமி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட துணை செயலாளர் தாமஸ் இமானுவேல் ஜேம்ஸ், தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் பாலமுருகன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கண்ணகி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வட்டார தலைவர் முத்துவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    மானாமதுரை யூனியன் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மானாமதுரை பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜீவா முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோஅமைப் பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    அங்கன்வாடி பணிக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை மூடக்கூடாது.

    புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது. மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

    மாவட்டம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், நாகேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ-ஜியோவின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக் குமார், முத்துசாமி, ரவிச்சந்திரன், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோவன், ஜோசப் சேவியர், மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அன்பரசு, பிரபாகர், ராஜா, செல்வக்குமார், தமிழரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    திருச்சியில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருச்சி:

    திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு  தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில தலைவர் தில்லை மெடிக்கல் மனோகரன் தலைமை தாங்கினார்.

    திருச்சி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் கிருபானந்த மூர்த்தி, செயலாளர் சொக்கலிங்கம், பொருளாளர்   சின்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மருத்துவர் பரிந்து ரையின் மட்டுமே தற்போது மருந்துகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் முறை நடைமுறைபடுத்தப்பட்டால் தவறான மருந்துகள் எளிதில் வாங்க  முடியும். இதனால் இளைய தலைமுறையினர் வாழ்க்கை சீரழியும் நிலை உருவாகும்.

    ஆன்லைன் மருந்து விற்பனை பாதிக்கும் உருவாகும் பட்சத்தில் சிறிய கிராமங்கள் மற்றும் சிறிய அளவிலான நகரங்களில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகி விடும். போலி மருந்துகள் நடமாட்டம் மற்றும் தரம் குறைந்த மருந்துகள் நடமாட்டமும் இதனால் அதிகரிக்கும். ஊக்க மருந்துகள், கருத்தடை மாத்திரை மற்றும் அறுவை சிகிச்சையின்  போது பயன்படுத்தப்படும் வலிநிவாரணி மருந்துகளை இளைஞர்கள் தவறான முறையில் பயன்படுத்துவதோடு, கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும்.

    இந்த தொழிலை நம்பி 8 லட்சம் உறுப்பினர்கள் நேரடியாகவும்,  40 லட்சம் பேர் மறைமுகமாகவும் மற்றும் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். மேலும் மருந்து ஆளிநர்களுக்கான பட்டயப்படிப்புகளை படித்து கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    திருச்சி மாவட்ட மொத்த மருந்து வியாபாரிகள் சங்க தலைவர் கூறுகையில், ஆன்லைன் மூலம் பிற பொருட்களை   வாங்குவதில் எந்த பிரச்சினைகளும் இல்லை. மருந்துகளை ஆன்லைனில் வினியோகம் செய்வதால் எவ்விதமான மருந்துகளை யார் வேண்டுமானாலும் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். தவறான மருந்துகளை வாங்கி இளைய சமுதாயம் சீரழியும் சூழ்நிலை உருவாகும். இதை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறினார்.
    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்க புரவலர் பெரியசாமி, ஸ்ரீரங்கம் மண்டல தலைவர் சரவணன் உள்ளிட்ட 200&க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் திருச்சி மாவட்ட  கலெக்டர் ராசா மணியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. #tamilnews
    ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்தம் முன்னிட்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து பெல் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்தம் முன்னிட்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து பெல் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் புதிய பணி நியமனம் செய்திட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்திட வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்கிட வேண்டும், வேலையின்மையை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், குறைந்தபட்ச மாத பென்சன் ரூ.3000 வழங்க வேண்டும், பொதுதுறைகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, தொழிலாளர் நலசட்டங்களை திருத்தாதே உள்ளிட்ட 12அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தனர்.

    இதில் தொழிற்சங்கத்தினர் பாண்டியன், சிவகுமார், கணேஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #tamilnews
    மாநில அந்தஸ்து கோரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நாளை டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. #narayanasamy #kiranbedi

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு நீண்ட பல ஆண்டுகளாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

    நாட்டிலேயே டெல்லியும், புதுவையும் மட்டுமே சட்ட மன்றம் உள்ள யூனியன் பிரதேசமாக திகழ்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அங்கமாகவே புதுவை யூனியன் பிரதேசம் கருதப்படுகிறது.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதுவை சட்ட சபைக்கு மத்திய அரசு நேரடியாக 3 எம்.எல்.ஏ.க் களை நியமித்தது. மத்திய அரசின் நேரடி நியமனம் செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. அதோடு நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் உண்டு என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இது தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்ந்து நீடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். சட்ட மன்ற ஜனநாயகத்தை கேள்வி குறியாக்கியுள்ளது. அதே நேரத்தில் புதுவை கவர்னராக இருக்கும் கிரண்பேடியும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தனக்கே அதிகாரம் உள்ளது என கூறி மாநில நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார்.


    நியமன எம்.எல்.ஏ. விவகாரம், கவர்னர் கிரண்பேடி நடவடிக்கை ஆகியவற்றால் புதுவை மாநில உரிமைக்கு பங்கம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. மாநில உரிமைகளை பெற மாநில அந்தஸ்தே தீர்வு என ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையில் நடந்த அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    புதுவை மாநில அந்தஸ்து வழங்க வேண்டு. கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக டெல்லியில் ஜந்தர் மந்தர் முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு புதுவை அரசியல் கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புதுவையில் இருந்து டெல்லி செல்லும் வாராந்திர டெல்லி ரெயிலில் 21 அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த 420 தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர். இவர்கள் நாளை அதிகாலை 3 மணியளவில் டெல்லியை அடைகின்றனர்.

    இதற்கிடையே இன்று (வியாழக்கிழமை) முதல்- அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர். டெல்லியில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய மந்திரிகள் மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களை சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கின்றனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு டெல்லி சென்றுள்ள அரசியல் கட்சி தொண்டர்கள் தங்குவதற்கு விடுதி, உணவு, போக்குவரத்திற்கு பஸ் வசதி ஆகியவற்றை புதுவையை ஆளும் காங்கிரஸ் கட்சி செய்துள்ளது.

    ஆளும் கட்சிக்கு பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் மாநில அந்தஸ்து விவகாரத்தை பெரிதுபடுத்துவதாக புதுவை சட்டமன்றத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் குற்றம் சாட்டியது. அதோடு டெல்லி போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் எனவும் அறிவித்தன. இதன்படி என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் டெல்லி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. #narayanasamy #kiranbedi

    20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அலுவலகங்களில் கணினி, இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான பணிமாறுதல், கிராம நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று உட்பிரிவுகளில் பட்டா வழங்குதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அதிகாரிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    அதன் தொடர்ச்சியாக கடந்த 10-ந் தேதி முதல் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியை புறக்கணித்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. 

    இந்நிலையில் நேற்றும் பணியை புறக்கணித்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காலையில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். அப்போது கிராம நிர்வாக அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். சுமார் 1 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர். 
    மன்னார்குடியில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சுந்தரக்கோட்டை:

    பணியிடங்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அலுவலகங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இணையதளம் மூலம் சான்றிதழ்களை வழங்க வசதியாக கணினி வழங்க வேண்டும். இணையதள பணிகளுக்கு ஆகும் செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பணிபுரியும் கிராமத்தில் தங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சற்குணம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ராஜ்குமார், கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் 164 பேர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    திருவாரூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். திட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன், திட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைச்செயலாளர்கள் வைத்தியநாதன், பழனிவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    தொழிற்சங்க உரிமைகளை நிலை நாட்ட வேண்டும். தொழிலாளர்கள் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். இந்திய பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

    போராடும் தொழிற்சங்கத்தோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பல்வேறு தனியார் வாகன நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் திட்ட துணைத்தலைவர்கள் ராமசாமி, கண்ணன், கோட்ட செயலாளர் தமிழரசன், கோட்ட தலைவர் முரளிதரன், மன்னார்குடி கோட்ட செயலாளர் வீரபாண்டியன், திட்ட துணை செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
    திருவாரூரில் தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்தக்கோரி இந்திய தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    திருவாரூர்:

    திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. இந்திய தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொழிலாளர் நல சட்டங் களை அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்கங்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். இந்திய, பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். போராட்டம் நடத்தும் தொழிற்சங்கத்தோடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ×