search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity worker"

    • தாண்டவன் மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்
    • தாண்டவன், பேனில் கயிறால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம், குதிரை க்கல்மேடு, கோனேரி ப்பட்டி பிரிவு, சாயபு தோட்டம் பகுதி யைச் சேர்ந்தவர் தாண்டவன் (47). குதிரைக்கல் மேடு கதவணை மின் நிலையத்தில், மின்சா ர்த்துறையில் ஒயர்மே னாக பணியாற்றி வந்தார்.

    இவரது மனைவி சர ஸ்வதி (38). இவர், அப்பகு தியில் உள்ள தோட்டங்களில் விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வருவாராம். இவர்க ளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்லூரி யில் படித்து வருகின்றனர். தாண்டவன் மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல சரஸ்வதி தோட்ட வேலை க்கு சென்று விட்டாராம். சுமார் 10.30 மணியளவில் தாண்டவ னின் தாய் பழனியம்மாள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, வெளியில் சென்று விட்டு வந்த தாண்டவன் வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாராம்.

    உடனடியாக பழனி யம்மாள் தனது மருமகள் சரஸ்வதி வேலை செய்யும் இடத்துக்குச் சென்று அதுகுறித்து கூறியுள்ளார்.

    இருவரும் வீட்டுக்கு வந்து ஜன்னல் வழியாக பார்த்த போது தாண்டவன், பேனில் கயிறால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று தாண்டவனை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே தாண்டவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, அம்மா பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தலைமறைவாக இருந்த மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
    • பின்னர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி ஆனந்தம் பாளையத்தை சேர்ந்தவர் கோபால் (58). இவர் அதே பகுதியில் பால் சொசைட்டி செயலாளராக உள்ளார். இவரது மகன் மோகன சுந்தரம் எலக்ட்ரீசியன் படித்து முடித்துள்ளார்.

    இந்நிலையில் கோபாலு க்கு பவானி சிங்கம் பேட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி (45) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் பூனாச்சி துணை மின் நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் மூர்த்தி தனக்கு மின் வாரியத்தில் தலைமை அதிகாரிகள் பழக்கம் உள்ளது என கோபாலிடம் கூறியுள்ளார். பணம் கொடுத்தால் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய கோபால் தனது மகன் மோகனசுந்தரத்துக்கு தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காக கோபாலிடம் முதற்கட்டமாக ரூ.7 லட்சம் வழங்கியுள்ளார்.

    பின்னர் மேலும் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். வேலை உறுதியாகி விட்டதாக கூறி மேலும் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு தபாலில் பணி நியமன ஆணையை அனுப்பியுள்ளார்.

    இந்த பணி நியமன ஆணையுடன் மோகன சுந்தரம் மின்வாரிய அலுவல கத்தில் பணியில் சேர சென்றபோது அவை போலி என தெரிய வந்தது.

    அதிர்ச்சியடைந்த தந்தையும், மகனும் மூர்த்தியை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதிலளி க்காமல் தலைமறை வாகி விட்டார்.

    இதேப்போல் அந்தியூர் பிரம்மதேசத்தை சேர்ந்த விஜயகுமார், வெற்றிவேல் ஆகியோரிடமும் மின்வாரி யத்தில் வேலை வாங்கி தருவதாக தலா ரூ.4 லட்சம் மூர்த்தி பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.

    இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

    இதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தியூர், பவானி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 24 பேரிடம் ரூ.1 கோடியே 25 லட்சம் பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி மூர்த்தி ஏமாற்றியது தெரியவந்தது.

    2 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த மூர்த்தி யை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    இந்த மோசடியில் மூர்த்திக்கு மூளையாக மற்றொருவர் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அவர் தற்போது தலை மறைவாக உள்ளார்.

    அவரை பிடி க்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் பிடிப்ப ட்டால் இந்த மோசடியில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரியவரும்.

    திருவாரூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். திட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன், திட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைச்செயலாளர்கள் வைத்தியநாதன், பழனிவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    தொழிற்சங்க உரிமைகளை நிலை நாட்ட வேண்டும். தொழிலாளர்கள் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். இந்திய பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

    போராடும் தொழிற்சங்கத்தோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பல்வேறு தனியார் வாகன நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் திட்ட துணைத்தலைவர்கள் ராமசாமி, கண்ணன், கோட்ட செயலாளர் தமிழரசன், கோட்ட தலைவர் முரளிதரன், மன்னார்குடி கோட்ட செயலாளர் வீரபாண்டியன், திட்ட துணை செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
    ×