search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "by hanging himself"

    • தாண்டவன் மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்
    • தாண்டவன், பேனில் கயிறால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம், குதிரை க்கல்மேடு, கோனேரி ப்பட்டி பிரிவு, சாயபு தோட்டம் பகுதி யைச் சேர்ந்தவர் தாண்டவன் (47). குதிரைக்கல் மேடு கதவணை மின் நிலையத்தில், மின்சா ர்த்துறையில் ஒயர்மே னாக பணியாற்றி வந்தார்.

    இவரது மனைவி சர ஸ்வதி (38). இவர், அப்பகு தியில் உள்ள தோட்டங்களில் விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வருவாராம். இவர்க ளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்லூரி யில் படித்து வருகின்றனர். தாண்டவன் மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல சரஸ்வதி தோட்ட வேலை க்கு சென்று விட்டாராம். சுமார் 10.30 மணியளவில் தாண்டவ னின் தாய் பழனியம்மாள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, வெளியில் சென்று விட்டு வந்த தாண்டவன் வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாராம்.

    உடனடியாக பழனி யம்மாள் தனது மருமகள் சரஸ்வதி வேலை செய்யும் இடத்துக்குச் சென்று அதுகுறித்து கூறியுள்ளார்.

    இருவரும் வீட்டுக்கு வந்து ஜன்னல் வழியாக பார்த்த போது தாண்டவன், பேனில் கயிறால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று தாண்டவனை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே தாண்டவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, அம்மா பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில் மூட்டு அறுவை சிகிச்சையால் மணி அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • மணிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவரது 2 முழங்கால்க ளிலும், மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (63). இவரது மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மணிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவரது 2 முழங்கால்க ளிலும், மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில் மூட்டு அறுவை சிகிச்சையால் மணி அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு மணி தனது வீட்டினுள் உள்ள பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பெருந்துறையில் வசித்து வரும் அவரது மகள் நந்தினிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பாலச்சந்தர் (34). இவர் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மருதவல்லி. இவர்களுக்கு ஜெகதீஸ்வரன் என்ற ஆண் குழந்தையும், சன்மதி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

    பாலச்சந்தர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து உள்ளார். அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் பாலசந்தரின் மனைவி மருதவல்லி மற்றும் தந்தை பழனி ஆகியோர் கண்டித்து உள்ளனர். ஆனாலும் பாலச்சந்தர் தொடர்ந்து மது குடித்து விட்டு வந்து குடும்பத்தின–ருடன் தகராறு செய்து வந்து உள்ளார்.

    இதனால் மருதவல்லி கோபித்துக் கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோபி அருகே உள்ள கோட்டு புள்ளம் பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதன் காரணமாக மன உளைச்ச–லில் காணப்பட்ட பாலச்சந்தர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்க சென்று உள்ளார்.

    மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை வீட்டின் கதவை திறந்து பார்த்து உள்ளார். அப்போது பாலச்சந்தர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து உள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×