search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old man committed suicide"

    • சின்னான் பூச்சி மருந்து குடித்து விட்டார்.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னான் (78). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வேதனையில் இருந்து வந்த சின்னான் பூச்சி மருந்து (விஷம்) குடித்து விட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில் மூட்டு அறுவை சிகிச்சையால் மணி அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • மணிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவரது 2 முழங்கால்க ளிலும், மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (63). இவரது மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மணிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவரது 2 முழங்கால்க ளிலும், மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில் மூட்டு அறுவை சிகிச்சையால் மணி அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு மணி தனது வீட்டினுள் உள்ள பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பெருந்துறையில் வசித்து வரும் அவரது மகள் நந்தினிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்தார்.
    • ஏற்கனவே 2 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி சோலைராஜா காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 75). இவரது மனைவி இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்தார்.

    இதனால் ஏற்கனவே 2 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் செட்டிநாயக்கன்பட்டி கணேஷ் நகரில் உள்ள மகன் அய்யப்பன் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அவர் தந்தைக்கு ஆறுதல் கூறியுள்ளார். ஆனால் வழியிலேயே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • முள்ளம்பட்டி பாலம் அருகே வடபுற வாய்க்காலில் பெருமாளின் உடல் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெருமாளுக்கு உடல்நலம் பாதிப்பு பிரச்சனை இருந்ததால் அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த பெரிய புலியூர், செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (80). இவர் தனது மகன் கிரண்குமார் என்பவருடன் வசித்து வருகிறார். பெருமாள் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கோழிகளை கவனித்துக் கொள்ள வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சாலையில் பெருமாளை விட்டு விட்டு கிரண்குமார் சென்று விட்டார். பின்னர் மீண்டும் மாலை தந்தை அழைத்து செல்ல அங்கு வந்தபோது தந்தையை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் ஏதும் கிடைக்க வில்லை. இந்நிலையில் காஞ்சிகோவில் அடுத்துள்ள முள்ளம்பட்டி பாலம் அருகே வடபுற வாய்க்காலில் பெருமாளின் உடல் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து காஞ்சிகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெருமாளுக்கு உடல்நலம் பாதிப்பு பிரச்சனை இருந்ததால் அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • கண் வலியால் அவதிப்பட்டு வந்தார்


    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஒகளூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ராசு (வயது 73). தனது மனைவியுடன் வசித்து வந்த இவர் கடந்த சில நாட்களாகவே கண் வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ராசு களைக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்ததில் வாந்தி எடுத்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • பெருந்துறை வாய்க்கால் மேடு, கீழ்பவானி வாய்க்காலில் சுப்பிரமணியத்தின் உடல் மிதப்பதாக பெருந்துறை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • விசாரணையில் சுப்பிரமணியத்தக்கு குடி பழக்கம் இருப்பதாகவும், அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள கொளத்தான்வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணியம் (70). இவர் வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    அப்போது பெருந்துறை வாய்க்கால் மேடு, கீழ்பவானி வாய்க்காலில் சுப்பிர மணியத்தின் உடல் மிதப்பதாக பெருந்துறை தீயணை ப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுப்பிரமணியத்தக்கு குடி பழக்கம் இருப்பதாகவும், அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×