search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை
    X

    வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை

    • முள்ளம்பட்டி பாலம் அருகே வடபுற வாய்க்காலில் பெருமாளின் உடல் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெருமாளுக்கு உடல்நலம் பாதிப்பு பிரச்சனை இருந்ததால் அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த பெரிய புலியூர், செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (80). இவர் தனது மகன் கிரண்குமார் என்பவருடன் வசித்து வருகிறார். பெருமாள் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கோழிகளை கவனித்துக் கொள்ள வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சாலையில் பெருமாளை விட்டு விட்டு கிரண்குமார் சென்று விட்டார். பின்னர் மீண்டும் மாலை தந்தை அழைத்து செல்ல அங்கு வந்தபோது தந்தையை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் ஏதும் கிடைக்க வில்லை. இந்நிலையில் காஞ்சிகோவில் அடுத்துள்ள முள்ளம்பட்டி பாலம் அருகே வடபுற வாய்க்காலில் பெருமாளின் உடல் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து காஞ்சிகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெருமாளுக்கு உடல்நலம் பாதிப்பு பிரச்சனை இருந்ததால் அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×