என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jailed for"
- மாரிமுத்து ஒரு குடோன் அருகே பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
- விசாரணையில் மாரிமுத்துவை கொலை செய்ததை மோகன் ஒப்புக்கொண்டார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சாணார்பதி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (37). தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாரிமுத்து மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர் சத்தி-கோவை ேராட்டில் உள்ள ஒரு குடோன் அருகே பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
இதுபற்றி தெரிய வந்த தும் சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
பின்னர் மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கடைசியாக சத்தியமங்கலம் கொமாரபாளையத்தை சேர்ந்த மோகன் (38) என்பவரிடம் பேசியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மோகனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.
மேலும் கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவும் இவரும் நண்பர்கள் என்றும் தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாரிமுத்துவை கொலை செய்ததை மோகன் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் மோகனை கைது செய்தனர்.
மேலும் மாரிமுத்துவை கொலை செய்தது ஏன்? என்று வாக்குமூலமும் அளித்தார். வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
நானும் மாரிமுத்தும் நண்பர்கள். அவரது மனைவி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இதனால் நாங்கள் நட்பு ரீதியாக பழகி வந்ேதாம்.
ஆனால் மாரிமுத்து என் மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தவறாக பேசி வந்தார்.
சம்பவத்தன்று என்னை போனில் அழைத்தார். நான் சத்தி-கோவை ரோட்டில் உள்ள ஒரு குடோன் அருகே சென்றேன். அப்போது மாரிமுத்து என்னிடம் பணம் கேட்டார்.
மேலும் அவரது மனைவியுடன் பழகுவதை சந்தேகப்பட்டு பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது காரில் வைத்திருந்த இரும்பை வைத்து மாரிமுத்துவை தாக்கினேன்.
இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து இறந்தார். இதையடுத்து நான் அங்கிருந்து தப்பி சென்றேன்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இதையடுத்து போலீசார் மோகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் சிறையில் அடைத்தனர்.
- தலைமறைவாக இருந்த மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
- பின்னர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி ஆனந்தம் பாளையத்தை சேர்ந்தவர் கோபால் (58). இவர் அதே பகுதியில் பால் சொசைட்டி செயலாளராக உள்ளார். இவரது மகன் மோகன சுந்தரம் எலக்ட்ரீசியன் படித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் கோபாலு க்கு பவானி சிங்கம் பேட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி (45) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் பூனாச்சி துணை மின் நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் மூர்த்தி தனக்கு மின் வாரியத்தில் தலைமை அதிகாரிகள் பழக்கம் உள்ளது என கோபாலிடம் கூறியுள்ளார். பணம் கொடுத்தால் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய கோபால் தனது மகன் மோகனசுந்தரத்துக்கு தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காக கோபாலிடம் முதற்கட்டமாக ரூ.7 லட்சம் வழங்கியுள்ளார்.
பின்னர் மேலும் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். வேலை உறுதியாகி விட்டதாக கூறி மேலும் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு தபாலில் பணி நியமன ஆணையை அனுப்பியுள்ளார்.
இந்த பணி நியமன ஆணையுடன் மோகன சுந்தரம் மின்வாரிய அலுவல கத்தில் பணியில் சேர சென்றபோது அவை போலி என தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த தந்தையும், மகனும் மூர்த்தியை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதிலளி க்காமல் தலைமறை வாகி விட்டார்.
இதேப்போல் அந்தியூர் பிரம்மதேசத்தை சேர்ந்த விஜயகுமார், வெற்றிவேல் ஆகியோரிடமும் மின்வாரி யத்தில் வேலை வாங்கி தருவதாக தலா ரூ.4 லட்சம் மூர்த்தி பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.
இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தியூர், பவானி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 24 பேரிடம் ரூ.1 கோடியே 25 லட்சம் பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி மூர்த்தி ஏமாற்றியது தெரியவந்தது.
2 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த மூர்த்தி யை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்ப ட்டார்.
இந்த மோசடியில் மூர்த்திக்கு மூளையாக மற்றொருவர் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அவர் தற்போது தலை மறைவாக உள்ளார்.
அவரை பிடி க்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் பிடிப்ப ட்டால் இந்த மோசடியில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரியவரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்