search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 ambulance driver"

    • ரோட்டில் தங்க செயின் கீழே கிடந்தது.
    • அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ராமச்சந்திரன் போலீசிடம் அந்த நகையை கொடுத்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அலுவலகம் அருகே டீக் கடைகள் மற்றும் ஜெராக்ஸ் கடைகள், பஸ் நிலையம், பத்ரகாளி அம்மன் கோவில், உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதியாக இருந்து வருகின்றது.

    இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி (45) வங்கியில் வைத்திருந்த நகையை மீட்டு கீழ்பாக்கெட்டில் வைத்து கொண்டு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தன் பாக்கெட்டில் வைத்திருந்த 1 பவுன் தங்க செயினை தவற விட்டு விட்டார். நகை இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அவர் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசாரிடம் கூறினார்.

    இந்த நிலையில் பர்கூர் 108 ஆம்புலன்சு டிரைவரான அந்தியூர் அருகே உள்ள பிரம்ம தேசத்தைச் சேர்ந்த மகேந்திரன் (30) டீக்குடிக்க தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள ஒரு கடைக்கு சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் ரோட்டில் தங்க செயின் கீழே கிடந்தது. இதை தொடர்ந்து அவர் அந்த நகையை எடுத்து பார்த்தார். இது தங்கச்செயின் என்பதை உறுதி செய்தார்.

    உடனடியாக அவர் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ராமச்சந்திரன் என்ற போலீசிடம் அந்த நகையை கொடுத்தார்.

    இதையடு த்து போலீசார் ஒலகடத்தை சேர்ந்த ஈஸ்வர மூர்த்தியிடம் செல்போனில் பேசி உடனடியாக வரவழை த்தார். இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் தங்க செயினை ஒப்படை த்தனர்.

    மேலும் நகையை பெற்று கொண்ட ஈஸ்வரமூர்த்தி 108 டிரைவர் மகேந்திரன், போலீசார் மற்றும் அலுவலர்க ளுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.

    தவறவிட்ட நகை ஒரே நாளில் கிடைத்ததை யடுத்து அவர் மகிழ்ச்சியுடன் சென்றார்.

    மேலும் ரோட்டில் கிடந்த நகையை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மகேந்திரனுக்கு பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நண்பர்கள் தன்னார்வலர்கள் வாழ்த்து கூறி பாராட்டு தெரிவித்தனர்.

    • மாரிமுத்து ஒரு குடோன் அருகே பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
    • விசாரணையில் மாரிமுத்துவை கொலை செய்ததை மோகன் ஒப்புக்கொண்டார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சாணார்பதி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (37). தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாரிமுத்து மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர் சத்தி-கோவை ேராட்டில் உள்ள ஒரு குடோன் அருகே பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

    இதுபற்றி தெரிய வந்த தும் சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    பின்னர் மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீசார் கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கடைசியாக சத்தியமங்கலம் கொமாரபாளையத்தை சேர்ந்த மோகன் (38) என்பவரிடம் பேசியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மோகனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.

    மேலும் கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவும் இவரும் நண்பர்கள் என்றும் தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாரிமுத்துவை கொலை செய்ததை மோகன் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் மோகனை கைது செய்தனர்.

    மேலும் மாரிமுத்துவை கொலை செய்தது ஏன்? என்று வாக்குமூலமும் அளித்தார். வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    நானும் மாரிமுத்தும் நண்பர்கள். அவரது மனைவி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இதனால் நாங்கள் நட்பு ரீதியாக பழகி வந்ேதாம்.

    ஆனால் மாரிமுத்து என் மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தவறாக பேசி வந்தார்.

    சம்பவத்தன்று என்னை போனில் அழைத்தார். நான் சத்தி-கோவை ரோட்டில் உள்ள ஒரு குடோன் அருகே சென்றேன். அப்போது மாரிமுத்து என்னிடம் பணம் கேட்டார்.

    மேலும் அவரது மனைவியுடன் பழகுவதை சந்தேகப்பட்டு பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது காரில் வைத்திருந்த இரும்பை வைத்து மாரிமுத்துவை தாக்கினேன்.

    இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து இறந்தார். இதையடுத்து நான் அங்கிருந்து தப்பி சென்றேன்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இதையடுத்து போலீசார் மோகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் சிறையில் அடைத்தனர்.

    • சென்னியப்பன் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
    • இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (39). இவர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சு டிரைவராக கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் சென்னியப்பன் பள்ளிபாளையம் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கியதாகவும், இதனால் அவருக்கு கடன் ஏற்பட்ட தாகவும் கூறப்படுகிறது.

    இதையொட்டி அவர் கடந்த சில நாட்களாக கடனை கட்ட முடியாமல் மன வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. இதனைய டுத்து சென்னியப்பன் அந்த வீட்டை விற்பனை செய்து கடனை அடைக்கலாம் என்று தனது மனைவியிடம் கூறி வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து (விஷம்) மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சென்னியப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.

    இதில் தேர்வு செய்யப்படுவோர் தமிழகத்தின் எந்த பகுதியிலும் பணி நியமனம் செய்யடுவார்கள். 12 மணி நேரம் ஷிப்ட் முறையில் பணிபுரிய வேண்டும். இரவு மற்றும் பகல் ஷிப்ட் என மாறும். இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும்.

    டிரைவர் பணியிடத்துக்கு ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம் இதற்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 23 வயதுக்கு மேல் 35 வயதுக்கு மிகாமலும், உயரம்162.5 செ.மீக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

    டிரைவிங் லைசென்ஸ், பேட்ஜ் உரிமம் பெற்று குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் எழுத்து தேர்வு, தொழில் நுட்பத்தேர்வு மனிதவள நேர்காணல், கண் பார்வை, சாலை விதிகள் சம்பந்தப்பட்ட தேர்வு ஆகியன நடத்தப்படும்.

    மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இ.எம்.டி. பிரிவினருக்கு பி.எஸ்.சி. நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.பாம், டி.எம்.எல்.டி. அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் பங்கேற்கலாம். வயது வரம்பு 20 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

    இ.எம்.டி. டிரெய்னி பிரிவுக்கு ஓராண்டு டெக்னீசியன் கோர்ஸ் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்திருக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×